எட்வர்ட் ஸெய்த்தும் பலஸ்­தீன விடுதலை போராட்டமும்

0 146

மேமன் கவி

இன்று உலக மட்­டத்தில் பேசப்­படும் விடயம் பலஸ்­தீன விடு­தலை போரட்­டமும் அதன் துயர நிலை­யும்தான்.

இஸ்ரேல் சியோ­னிச எனும் தீய- ஆக்­கி­ர­மிப்பு நாச­கார சக்தி பலஸ்­தீனம் எனும் நாட்டின் மீதும், அதன் மக்­கள்­ மீதும் கட்­ட­விழ்த்து இருக்கும் அரா­ஜ­கத்தின் வர­லாறு நீண்­டது.

இதன் கார­ண­மாகப் பலஸ்­தீன போரட்­டத்தை பற்றி உலக அறிவு ஜீவி­க­ளாலும் பல்­வேறு இயக்­கங்­க­ளாலும், காலம் கால­மாகப் பேசப்­பட்­டுள்­ளது. சமீப கால­மாக இஸ்ரேல் பலஸ்­தீன மண்ணில் நிகழ்த்தும் கொடூ­ரத்­தை­க் கண்டு அதற்கு எதி­ரான உலக அள­வான குரல் வலுப் பெற்று வரு­கி­றது. அதற்குச் சிறந்த உதா­ரணம் இஸ்ரேல் நிகழ்த்தும் பலஸ்­தீன் மீதான அரா­ஜ­கத்­திற்கு மட்­டு­மல்­லாமல் உலக அளவில் நடக்­கின்ற அநி­யா­யத்­திற்கு துணை போகும் அமெ­ரிக்க மண்­ணி­லேயே அதன் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பலஸ்­தீனத்­திற்கு ஆத­ர­வாக எழுப்பி இருக்கும் குரல்தான். அக்­கு­ர­லுடன் இஸ்ரேல் அர­சாங்­கத்­திற்கும், சியோ­னி­சத்­திற்கும் எதி­ராக இஸ்ரேல் மண்­ணிலும் உலக அள­விலும் தோன்­றிய இயக்­கங்­களின் குரல்­க­ளையும் இணைத்துப் பார்க்­கலாம்.

பலஸ்­தீனுக்கு ஆத­ர­வாக ஆரம்பம் தொடக்கம் உலக அள­வி­லான அறி­வு­ஜீ­விகள் குரல் எழுப்பி வந்­துள்­ளார்கள். அவர்­களில் சிறந்த உதா­ர­ண­மா­கவும், முன்­னோ­டி­யாக திகழ்ந்­த­வர்தான் எட்வர்ட் ஸெய்த்.

எட்வர்ட் ஸெய்த்
ஜெரூ­ச­லமில் 1935 ஆம் ஆண்டு பிறந்த ஒரு கிறிஸ்­துவர். பின்­கா­ல­னிய கோட்­பாட்டின் முதன்­மை­யா­னவர். மேலை நாடு­களில் உயர் கல்வி மேற்­கொண்­டவர். ஆங்­கிலம் பிரெஞ்சு, அரபு என பல மொழி­களில் தேர்ச்சி பெற்­றவர். 1948 இல் இஸ்ரேல் உரு­வான பொழுது ஏற்­பட்ட நெருக்­க­டியால் பலஸ்­தீனத்­தி­லி­ருந்து புலம்­பெ­யர்ந்­தவர்.

மேலைய நாட்டில் வாழ்ந்த பொழுது, மேற்­கு­லகு கீழைத்­தேய சமூ­கத்­தினர் பற்றி கொண்­டி­ருந்த மோச­மான கருத்­து­களை அறிந்து கொண்டு அவற்றை இனங்­காட்டும் வகை­யிலும், மேற்­கு­லகு கீழைத்­தே­யினர் பற்­றி கொண்­டி­ருந்த கருத்­து­களை விமர்­சித்த இவ­ரது ‘ஓரி­யண்­ட­லிசம் (Orientalism’ எனும் நூல், உலகம் இவரை திருப்பி பார்க்க வைத்த நூலாகும்.

