ஒரே வகுப்பைச் சேர்ந்த 18 மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர் கைது

மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள பூநொச்­சி­முனை அல் இக்றா வித்­தி­யா­ல­யத்தில் ஆசி­ரியர் ஒரு­வ­ரினால் தாக்­கப்­பட்ட மாண­வர்கள் 18 பேர் காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் நேற்று அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக பொலிசார் தெரி­வித்­தனர். மட்­டக்­க­ளப்பு கல்வி வவ­ல­யத்தின் காத்­தான்­குடி கல்விக் கோட்­டத்­தி­லுள்ள  பூநொச்­சி­முனை அல் –இக்றா வித்­தி­யா­ல­யத்தில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்­கின்ற மாண­வர்கள் மீது வகுப்­பா­சி­ரியர் மிகக் கடு­மை­யாக தாக்­குதல் நடாத்­தி­யுள்ளார். குறித்த ஆசி­ரியர் கையி­னாலும்…

சிலாவத்துறை மக்களுக்கு மன்னார் பிரதேச சபை ஆதரவு

முசலி பிர­தேச சபைக்­குட்­பட்ட சிலா­வத்­து­றையில் கடற்­ப­டை­யி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள  காணியை விடு­வித்து மக்­களின் பாவ­னைக்கு கைய­ளிக்­கு­மாறு முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் போராட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக மன்னார் பிர­தேச சபையில் நேற்று தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. குறித்த போராட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என சபையின் தவி­சாளர் முஜாஹிர்  முன்­வைத்த யோச­னைக்கு  21 சபை உறுப்­பி­னர்­களும் ஏக­ம­ன­தாக அங்­கீ­காரம் வழங்­கி­ய­துடன் இத் தீர்­மா­னத்தை உரிய அதி­கா­ரி­களின் கவ­னத்­திற்கு சமர்ப்­பிப்­பது எனவும்…

திண்மக்கழிவு திட்டத்தை நிறுத்த ஒத்துழையுங்கள்

அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள புத்­தளம் அறு­வாக்­காடு திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவத் திட்­டத்தை நிறுத்­து­வ­தற்கு ஒத்­து­ழைக்­கு­மாறு கோரி கிளீன் புத்­தளம் அமைப்பு மற்றும் முஸ்லிம் உரி­மை­களைப் பாது­காக்கும் அமைப்பு என்­பன எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிடம் நேற்று மக­ஜ­ரொன்­றினைக் கைய­ளித்­துள்­ளன. அறு­வாக்­காடு திண்­மக்­க­ழிவு முகா­மைத்­துவ திட்­டத்தின் கீழ் புத்­த­ளத்தில் கொழும்பு குப்­பைகள் கொட்­டப்­ப­டு­வதால் சூழல் பாதிப்­ப­டை­வ­துடன் அப்­ப­குதி மக்கள் பல்­வேறு சுகா­தார பிரச்­சி­னைகள் எதிர்­நோக்­கு­வார்கள்…

2018 இல் அதிகூடிய சிறுவர்கள் சிரியாவிலேயே உயிரிழந்துள்ளனர்

சிரி­யாவின் உள்­நாட்டு யுத்தம் தொடங்கி ஒன்­பது ஆண்டு நிறை­வ­டைந்­துள்ள நிலையில் 2018 இல் அதி கூடிய சிறு­வர்கள் சிரி­யா­வி­லேயே உயி­ரி­ழந்­துள்­ளனர் என யுனிசெப் அமைப்பு கடந்த திங்­கட்­கி­ழமை அறி­வித்­தது. எட்டு ஆண்­டு­களை விடவும் கடந்த ஆண்­டி­லேயே சிறு­வர்கள் நாட்டின் பல பாகங்­க­ளிலும் ஆபத்­துக்­களை எதிர்­நோக்­கி­ய­தாக யுனிசெப் அமைப்பின் பெண் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் ஹென்­ரி­யென்டா போ அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார். 2018 ஆம் ஆண்டில் மாத்­திரம் மோதல்­களின் போது 1,106 சிறு­வர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இந்த…