சூடானில் கல்வியியலாளர்கள், ஒலிபரப்பாளர்கள் கைது

0 618

கல்­வி­யி­ய­லா­ளர்கள், ஒலி­ப­ரப்­பா­ளர்­களைக் கொண்ட குழு­வொன்று கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று தலை­நகர் கார்ட்­டூமில் வைத்து சூடான் பாது­காப்புப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­ட­தாக சூடா­னிய ஊடக சங்கம் தெரி­வித்­துள்­ளது.

ஊடக சுதந்­தி­ரத்­திற்­காக கார்ட்­டூமில் அமைந்­துள்ள தகவல் அமைச்­சுக்கு முன்னால் எதிர்த்­த­ரப்பு சூடா­னிய தொழில்சார் நிபு­ணர்கள் அமைப்­பினால் ஆர்ப்­பாட்­டத்­திற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அது நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக இந்தக் கைது இடம்­பெற்­றுள்­ளது என அர­ச­சார்­பற்ற நிறு­வனம் ஒன்றின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒலி­ப­ரப்­பா­ளர்­க­ளான அபூ­பக்கர் ஆப்தீன், வயீர் மொஹமட் ஹுஸைன் மற்றும் அஸீஸா அப்துல் கரீம் ஆகியோர் கைது செய்­யப்­பட்­ட­வர்­களுள் உள்­ள­டங்­கு­வ­தாக அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேல­திக தக­வல்கள் எவையும் அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

அர­சாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கோரும் ஆர்ப்பா­ட்­டத்­திற்­காக ஹார்டௌம் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து புறப்­பட்­ட­போது சில கல்­வி­யி­ய­லா­ளர்­களும் கைது செய்­யப்­பட்­ட­தாக சம்­ப­வத்தை நேரில் கண்டோர் தெரி­வித்­தனர்.

இத­னி­டையே 16 கல்­வி­யி­ய­லா­ளர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக சமூக ஊடக செயற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இக் கைதுகள் தொடர்பில் சூடான் அதி­கா­ரிகள் எது­வித தக­வ­லையும் வெளி­யி­ட­வில்லை.

மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள சூடானின் பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஜனா­தி­பதி ஒமர் அல்-­பஷீர் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­விட்­ட­தாக தெரி­வித்து கடந்த டிசம்பர் மாத நடுப் பகு­தி­யி­லி­ருந்து பொது­மக்கள் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

2011 ஆம் ஆண்டு தெற்கு சூடான் உரு­வாக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து சூடான் அதன் பிரதான அந்நியச் செலாவணி வருமான வளமாக இருந்த எண்ணெய் உற்பத்தியில் சுமார் மூன்றிலொரு பகுதியை இழந்துள்ள நிலையில் அதனை மீள அடைந்து கொள்ள 40 மில்லியன் மக்களைக்கொண்ட அந்த நாடு திணறிக்கொண்டி ருக்கின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.