இஸ்ரேல் என்ற சியோ­னிச சக்தி தோற்­றத்தின் ஆரம்ப காலத்­திலே அச்­சக்­திக்கு எதி­ராக பல கருத்­து­களை அறி­வு­ஜீ­விகள் முன்வைத்து வந்­துள்­ளார்கள். அவர்­களில் முன்­னோ­டி­யாக இயங்­கி­யவர் எட்வர்ட் ஸெய்த்.

ஸெய்த் பின் கால­னிய கோட்­பாட்டில் கீழைத்­தே­யத்­தை­யிட்டு மேற்­கு­லகின் பார்வை பற்­றி அரபு உல­கத்தை பற்­றியும், பலஸ்­தீனத்தை பற்­றியும், இஸ்­லாத்தை பற்­றியும் ஆழ­மா­கவும் அக­ல­மா­கவும் முன் வைத்தார்.

இதை­பற்றி “எட்வர்ட் ெஸய்த்தும் கீழைத்­தேய இயலும்” (2009) என்ற நூலில் எச்.பீர் முஹம்­மது, எட்வர்ட் ெஸய்த்தின் பின் கால­னி­யத்தை பற்றி பேச­வரும் பொழுது,

“கீழைச் சமூ­கத்தின் தொன்­மங்கள், வர­லா­றுகள், நாக­ரீகங்கள், புரா­ணங்கள், புனிதப் பிர­திகள், ஆவ­ணங்கள் போன்­ற­வற்றைப் போலி­யா­ன­வை­யாக மேற்கு பார்த்து வந்­தி­ருக்­கி­றது, உலக நாக­ரீகத்தைக் கண்­ட­றிந்­ததும் அதைப் பரப்­பி­யது மேற்­குதான் என்­ப­தான புனைவை அது உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. கீழை­த்ேதயச் சமூ­கத்தின், குறிப்­பாக மத்­திய கிழக்கு அரபுச் சமூ­கத்தின் வர­லாற்று ஆவ­ணங்கள் எல்லாம் பொருட்­ப­டுத்தத் தகா­தவை என்று மேற்கு காலம் கால­மாகக் கருதி வந்­தி­ருக்­கி­றது. இதன் மூலம் மேற்கின் பிர­தி­யா­திக்கம் தெளி­வாக வெளிப்­ப­டு­கி­றது.” (பக்­கம்-11)

மேற்­படி மேற்கின் கருத்­தையும், கீழைத்­தே­சத்தை பற்­றியும் அர­பு­லகைப் பற்­றியும் ஸெய்த் செய்த ஆய்­வுகள் மூலம், நில­விய மேற்கின் பிர­தி­யா­திக்­கத்தை உடைத்­த­தோடு உலகம் பலஸ்­தீனத்தின் இருப்பின் நியாயத்­தையும் புரிந்து கொண்­ட­தோடு, பலஸ்­தீனத்­திற்கு ஆதா­ர­வான ெஸய்த்தீன் குரலின் பலமும் புரிந்­தது.

ஸெய்த் பலஸ்­தீன தேசிய கவுன்சில், அதன் பிறகு பலஸ்­தீன விடு­தலை இயக்கம் போன்­ற­வற்றில் இணைந்து செயல்­பட்டார்.
ஆனால், எட்வர்ட் ஸெய்த் நோர்வே தலை­நகர் ஓஸ்­லோவில் உரு­வான இஸ்ரேல் பலஸ்­தீன ஒப்­பந்­தத்தை(1993) கடு­மை­யாக விமர்­சித்தார்.

உயர்­கல்­விக்­காக மேற்­கு­லக சூழலில் ெஸய்த் வசித்த போது அவர்­க­ளுடன் பலஸ்­தீன பிரச்­சி­னை­ பற்­றி விவா­தித்து இருக்­கிறார், அந்த அனு­ப­வங்­களை கொண்டு இவர் வெளி­யிட்ட The Question of Palestine (1972) எனும் நூல் முக்­கி­ய­மான ஒரு நூலாகும்.

