அநுர குமார திஸா­நா­யக்­கவை மக்கள் தெரிவு செய்­தது ஏன்?

1948 ஆம் ஆண்டு சுதந்­திரம் பெற்­ற­தி­லி­ருந்து நாட்­டிற்கு ஏற்­பட்ட ஒட்­டு­மொத்த சேதத்தை உண­ராமல் அதி­கா­ரத்தைப் பெறு­வ­தையோ அல்­லது தக்­க­வைத்துக் கொள்­வ­தையோ நோக்­க­மாகக் கொண்ட குறு­கிய நோக்கு மற்றும் அழி­வு­க­ர­மான இன­வெறி அர­சியல் என்­ப­ன­வற்றால் வெறுப்­ப­டைந்த இந்த நாட்டு மக்கள் 2024 செப்­டம்பர் 21 சனிக்­கி­ழ­மை­யன்று நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் மார்க்சிஸ்ட் தேசிய மக்கள் கட்­சியின் (என். பி. பி) தலைவர் அனுர குமார திசா­நா­யக்­கவை ஆட்­சிக்குக் கொண்டு வந்­துள்­ளனர்.

சிரியா, லெபனானுக்கு பயணிக்க வேண்டாம்

சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடு­க­ளுக்கு மறு அறி­வித்தல் வரை பய­ணிக்க வேண்டாம் என இலங்கை பிர­ஜை­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்து வெளி­வி­வ­கார அமைச்சு இதனை தெரி­வித்­துள்­ளது.

ஹிஜாஸுக்கு எதிரான வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்புலத்தை தேடினால் பல அரசியல்வாதிகள் சிறைப்பிடிக்கப்படுவர் என அச்சமடைந்துள்ளனர்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­பு­லத்தை கண்­ட­றிந்து குற்­ற­வா­ளி­களை கைது செய்­வ­தென்­பது பெரிய விட­ய­மல்ல. அதனை செய்­வ­தற்­கான ஆர்வம் இல்­லா­மையே இங்­குள்ள பிரச்­சி­னை­யாகும். தாக்­கு­தலின் பின்­பு­லத்தை தேடி கண்டு பிடித்தால் நாட்டில் உள்ள பல அர­சி­யல்­வா­திகள் சிறையில் இருக்க வேண்டி ஏற்­படும்.