ஜனாதிபதி மைத்திரி – கோத்தா கொலை சதி விவகாரம்: பொலிஸ்மா அதிபர் பூஜித்தின் குரல் மாதிரிகளும் பெறப்பட்டன
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக் ஷ, சி.சி.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பிலான விசாரணைகளின் ஓர் அங்கமாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் நேற்று அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தினால் குரல் மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்டது. கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவிடம் கடந்த வாரம் சி.ஐ.டி. பெற்றுக்கொண்ட விஷேட உத்தரவொன்றுக்கமைவாக இவ்வாறு நேற்று இந்தக் குரல் மாதிரி…