இந்த நூலை பற்றி உலகில் பல்­வேறு கருத்­துகள் முன் வைக்­கப்­பட்­டன. அசல் மற்றும் ஆழ­மான ஆத்­தி­ர­மூட்டும் புத்­தகம் என்றும், பலஸ்­தீனத்தை ஒரு தீவிர விவா­தத்தின் பொரு­ளாக மாற்­றிய முதல் புத்­தகம் என்றும், “அடை­யாளம் மற்றும் நீதிக்­கான ஒரு கட்­டாய அழைப்பு” -என அந்­தோணி லூயிஸ் போன்றோர் முன்வைத்த கருத்­து­களும், நியூயார்க் டைம்ஸ் போன்­றவை இப்­புத்­த­கத்தை பற்றி முன்வைத்த விமர்­சன கருத்­துகள், ெஸய்த் பலஸ்­தீன பிரச்­சினை பற்றி சொன்ன சிந்­த­னை­களின் கன­தி­யினை எமக்கு எடுத்து காட்­டின.
பலஸ்­தீனை பற்­றிய அவ­ரது அடுத்த நூலான The Last Sky Palestine (1992) பற்றி பின்­வ­ரு­மாறு கூறப்­பட்­டது. “பலஸ்­தீனிய வாழ்க்கை மற்றும் அடை­யா­ளத்தின் ஒரு ஆழ­மான உரு­வப்­படம், அது எட்வர்ட் ெஸய்த்தின் உரிமை கோர முடி­யாத கடந்த காலத்தின் ஒரு ஆய்வு மற்றும் நாடு­க­டத்­தப்­பட்­ட­வர்­களின் வாழ்க்­கைக்கு ஒரு சாட்சி” அடுத்து இந்த நூலை பற்றி ெஸய்தின் மாணவர் கௌரி விஸ்­வ­நாதன் ,

“ பலஸ்­தீனி­யர்கள் மீது இஸ்­ரே­லியர் ஏவி­விட்ட வன்­மு­றையைக் கண்டு கொதிப்­ப­டைந்து போயி­ருந்த ஸெய்த், After the Last sky; Palestinian Lives என்ற நூலில், உள்­ளத்தை உருக்கும் புகைப்­ப­டங்­க­ளையும், தக­வல்­க­ளையும் தொகுத்­தி­ருந்தார். அந்த நூலை வெளி­யிட்­டதே, அவ­ருக்குப் பெரிய மன அமைதி தரு­வதாய் இருந்­தது. ஒரு புதிய சாந்தம் அவ­ரிடம் குடி­கொண்­டது. இஸ்­ரே­லிய அரசின் அரா­ஜ­கத்­தினால், நாடு கடத்­தப்­பட்டு, முடி­விலா துயரை அனு­ப­வித்து வரும் தமது மக்­களை வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் கொடு­மை­யி­லி­ருந்து ஒரு­வித விடு­தலை கிடைத்­தவர் போல் காணப்­பட்டார். பலஸ்­தீனி­யரின் அடை­யா­ளத்­தையும், வர­லாற்­றையும் அழித்­தொ­ழிக்கும் இஸ்­ரேலின் முயற்­சி­களை மீறி, அவர்கள் வாழ்ந்து கொண்­டி­ருப்­பதை வார்த்­தை­க­ளிலும், படங்­க­ளிலும் பதி­வு­செய்­ததன் மூலம், அவற்றை அவர் வாழ்ந்து பார்த்தார்”.. என்றார்

ஸெய்த் பலஸ்­தீன தேசிய கவுன்சில், அதன் பிறகு பலஸ்­தீன விடு­தலை இயக்கம் போன்­ற­வற்றில் இணைந்து செயல்­பட்டார்.

ஆனால், எட்வர்ட் ஸெய்த் நோர்வே தலை­நகர் ஓஸ்­லோவில் உரு­வான இஸ்ரேல் பலஸ்­தீன ஒப்­பந்­தத்தை(1993) கடு­மை­யாக விமர்­சித்தார்.

