தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் ஹஜ்ஜுல் அக்பருக்கும் தொடர்பில்லை

இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மிக்கோ அதன் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்­ப­ருக்கோ தடை­செய்­யப்­பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பு­டனோ அல்­லது வேறு எந்த பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளு­டனோ எத்­த­கைய உறவும் இல்லை என ஜமா­அத்தே இஸ்­லாமி அமைப்பு தெரி­வித்­துள்­ளது. இது விட­ய­மாக அவ்­வ­மைப்பு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் முன்னாள் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரி­வி­னரால் நேற்று அதி­காலை கைது செய்­யப்­பட்டார். தேசிய தௌஹீத்…

ஜனா­தி­ப­தியை சாட்­சி­ய­ம­ளிக்­கு­மாறு தெரி­வுக்­குழு எழுத்து மூலம் அழைப்பு

ஈஸ்டர் தாக்­குதல் குறித்த விசா­ர­ணைகள் நடத்தும் பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சாட்­சி­ய­ம­ளிக்க வரு­மாறு தெரி­வுக்­குழு ஜனா­தி­ப­திக்கு எழுத்து மூலம் அறி­வித்தல் விடுத்­துள்­ளது.  ஜனா­தி­பதி தெரி­வுக்­கு­ழு­விற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினால் மட்­டுமே அறிக்­கையை முழு­மைப்­ப­டுத்த முடியும் எனவும் தெரி­வுக்­குழு சுட்­டிக்­காட்­டு­கின்­றது. கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை…

நிகாப், புர்கா விவகாரம் :

இலங்­கையில் கடந்த நான்கு மாதங்­க­ளாக அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அவ­சர கால சட்டம் நீக்­கப்­பட்­டுள்ள நிலையில், அதன் கீழ் தடை செய்­யப்­பட்ட முகத்தை முழு­மை­யாக மறைக்கும் புர்கா மற்றும் நிகாப் போன்ற ஆடை­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்­குமா இல்­லையா என்­பது தொடர்பில் தெளி­வற்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது.  கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து, ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி இரவு முதல் அவ­சர கால சட்­டத்தை பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால…

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 05

பாரம்­ப­ரிய மத்­ரஸா கல்வி முறை தீவி­ர­வா­தத்­திற்கு வகை­செய்­கி­றது என்ற ஒரு பிழை­யான எடு­கோளின் பின்­ன­ணியில் மத்­ரஸா கல்­வியை ஒழுங்­கு­ப­டுத்தும் சட்­ட­மூலம் (Madrasa Education Regulatory Bill) எனும் பெயரில் விவா­திக்­கப்­பட்ட மசோதா தற்­போது இலங்கை இஸ்­லா­மிய கல்விச் சட்டம் (Sri Lanka Islamic Education Act) எனப் பெயர் மாற்றம் பெற்­றுள்­ளது. 13 பக்­கங்­களைக் கொண்ட இச்­சட்ட மூலம் 7 பிர­தான பகு­தி­க­ளையும் 36 உப­பி­ரி­வு­க­ளையும் உள்­ள­டக்­கி­யுள்­ளது. இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­களைப் பதிவு செய்தல், மேற்­பார்வை செய்தல்,…