மாசற்ற புத்தளம்: தொடரும் மக்கள் போராட்டம்
மனித வாழ்வின் ஆதாரம் இயற்கைதான். நாம் தாயின் வயிற்றில் இருக்கும்போதே இயற்கையின் தேவை ஆரம்பமாகி விடுகின்றது. சுத்தமான காற்று, சுத்தமான நீர், சுத்தமான சுற்றாடல். நிலமும் நீரும் வனமும் வன ஜீவராசிகளும் காற்றும் சுத்தமான வளிமண்டலமும் இன்றி மனித வாழ்வு சாத்தியமில்லை.