பதவியேற்பு தீர்மானத்தில் முஸ்லிம் எம்.பி.க்களிடம் ஒற்றுமை தேவை
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய நெருக்கடி நிலைக்குத் தீர்வாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் வகித்த அமைச்சுப் பதவிகளிலிருந்தும் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி இராஜினாமா செய்து கொண்டனர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளைத் துறப்பதற்கு முன்பு ஒன்றுகூடி கலந்துரையாடல்களை நடத்தியே இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டனர். பிரதமர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுடனும் இது பற்றிக்…