நல்லாட்சி அரசாங்கத்தில் நடந்த ஊழல்களை ஆராய ஆணைக்குழு
கடந்த 2015 ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் மோசடிக் குற்றங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையில் மேலும் நான்கு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் பாரிய நிதி மோசடிகள் மற்றும் பாரிய குற்றங்கள் இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மைக்காலமாக விமர்சனங்களை…