இன்று பேசப்படும் இன நல்லிணக்கம் அன்று பொலன்னறுவை யுகத்தில் சிறப்பாக இருந்தது
இலங்கையில் இன்று பேசப்படுகின்ற சகவாழ்வு, இன நல்லிணக்கம் போன்ற அம்சங்கள் அன்று பொலன்னறுவை யுகத்தில் மிகச் சிறப்பாகக் காணப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கண்டி பேராதனை ஸ்ரீ சுபோதாராம சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தை திறந்துவைத்தபின் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது- இந்த இடத்திற்கு நான் மூன்று முறை விஜயம் செய்துள்ளேன்.
ஒவ்வொரு முறை யும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இங்கு கண்டேன். இங்கு அமைக்கப்பட்டுள்ள தர்மராஜ…