ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு உயர் தர வச­தி­களை வழங்­க வேண்­டும்

சவூதி அதிகாரிகளிடம் மன்னர் சல்மான் வலியுறுத்து

0 109

இம்­முறை ஹஜ் யாத்­தி­ரைக்­காக வருகை தரும் யாத்­தி­ரி­கர்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து வச­தி­களை உய­ரிய தரத்தில் வழங்­கு­வதை உறுதி செய்­யு­மாறு இரு புனித தலங்­களின் பாது­கா­­­வ­லரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

ஹஜ் யாத்திரிகர்களுக்கு அவர்களின் கிரி­யைகளை எளிதாகவும் வசதியாகவும் செய்ய உதவும் வகையில் சிறந்த வசதிகளையும் சிறந்த சேவைகளையும் வழங்க வேண்டியதன் அவசியத்தை மன்னர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

நேற்று முன்­தினம் ஜித்­தாவில் நடை­பெற்ற அமைச்­ச­ரவையின் வாராந்த அமர்வுக்கு தலைமை தாங்கிய மன்னர், இந்த வருடம் யாத்திரை செய்ய உலகம் முழுவதிலுமிருந்து சவூதி அரே­பி­யா­­வுக்கு வருகை தரு­ம் யாத்திரிகர்களை வரவேற்றார். மக்­கா மற்றும் மதீ­னா புனித தலங்­க­ளுக்­கு சேவை செய்வது, அங்கு வருகை தரும் யாத்­தி­ரி­­கர்­களை நலன்­க­ளைக் கவ­னிப்­ப­து மற்றும் அவர்களின் வசதியை உறுதி செய்வது ஆகியவை சவூ­தி­யின் முன்னுரிமைக்கு­ரிய பணிகள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா, அரபா மற்றும் முஸ்தலிஃபா போன்ற புனிதத் தலங்களில் உள்ள யாத்திரிகர்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் சிறந்த சேவைகளை தொடர்ந்து வழங்குமாறு அரசாங்கத்தின் ஹஜ் திட்டங்களை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள சவூதி அதிகாரிகளுக்கு மன்னர் சல்மான் அறிவுறுத்தினார். இந்த மகத்தான மற்றும் புனிதமான பணியை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் வெற்றியைத் தர வேண்டும் என்றும் அவர் இ­தன்­போது பிரார்த்தனை செய்தார்.

இவ்­வருட ஹஜ் யாத்­தி­ரைக்­கா­க உலகின் பல நாடு­களில் இருந்தும் சவூ­தி அரே­பி­யா­வுக்கு யாத்­தி­ரி­கர்கள் வருகை தர ஆரம்­பித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.