குற்றவாளிகள் அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டனரா?

உண்மையை ஆராய்ந்து வருகிறேன் என்கிறார் கபீர் ஹாசீ ம்

0 506

அண்­மையில் வனாத்­த­வில்லு சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட ஒரு­வரோ அல்­லது இரு­வரோ பின்னர் அர­சியல் பின்­ன­ணியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அழுத்­தங்கள் கார­ண­மாக விடு­தலை செய்­யப்­பட்­ட­தாக அறி­ய­மு­டி­கின்­றது. அவ்­வாறு விடு­தலை செய்­யப்­பட்­ட­வரில்
ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடை­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தலை மேற்­கொண்டு உயி­ரி­ழந்­துள்ளார் என்றும் கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் இதன் உண்­மைத்­தன்மை குறித்து இன்­னமும் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­துடன், தொடர்ச்­சி­யாக இது­பற்றி ஆராய்ந்து வரு­கின்றேன் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சாளர் கபீர் ஹாசீம் தெரி­வித்தார்.
செய்­தி­யாளர் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

மாவ­னெல்லை பகு­தியில் அண்­மையில் வன்­முறை சம்­ப­வ­மொன்று பதி­வா­கி­யி­ருந்­தது. அதன் பார­தூ­ரத்­தன்­மையை அறிந்­து­கொண்டு, அந்த விடயம் குறித்து விரி­வான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு உரிய பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யி­ருந்தேன். அத்­தோடு அந்த விசா­ர­ணை­க­ளுக்கு எம்­மு­டைய முழு­மை­யான ஒத்­து­ழைப்­பையும் வழங்­கி­யி­ருந்தோம்.
இந்த நாட்டில் நாம­னை­வரும் ஒரு­மித்து வாழ்­வ­தற்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தக் கூடி­ய­வாறு ஒரு­சில அடிப்­ப­டை­வா­திகள் செயற்­ப­டு­கின்­றார்கள் என்­ப­தையும், அதன் பார­தூ­ரத்­தன்­மை­யையும் தெளி­வாகப் புரிந்­து­கொண்டோம். இவ்­வி­டயம் தொடர்பில் அப்­போ­தைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்­ச­ரி­டமும் கலந்­து­ரை­யாடி இருந்தேன். அத்­தோடு அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு இவ்­வி­டயம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­திய போது, உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­மாறு அவரும் கூறி­யி­ருந்தார். அதே­போன்று வனாத்­த­வில்லு பிர­தே­சத்தில் வெடி­பொ­ருட்கள் கண்­டெ­டுக்­கப்­பட்ட சம்­ப­வத்­திலும் அது குறித்த விசா­ர­ணை­க­ளுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருந்தோம். இந்­நி­லையில் வனாத்­த­வில்லு சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட ஒரு­வரோ அல்­லது இரு­வரோ பின்னர் அர­சியல் பின்­ன­ணியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அழுத்­தங்கள் கார­ண­மாக விடு­தலை செய்­யப்­பட்­ட­தாக அறி­ய­மு­டி­கின்­றது. அவ்­வாறு விடு­தலை செய்­யப்­பட்­ட­வரில் ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் இதன் உண்மைத்தன்மை குறித்து இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்பதுடன், தொடர்ச்சியாக இதுபற்றி ஆராய்ந்து வருகின்றேன் என்று குறிப்பிட்டார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.