அது பலஸ்தீன் தன் சுயத்தை மேலும் இழக்கச் செய்­வ­தற்­கான அறி­குறி என்றார். மேலும், காஸா­விலும் மேற்­குக்­கரைப் பகு­தி­யிலும் இருந்து இஸ்­ரே­லியப் படைகள் படிப்­ப­டி­யாக விலக்கிக் கொள்­ளப்­படும் என்று ஒப்­பந்­தத்தில் கூறப்­பட்­டது. ஆனால், கடை­சி­வரை அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இந்த விட­யங்­களை தீர்க்கதரி­ச­ன­மாக தெரிந்து கொண்­டதால் ஸெய்த் அந்த ஒப்­பந்­தந்தை கடு­மை­யாக விமர்­சித்தார்.

ஸெய்த் அந்த ஒப்­பந்தத்தை கடு­மை­யாக விமர்­சித்­ததிற்கும், தீர்க்கதரி­ச­ன­மாக மேற்­ப­டி­யான எதிர்வு கூறலும், இஸ்ரேல் மீதான அவ­ரது நம்­பிக்­கை­யின்­மையை எடுத்துக் காட்­டி­யது.

பலஸ்­தீனத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் அழிப்­ப­தற்­கான வர­லாற்றின் நீட்­சி­யாக, இஸ்ரேல் இரண்டாம் உல­கப்­போ­ருக்கு பின் சுமார் அரை நூற்­றாண்­டுக்கு மேலாக ஈடு­பட்டு வரு­கி­றது. அதற்கு துணை போகும் நாடு­களை ஸெய்த் இனங்­காட்­டி­யுள்ளார்.

அதில் அமெ­ரிக்க இஸ்ரேல் கூட்டு சமீப கால­மாக மிகத் தீவி­ர­மாக இருக்­கி­றது. அதை அன்று தொடக்கம் ஸெய்த் அடை­யா­ளப்­ப­டுத்தி அதிலும் குறிப்­பாக அமெ­ரிக்கா தொடர்ச்­சி­யாக உலகின் முஸ்­லிம்­களை அழிப்­பதில் உலக அர­சி­யலில் முன் நிற்­ப­தோடு, இன்­று­வரை முஸ்­லிம்­களை அழிக்கும் சக்­தி­க­ளுக்கு அது துணை போகும் ஒன்­றாக இருக்­கி­றது. அதிலும் குறிப்­பாக முஸ்­லிம்­களை அழிப்­பதில் அமெ­ரிக்கா யூதர்­க­ளுக்கு துணை போகி­றது. அதற்கு வர­லாற்று ரீதி­யாக பல கார­ணங்கள் இருக்­கின்­றன என்­பதை ெஸய்த் ப­லப்­ப­டுத்­தினார்.

இன்­றைய கால­கட்­டத்­திலும் இஸ்ரேல் புரியும் அநி­யா­யத்­திற்கு அமெ­ரிக்கா துணை போய்க் கொண்டு தான் இருக்­கி­றது. இன்று இஸ்ரேல் பலஸ்­தீன் மீதான வன்­மு­றைக்கு பர­வ­லாக உலகம் பூராவும் எதிர்ப்பு இயக்கம் தோன்­றி­யி­ருப்­ப­தனால், இஸ்ரேல் பலஸ்­தீன் மீதான கட்­ட­விழ்த்­தி­ருக்கும் வன்­மு­றையை (பலஸ்­தீன குழந்­தை­க­ளையும் பெண்­களை கொல்வது, உடைமைகளை நாசமாக்குவது) கண்டிப்பதுபோல் அமெரிக்கா கபட நாடகம் நடத்துகிறது. (பிள்ளையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடுவது போல்)
இறக்கும் வரை பலஸ்­தீன போராட்டத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பிய ெஸய்த்தின் குரல் இன்றும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது.

பலஸ்­தீன் போராட்டத்திற்கான ஆதரவாகவும் இஸ்ரேல் என்ற சியோனிஸத்திற்கு எதிராகவும் ஒலித்த ெஸய்த்தின் குரல் இன்று பௌதிக ரீதியாக ஓய்ந்து போய் இருந்தாலும், அதற்காக எட்வர்ட் ஸெய்த் முன் வைத்து சென்றிருக்கும் கருத்தியல் ஆவணங்கள் வலிமைமிக்க ஆயுதங்களாக பலஸ்­தீன போராட்டத்திற்கு பயன்பட்டு கொண்டிருக்கும் என்பதுதான் நிதர்சனம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.