தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புள்ள இயக்கத்தை தடைசெய்க

பொலிஸ்மா அதிபரிடம் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு கோரிக்கை

0 517

(ஏ.ஆர்.ஏ. பரீல்)

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை 300 க்கும் மேற்­பட்ட உயிர்­களைப் பலி­யெ­டுத்து 500 க்கும் மேற்­பட்­ட­வர்­களை காயங்­க­ளுக்­குள்­ளாக்­கிய குண்டுத் தாக்­குதல் சூத்­தி­ர­தா­ரிகள் தொடர்­பு­பட்ட இயக்­கத்தைத் தடை­செய்­யும்­படி முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பு பாது­காப்பு செய­லா­ள­ரையும், பொலிஸ்மா அதி­ப­ரையும் கோரி­யுள்­ளது.

முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பு நேற்று பாது­காப்பு செய­லாளர் மற்றும் பொலிஸ்மா அதி­ப­ருக்கு கைய­ளித்­துள்ள மக­ஜ­ரிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மக­ஜரில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘இவ்­வா­றான மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்கள் எதிர்­கா­லத்தில் மேலும் தொட­ராமல் இருக்க இலங்­கையில் வெளி­நாட்டு உத­வி­க­ளுடன் இயங்­கி­வரும் இயக்­கங்­களைக் கண்­கா­ணிப்­ப­துடன் அவ்­வி­யக்­கங்­களின் செயற்­பா­டுகள் சந்­தே­கத்­திற்கு இட­மாக இருந்தால் அவற்­றையும் தடை­செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வேண்டிக் கொள்­கிறோம்’ எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­கான அமைப்பின் தலைவர் ஐ.என்.எம். மிப்­லாலின் கையொப்­பத்­துடன் மகஜர் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
இதே வேளை உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைக் கண்­டித்­துள்ள முஸ்லிம் உரி­மை­க­ளுக்­கான அமைப்பு மிலேச்­சத்­த­ன­மான இத்­தாக்­கு­தல்கள் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தாக்­குதல் தொடர்­பான தக­வல்­களை ஏற்­க­னவே அறிந்­தி­ருந்தும் தடுக்­கப்­ப­டா­மைக்கு அர­சாங்­கமே பொறுப்­புக்­கூற வேண்டும் எனத் தெரி­வித்­துள்­ளது.

அப்­பாவி மக்­களின் உயிர்­களைப் பலி­யெ­டுப்­பது இஸ்­லாத்­துக்கு விரோ­த­மான செய­லாகும். இலங்கை முஸ்­லிம்கள் ஒரு­போதும் அர­சாங்­கத்­துக்கு எதி­ரா­கவோ ஒரு சமூ­கத்­துக்கு எதி­ரா­கவோ ஆயுதம் ஏந்­த­வில்லை.
நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்ட சந்­தர்ப்­பங்­க­ளி­லெல்லாம் அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளார்கள்.
இவ்­வா­றான தீவி­ர­வாத செயல்கள் உரு­வா­கு­வ­தற்கு பள்­ளி­வாசல் மிம்­பர்­களில் உலமாக்கள் தங்களது இயக்க ரீதியான கருத்துகளை முன்வைப்பதும் காரணமாக அமைந்துள்ளது.

அத்தோடு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் நிலவும் முறுகல் நிலையும் சாதகமாக அமைந்துள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.