பௌத்த புரா­தன சின்­னங்­களை மதிப்­பது தொடர்பில் பள்­ளிகள், பாட­சா­லை­களில் அறி­வு­றுத்த வேண்டும்

முஸ்லிம் மாண­வர்கள், இளை­ஞர்கள் பௌத்த புரா­தன முக்­கி­யத்­துவம் வாய்ந்த தூபி­களில் ஏறுதல் மற்றும் புகைப்­ப­டங்­களை எடுப்­பது  தொடர்­பாக  இரு சம்­ப­வங்கள் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளன. முஸ்லிம் சமயம் அடுத்த சம­யத்தை  மதித்து பேணி நடக்­கின்ற மார்க்­க­மாகும்.  நாங்கள் அடுத்த மக்­களின் கலா­சாரப் பண்­பு­க­ளையும் அடை­யா­ளங்­க­ளையும் அறிந்து நடந்­து­கொள்ள வேண்டும்.  இது தொடர்­பாக பள்­ளி­வா­சல்­க­ளிலும் முஸ்லிம் பாட­சா­லை­க­ளிலும் அரபுக் கல்­லூ­ரி­க­ளிலும் விழிப்­பு­ணர்­வூட்­டுதல் வேண்டும். எனினும் இவை திட்­ட­மி­டப்­பட்டு…

காஷ்மீரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மோதலில் 9 பேர் உயிரிழப்பு

இந்­திய கட்­டுப்­பாட்டு காஷ்­மீரில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டு மோதலில் மூன்று கிளர்ச்சிப் படை­யினர், நான்கு இந்­திய இரா­ணு­வத்­தினர் மற்றும் பொலிஸ் உத்­தி­யோத்தர் ஒருவர் உட்­பட குறைந்­தது 9 பேர் பலி­யா­கினர். பாகிஸ்­தா­னுடன் மோதல்கள் இடம்­பெ­று­மென்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள 42 இந்­தியப் பாது­காப்புப் படை­யினர் உயி­ரி­ழக்கக் கார­ண­மாக அமைந்த தற்­கொலைத் தாக்­குதல் இடம்­பெற்று சில நாட்­களின் பின்னர் கடந்த திங்­கட்­கி­ழமை புல்­வாமா மாவட்­டத்­தி­லுள்ள பிங்க்லான் கிரா­மத்தில் இத்­தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ளது.…

பீடி இலை, மிளகு இறக்­கு­மதி, ஏற்­று­ம­தி­யூ­டாக பாரிய வரி மோசடி: கைதான பிர­தான சந்­தேக நப­ருக்கு 25ஆம் திகதி வரை விளக்­க­ம­றியல்

சுமார் 5 கோடியே 70 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 12 தொன் பீடி இலையை நாட்­டுக்குக் கொண்­டு­வந்து நாலரை கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான  வரி­ மோ­சடி செய்த குற்­றச்­சாட்டின் பேரில் கைது  செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்ட நபரை, பிணையை இரத்துச் செய்து எதிர்­வரும் 25 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதி­மன்றம் நேற்று முன்­தினம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. அத்­துடன் வியட்நாம் மற்றும் பிரே­சிலில் இருந்து 1445 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான கறுப்பு மிள­கினை இறக்­கு­மதி செய்து, இலங்கை -– இந்­திய வர்த்­தக உடன்­ப­டிக்கை பிர­காரம்…

இந்தியா தாக்கினால் பதிலடி வழங்குவோம்

இந்­தியா எங்­களைத் தாக்­கினால், நாங்­களும் பதி­லடி கொடுப்போம். காஷ்மீர், புல்­வாமா தாக்­குதல் குறித்து எந்­த­வி­த­மான உறு­தி­யான ஆதா­ரங்­களும் இன்றி இந்­திய அரசு எங்கள் மீது  குற்றம் சாட்­டு­கி­றது.  இது குறித்து இந்­திய அரசு தெளி­வான, உறு­தி­யான ஆதா­ரங்­களை வழங்­கினால் நாங்கள் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தயா­ரா­க­வுள்ளோம் என பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் தெரி­வித்­துள்ளார்.  ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்­வாமா மாவட்­டத்தில் கடந்த வியா­ழக்­கி­ழமை ஜெய்ஷ் இ முக­மது தீவி­ர­வாத அமைப்பின் உறுப்­பி­னர்கள், இந்­திய…