நிதானத்துக்கு முதலிடம்
ஏப்ரல் 21 தாக்குதல் நடைபெற்ற நாள் முதல் இத்தாக்குதல்களுக்கெதிராக இந்நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களிடம் மாத்திரமின்றி இந்நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்ட வண்ணமுள்ளனர். அத்துடன், தாக்குதல்களில் காயப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனப் பிரார்த்தித்தவாறும், அம்மக்களின் துயரங்களிலும், துன்பங்களிலும் பங்கு கொண்டவர்களாகவும் அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தவாறும்…