மனி­தா­பி­மா­ன­மற்ற பாரிய குற்­ற­மாகும்

கொழும்பு பெரிய பள்­ளி­வாசல்

0 583

மத வழி­பா­டு­க­ளுக்கு வந்த அப்­பாவி மக்­க­ளையும் ஏனை­யோ­ரையும் இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களை எவ்­வ­கை­யிலும் அனு­ம­திக்க முடி­யாத மனி­தா­பி­மா­ன­மற்ற பாரிய குற்­ற­மாகும் என கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் தெரி­வித்­துள்­ளது.

கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் பிர­தம இமாம் மெள­லவி எம்.எஸ்.எம். தஸ்லீம் விடுத்­துள்ள அனு­தா­பச்­செய்­தி­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதில் மேலும் தெரி­விக்­கப்­ப­டுள்­ள­தா­வது,
நாட்டின் சில பிர­தே­சங்­க­ளிலும் குறிப்­பாக கத்­தோ­லிக்க தேவா­ல­யங்­க­ளிலும் ஹோட்­டல்­க­ளிலும் மத வழி­பா­டு­க­ளுக்கு வந்த அப்­பாவி மக்­க­ளையும் ஏனை­யோ­ரையும் இலக்­கு­வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களை எவ்­வ­கை­யிலும் அனு­ம­திக்க முடி­யாத மனி­தா­பி­மா­ன­மற்ற பாரிய குற்­ற­மாகும். ஒவ்­வொரு மதத்­த­வரும் சுதந்­தி­ர­மாக அவர்­களின் மதங்­களை பின்­பற்றும் உரி­மையைப் பெற்­றுள்­ளனர். அதை­போன்று மாற்று மதங்­க­ளையோ மதங்­களை பின்­பற்­று­ப­வர்­க­ளையோ மதத்­த­லங்­க­ளையோ தாக்கும் உரிமை எவ­ருக்கும் கிடை­யாது. அவ்­வாறு நடந்­து­கொள்வோர் சரி­யாக இனம் காணப்­பட்டு அதி­க­பட்ச தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்டும்.

அத்­துடன் தாக்­கு­தல்­க­ளுக்கு உட்­பட்டு மர­ணித்­த­வர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு எமது ஆழ்ந்த கவ­லையை தெரி­வித்­துக்­கொள்­கின்றோம். தாக்­கு­தலில் காய­ம­டைந்த உள்­நாட்டு, வெளி­நாட்டு மக்கள் விரைவில் குண­ம­டைய பிரார்த்­திப்­ப­துடன் அவர்­க­ளுக்கும் எமது ஆழ்ந்த அனு­தா­பங்­களைத் தெரி­வித்­துக்­கொள்­கின்றோம்.

எனவே நாட்டில் அமை­தி­காத்து சகல இன மக்­க­ளோடும் சமா­தா­ன­மாக வாழ்ந்து நாட்டின் சட்­ட­திட்­டங்­களை மதித்து நடக்­கு­மாறு சகல மக்­க­ளையும் வேண்­டிக்­கொள்­வ­துடன் அநா­வ­சிய வதந்­தி­களை பரப்­பு­வ­தி­லி­ருந்து முற்­றாக தவிர்ந்து சகல இன மக்­க­ளோடும் நல்­லி­ணக்­கத்தை பேணு­மாறும் வேண்­டிக்­கொள்­கின்றோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.