அமைதி, பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

பொறுப்பு ஆளும், எதிர் தரப்பினரையும் சாருமென நான்கு மகாநாயக்கர்கள் கூட்டாக வலியுறுத்து

0 564

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் குண்டு தாக்­கு­த­லுக்கு பின்னர் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண நிலை­மையை இல்­லாமல் செய்து, நாட்­டுக்குள் அமை­தி­யையும் பாது­காப்­பையும் நிலை நாட்ட வேண்­டி­யது ஆளும் தரப்­பி­ன­ரதும் எதிர்த்­த­ரப்­பி­ன­ரதும் பொறுப்­பாகும் என அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்கள் தெரி­வித்­துள்­ளன.

சில தினங்­க­ளாக நாட்டின் சில பிர­தே­சங்­களில் மூண்­டுள்ள வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்­பா­கவும் , அமைச்சர் ஒருவர் இலங்கை ஒரு சிங்­கள பௌத்த நாடு அல்ல  என தெரி­வித்­தி­ருப்­பது தொடர்­பா­கவும் பீடங்­களின் மகா­நா­யக்­கர்­க­ளினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அஸ்­கி­ரிய பீடத்து மகா­நா­யக்கர் திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சித்­தார்த்த தேரர், அம­ர­புர பீடத்து மாநா­யக்கர் கொடு­கொட தம்­மா­வாச தேரர் மற்றும் ஸ்ரீலங்கா இரா­மாண்ய  பீடத்து மாநா­யக்கர் நாபால பிரே­ம­சிறி தேரர் ஆகி­யோரின் கையொப்பத்­துடன் இந்த அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அந்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­ப­டு­வ­தா­வது,

அர­சியல் தலை­வர்கள் நாட்டை பற்றி சிந்­திக்­காது அவர்­களின் வாக்­கு­களை பெருக்கிக் கொள்ளும் நோக்­கி­லான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதன் விளை­வு­க­ளையே  இன்று நாடு அனு­ப­விக்­கின்­றது. நாட்­டுக்குள் அமை­தியை ஏற்­ப­டுத்­து­வது ஆளும் கட்­சி­யி­னதும், எதிர்­க்கட்­சி­யி­னதும் பொறுப்­பாகும். ஆனால் இவர்கள் தமது அர­சியல் இலா­பத்­திற்­காக அந்த பொறுப்­பி­லி­ருந்து மீறி செயற்­ப­டு­கின்­றனர்.

நாட்டில் ஏற்­பட்­டுள்ள அமை­தி­யற்ற நிலை­மையில் பொறுப்­பு­வாய்ந்த அமைச்சர் ஒருவர் இது சிங்­கள பௌத்­தர்­களின் நாடல்ல என குறிப்­பிட்­டி­ருப்­பது வன்­மு­றையை ஊக்­கு­விக்க கூடும். இந்­நி­லைமை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்­று­வது  போன்­ற­தாகும்.

நாட்டின் மகா­நா­யக்க தேரர்கள் என்ற வகையில் நாங்கள் பல ஆலோ­ச­னை­களை முன்­வைத்­தாலும், அவற்றை பொருட்­ப­டுத்­தாமல் அர­சியல் தலை­வர்கள் செயற்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இவ்­வா­றான நிலை­மை­யிலே இந்த விட­யங்கள் தொடர்­பான கருத்­துக்­களை நாங்கள் மீண்டும் மீண்டும் தெரி­விக்க வேண்­டிய நில­மைகள் ஏற்­ப­டு­கின்­றது.

இந்த நெருக்கடியான நிலைமையில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயற்படுவதும் முக்கியமாகும். மீண்டும் நாட்டில் பாதுகாப்பை நிலை நாட்டுவதன் மூலம், மக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த நப்பிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.