எதிர்பார்த்த பெறுபேறு இல்லை மக்களே தோல்வியடைந்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஒரு தரப்பினருக்கு வெற்றியை வழங்கியிருந்தாலும் மக்கள் தோல்வியையே சந்தித்துள்ளனர் என்றும் அதனை அவர்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி இயக்கம், மக்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட போவதாகவும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் களமிறங்கிய கோத்தாபய ராஜபக்…