குப்பைகளை கொட்டும் திட்டம்: கறுப்புக்கொடியேற்றி புத்தளத்தில் எதிர்ப்பு

0 603

புத்­தளம் அறு­வக்­காட்டில் குப்­பை­களை கொட்டும் திட்­டத்­திற்கு எதி­ராக நேற்று புதன்­கி­ழமை புத்­த­ளத்தில் வாழும் மூவின மக்­களும் கறுப்புக் கொடி­களை பறக்­க­விட்டு தமது எதிர்ப்பை வெளி­யிட்­டனர்.

எதிர்­வரும் மார்ச் மாதம் முதல் புத்­தளம் அறு­வக்­காட்டில் குப்­பை­களை கொட்டும் திட்டம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருப்­பதால், அதனை எதிர்த்தே நேற்­றைய தினம் புத்­த­ளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இதன் அடிப்­ப­டையில், நேற்­றைய தினம் புத்­தளம், கரைத்­தீவு, கற்­பிட்டி மற்றும் முந்தல் ஆகிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள பாலர் பாட­சாலை, அரச மற்றும் தனியார் பாட­சாலை மாண­வர்­களும், ஆசி­ரி­யர்­களும், அரச அலு­வ­ல­கங்­களில் கட­மை­பு­ரியும் அரச உத்­தி­யோ­கத்­தர்­களும் கறுப்பு பட்­டியை அணிந்­து­கொண்டு பாட­சாலை மற்றும் அலு­வ­லகங்­க­ளுக்குச் சென்­றனர்.

அத்­தோடு, புத்­தளம் நகர் மற்றும் ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் மூவின மக்­களும் தமது வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள், வாக­னங்கள் மற்றும் மதஸ்­த­லங்கள் என்­ப­ன­வற்றில் குப்­பைக்கு எதி­ரான பதா­கைகள் தொங்­க­விட்டு கறுப்புக் கொடி­களை பறக்­க­விட்டு தமது எதிர்ப்­பையும் தெரி­வித்­தனர்.

புத்­தளம் அறு­வக்­காட்டில் குப்பை கொட்டும் திட்­டத்­திற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் நேற்று முதல் மூன்று நாட்­களை புத்­த­ளத்தின் கறுப்பு நாட்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வ­தாக புத்­தளம் மாவட்ட சர்­வ­மத செயற்­குழு அறி­வித்­துள்­ளது.

புத்­தளம் பெளத்த மத்­திய நிலையம் , இந்து மகா­சபை, கிறிஸ்­தவ சபை, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் புத்­தளம் கிளை, புத்­தளம் பெரிய பள்­ளி­வாசல் ஆகி­யன இணைந்தே புதன்­கி­ழமை (13), வியா­ழக்­கி­ழமை (14) மற்றும் வெள்­ளிக்­கி­ழமை  (15) ஆகிய நாட்­களை கறுப்பு நாட்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளன. அத்­துடன், இன்று வியா­ழக்­கி­ழமை (14) புத்­த­ளத்­தி­லுள்ள அனைத்து முஸ்லிம் மக்­களும் புனித நோன்பு நோற்­கு­மாறும், அனைத்து பள்­ளி­வா­சல்கள், அரபு மத்­ர­ஸாக்கள் என்­ப­ன­வற்றில் விஷேட துஆ பிரார்த்­த­னை­களில் ஈடு­ப­டு­மாறும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் புத்­தளம் கிளைத் தலைவர் அஷ்ஷெய்க் அப்­துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் கடிதம் மூலம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். இதே­வேளை, நாளை வெள்ளிக்கிழமை புத்தளத்தில் முழுநாள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன், ஜும்ஆ தொழுகையின் பின்னர் புத்தளம் – கொழும்பு முகத்திடலில் எழுச்சிப் பேரணியொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.