பாகிஸ்தானும் இந்தியாவும் நெருக்கடி நிலையை சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்
அண்மையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டிலிருந்து இரு நாடுகளும் தம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை சீனா இரு நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்தது.
பீஜிங்கில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய சீன வெளிநாட்டமைச்சர் வேங் இயி 'புதுடில்லியும் இஸ்லாமாபாத்தும் விரைவாக தமது புத்தகங்களின் பக்கங்களைப் புரட்ட வேண்டும். தற்போதைய பதற்றமான சூழலை நீண்டகால அபிவிருத்திக்கு ஏற்றவாறு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்ததாக…