திகிலூட்டும் பகிடிகள் வேண்டாம்
தூங்குபவனை எழுப்பலாம். தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்ப முடியாது. இந்நாட்களில் நடந்து கொண்டிருப்பதோ அதுதான். டாக்டர் ஷாபி விவகாரத்தில் நடந்துவருவதும் இதுவேதான்.மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் விதமாக டாக்டர் ஒருவர் சத்திரசிகிச்சைகள் செய்திருப்பதாகப் பரப்பப்படும் கட்டுக்கதையினால்தான் இன்றைய குழப்பநிலை உருவாகியியுள்ளது.
தேசியவாதப் பத்திரிகை எனத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஓர் இனவாதப் பத்திரிகையின் வாயிலாகத்தான் இந்தக் கட்டுக்கதை இட்டுக்கட்டப்பட்டுள்ளது. விஞ்ஞானம்…