கிராமத்துக்கு செல்லும் சிறிகொத்தா

0 489

2015 ஆம் ஆண்டு பத­விக்கு வந்த அர­சாங்கம் ஆரம்­பித்த அபி­வி­ருத்­தித்­திட்­டங்­களின் பயன்­களை அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்கும் வேளையில் ஐ.தே கட்­சியும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியும் இணைந்து உரு­வாக்­கி­யுள்ள புதிய ஜன­நா­யக கூட்­ட­மைப்­புடன் ஒன்­றி­ணை­யு­மாறு அனைத்துத் தரப்­பி­ன­ருக்கும் அறை­கூவல் விடுப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

சிறி­கொத்­தவை கிரா­மத்­துக்குக் கொண்­டு­செல்லும் வேலைத்­திட்­டத்தை நேற்று பாணந்­துறை தொட­வத்த பகு­தியில் ஆரம்­பித்து அங்கு உரை­யாற்­று­கை­யிலே பிர­தமர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;

தற்­போ­தைய அர­சாங்கம் என்ன செய்து விட்­டது என சிலர் கேள்­வி­யெ­ழுப்­பு­கி­றார்கள். குறு­கிய காலத்­துக்குள் நாட்டை அபி­வி­ருத்­தி­யின்பால் இட்­டுச்­செல்­வ­தற்கு நாடெங்கும் பாரிய திட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்­பதைக் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன் என்றார்.

சிறி­கொத்­தவை கிரா­மங்­க­ளுக்குக் கொண்டு செல்லும் திட்­டத்தின் கீழ் களுத்­துறை மாவட்­டத்தின் தேர்தல் தொகு­தி­களில் செயற்­திட்­டங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இப்­ப­கு­தி­களைச் சேர்ந்த மக்­களின் குறை­நி­றை­களைக் கேட்­ட­றிய, அவர்­க­ளது பிரச்­சி­னை­களை இனம்­காண பிர­தமர் ஒவ்வோர் பகு­தி­க­ளுக்கும் நேரில் விஜயம் செய்தார். வீதி­களின் இரு­ம­ருங்­கி­லு­முள்ள வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் வீடு­க­ளுக்கும் விஜயம் செய்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இந்­நி­கழ்வில் ஐ.தே.கட்­சியின் தவி­சாளர் அமைச்சர் கபீர் ஹாசிம், பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம், உப­த­லைவர் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மற்றும் அமைச்­சர்கள் லக் ஷ்மன் கிரி­யெல்ல, நவீன் திசா­நா­யக்க, ராஜித சேனா­ரத்ன, அஜித் பி பெரேரா, பிர­தி­ய­மைச்சர் பாலித தேவர பெரும உட்­பட பலர் கலந்து கொண்­டனர்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், நாம் 2015 இல் பத­விக்கு வந்து மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற ஊழல்­க­ளுக்கும் அழி­வு­க­ளுக்கும் முற்­றுப்­புள்ளி வைத்தோம். எமது அர­சாங்கம் என்ன செய்து விட்­டது என சிலர் கேட்­கி­றார்கள். நாம் செய்­த­வை­களை கூறித்­தி­ரிய விரும்­ப­வில்லை. மௌன­மா­கவே பணி­களை முன்­னெ­டுத்தோம். அவற்றின் பயன்­களை இன்று மக்கள் அனு­ப­விக்­கின்­றனர்.­ இந்­நி­லையில் எமது பணி­களைத் தொடர அனை­வரும் எம்­முடன் இணை­யு­மாறு வேண்டிக் கொள்­கின்றேன் என்றார்.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.