இலங்கை அரசாங்கம் வழங்கிய நன்கொடை பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.பணியக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது

பலஸ்­தீனின் காஸா பகு­தியில் இடம்­பெறும் மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­காக இலங்கை அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட நன்­கொடை நிதி பலஸ்­தீ­னிய அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடு­களின் நிவா­ரண மற்றும் பணி­ய­கத்தின் (UNRWA) வங்கிக் கணக்­கிற்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தாக இலங்­கைக்­கான ஐக்­கிய நாடு­களின் வதி­விடப் பிர­தி­நிதி மார்க்-­ஆண்ட்ரே ஃப்ரான்ச் தெரி­வித்தார்.

நோன்பினூடாக ஆன்மீக ரீதியாக பக்குவப்பட்ட இறை திருப்தி சகலருக்கும் கிட்ட வேண்டும்

இஸ்­லா­மிய மத நடை­மு­றை­க­ளின்­படி நோன்பு நோற்­பதில் அனை­வ­ருக்­கு­மி­டை­யே­யான பரஸ்­பர நட்பு, சகோ­த­ரத்­துவம், ஒற்­றுமை மற்றும் இஸ்­லா­மிய சமயக் கோட்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள உன்­னத குணங்கள் நிறை­வேறும் கால­கட்­ட­மாக இது அமை­வதால், ஆன்­மீக ரீதி­யாக பக்­கு­வப்­பட்டு இறை திருப்தி சக­ல­ருக்கும் கிட்ட வேண்டும் என இந்த நோன்புப் பொருநாள் தினத்தில் பிரார்த்­திப்­ப­தாக எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

ரமழான் நம்மிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கிறது

இஸ்­லா­மிய நாட்­காட்­டியில் ஒன்­ப­தா­வது மாத­மாகக் கரு­தப்­படும் புனித ரமழான் மாத­மா­னது, முஸ்லிம் சகோ­த­ரர்­க­ளுக்கு சிந்­தனை மற்றும் ஆன்­மீக வளர்ச்­சிக்­கான மாத­மாகக் கரு­தப்­ப­டு­கி­றது. இந்த ரமழான் மாதம், நல்­வாழ்வு மற்றும் நல்­வாழ்வின் கலங்­கரை விளக்­க­மாக இருப்­ப­தோடு நம்­மி­டையே ஒற்­றுமை மற்றும் மத நல்­லி­ணக்­கத்தை வளர்க்­கி­றது என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க விடுத்­துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.

பலஸ்­தீன மக்­களுக்கு உதவும் சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்­து­வோம்

பலஸ்­தீனின் காஸா பிராந்­தி­யத்தில் கடந்த ஆறு மாதங்­க­ளுக்கு மேலா­க அல்­லல்­­பட்டு வரும் மக்­க­ளுக்கு உதவும் வகையில் இலங்கை அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்டுள்ள காஸா சிறு­வர் நிதி­யத்­திற்கு பல்­வேறு வழி­க­ளிலும் நிதி­யு­த­விகள் வழங்­கப்­பட்டு வரு­கி­ன்­றன.