திருத்தப்படாத பிழைகள்
மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டிருக்கிறான். இருப்பினும், தவறுகள் உணரப்பட்டு திருத்தப்படுவதும், செயற்பாடுகள் நிதானத்துடனும் அலட்சியமின்றியும் முன்னெடுக்கப்படுவதும் அதற்கான மனப்பாங்கை உருவாக்கிக் கொள்வதும் முக்கியமாகும். ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், ஒருவர் கூட தங்களை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. தவறுகளை, பிழைகளை திருத்திக்கொள்ள முயல்வதில்லை.