அல்-அக்ஸா பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது திடீர் தாக்குதல்

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலம் பகுதியில் அமைந்துள்ள அல் அக்ஸா பள்ளிவாசலினுள் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது இஸ்ரேலியப் படையினர் கடந்த செவ்வாய்க் கிழமை மாலை தாக்குதல் நடத்தினர் இதன்போது பலர் காயமடைந்த அதேவேளை ஏனையோரை இஸ்ரேல் படையினர் கைது செய்தனர் என சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர். சர்ச்சைக்குரியதாகக் காணப்படும் பள்ளிவாசலின் அல்ரஹ்மா நுழைவாயிலுக்கு அருகே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சம்பவத்தோடு தொடர்புடைய இஸ்ரேலியப் படையினரின் எண்ணிக்கையினை தெரிவிக்கவில்லை. காயமடைந்த நபர்…

பாராளுமன்ற உறுப்பினர்களில் கொக்கைன் பாவிப்பது யார்?

கொக்கைன் பாவிக்கும் 24 பாராளுமன்ற உறுப்பினர்களும் யார்? அவர்களின் பெயர்ப் பட்டியலை உடனடியாக சபையில் முன்வைத்து மக்களுக்கும் அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி சபையில் கேள்வி எழுப்பியது. இராஜாங்க அமைச்சர் ரஞ்சனிடம் இருந்தே விசாரணையை ஆரம்பித்து உண்மைகளை கண்டறிய வேண்டும் அலல்து பாராளுமன்றத்தின் சகல உறுப்பினர்களையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன,…

காஷ்மீர்: புல்வாமா உயிரிழப்புக்கள் நமக்கு உணர்த்துவது என்ன?

இந்­தி­யாவின் நிர்­வா­கத்தில் உள்ள காஷ்மீர் பகு­திக்கு 2018ஆம் ஆண்டு மிக மோச­மா­ன­தா­கவே இருந்­தது. ஒரு பக்கம் இந்த தசாப்­தத்தில் அதி­க­பட்ச அளவில் உயிர்ப்­ப­லிகள் நடந்­தி­ருப்­பது - அங்கு நிலவும் மோதல்­களின் புதிய பரி­மா­ணத்தைக் காட்­டு­வ­தாக இருந்­தது. அடுத்­தது அங்கே நிலவும் அர­சியல் ஸ்திர­மற்ற நிலை. கடந்­தாண்டில் காஷ்மீர் பள்­ளத்­தாக்குப் பகு­தியில் தீவி­ர­வா­திகள், இராணு­வத்­தினர் மற்றும் பொது மக்கள் என்று மொத்தம் 361 பேர் கொல்­லப்­பட்­டி­ருப்­ப­தாக இந்­திய உள்­துறை அமைச்சின் ஓர் அறிக்கை தெரி­விக்­கி­றது. ஆனால்…

பங்களாதேஷ் தீ விபத்தில் 60 இற்கும் மேற்பட்டோர் பலி

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று புதன்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டு 60 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். டாக்காவின் பழைய பகுதியிலுள்ள சவ்க்பஜார்  அடுக்குமாடி குடியிருப்பில் இரசாயனக் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அதனை தொடர்ந்து சூழ உள்ள கட்டிடங்களுக்கும்  தீ பரவியுள்ளது. மேலும் இத்தீ விபத்தில் 69 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என செய்தி நிறுவனங்களுக்கு தீ கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர். இறப்பு…