சூடானில் கல்வியியலாளர்கள், ஒலிபரப்பாளர்கள் கைது

கல்­வி­யி­ய­லா­ளர்கள், ஒலி­ப­ரப்­பா­ளர்­களைக் கொண்ட குழு­வொன்று கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று தலை­நகர் கார்ட்­டூமில் வைத்து சூடான் பாது­காப்புப் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­ட­தாக சூடா­னிய ஊடக சங்கம் தெரி­வித்­துள்­ளது. ஊடக சுதந்­தி­ரத்­திற்­காக கார்ட்­டூமில் அமைந்­துள்ள தகவல் அமைச்­சுக்கு முன்னால் எதிர்த்­த­ரப்பு சூடா­னிய தொழில்சார் நிபு­ணர்கள் அமைப்­பினால் ஆர்ப்­பாட்­டத்­திற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அது நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக இந்தக் கைது இடம்­பெற்­றுள்­ளது என அர­ச­சார்­பற்ற நிறு­வனம் ஒன்றின்…

ஊடகப் பணி ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

இந்த இரு­பத்­தி­யோராம் நூற்­றாண்டில் முழு உல­கையும் தன் விரல் நுனியால் ஆட்­டிப்­ப­டைக்­கி­றது ஊடகம். 19 ஆம் நூற்­றாண்டில் எழுச்­சி­யுறத் துவங்­கிய அதி­வேக தொடர்பு ஊட­கங்­களின் செயற்­பா­டுகள் 21 ஆம் நூற்­றாண்டில் பாரிய வீச்­சுடன் முன்­னே­றி­வ­ரு­கின்­றன. சமூ­கத்­திற்கு தொலை தூரத்­தி­லி­ருந்த ஊடகம் இன்று எமது வீட்டுக் கத­வு­களைத் திறந்து கொண்டு அடுக்­க­ளைக்கும் குளி­ய­ல­றைக்கும் கூட வந்­து­விட்­டது.

மீண்டும் பேசுபொருளாகும் தேசிய அரசாங்க யோசனை

தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான முயற்­சி­களை ஐக்­கிய தேசியக் கட்சி முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில், இது தொடர்­பான யோசனை கடந்த வியாழக்கிழமை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­ட­விருந்தது. எனினும் பல கட்சிகளின் எதிர்ப்புக் காரணமாக குறித்த தினம் பிரேரணை முன்வைக்கப்படவில்லை. இந் நிலையில் மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதி இதே பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தேசிய அர­சாங்கம் அமைக்கும் யோச­னையில் பிர­தான பேசு­பொ­ரு­ளா­கி­யி­ருப்­பது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸாகும்.…

குப்பைகளை கொட்டும் திட்டம்: கறுப்புக்கொடியேற்றி புத்தளத்தில் எதிர்ப்பு

புத்­தளம் அறு­வக்­காட்டில் குப்­பை­களை கொட்டும் திட்­டத்­திற்கு எதி­ராக நேற்று புதன்­கி­ழமை புத்­த­ளத்தில் வாழும் மூவின மக்­களும் கறுப்புக் கொடி­களை பறக்­க­விட்டு தமது எதிர்ப்பை வெளி­யிட்­டனர். எதிர்­வரும் மார்ச் மாதம் முதல் புத்­தளம் அறு­வக்­காட்டில் குப்­பை­களை கொட்டும் திட்டம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருப்­பதால், அதனை எதிர்த்தே நேற்­றைய தினம் புத்­த­ளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இதன் அடிப்­ப­டையில், நேற்­றைய தினம் புத்­தளம், கரைத்­தீவு, கற்­பிட்டி மற்றும் முந்தல் ஆகிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள…