மிஹிந்தலை தாதுகோபுரத்தில் ஏறி புகைப்படம் எடுத்த இரண்டு மாணவர்கள் நேற்று கைது
மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்திலுள்ள பிரபல சைத்தியம் ஒன்றுக்கு அருகில் உள்ள புராதன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாதுகோபுரம் ஒன்றின் மேல் ஏறி புகைப்படம் எடுத்ததாக கூறப்படும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18,20 வயதுகளை உடைய - திஹாரிய பகுதியிலுள்ள இஸ்லாமிய கல்வி நிலையம் ஒன்றில் கற்கும் மூதூர் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூதூர் அப்துல் லதீப் வீதியைச் சேர்ந்த 20 வயதான ரஷீத் மொஹம்மட் ஜிப்ரியும், நெய்தல் நகர், மூதூர் - 1…