2019 ஹஜ் விவகாரம் : 21 ஆம் திகதிக்கு முன் முறைப்பாடு அளிக்குக

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்ட ஹஜ்­ஜா­ஜிகள் பலர் முகவர் நிலை­யங்­க­ளினால் தங்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட தவ­று­க­ளையும் ஊழல்­க­ளையும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் முறை­யிட்­டுள்­ளனர். மேலும் முறைப்­பா­டுகள் இருப்பின் அவற்றை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 21 ஆம் திக­திக்கு முன்பு பதிவுத் தபாலில் பின்­வரும் விலா­சத்­துக்கு அனுப்பி வைக்­கு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். இவ்­வ­ருட ம் ஹஜ் கட­மையை…

கொட்டாம்பிட்டி பள்ளியில் மீண்டும் தொழுகை ஆரம்பம்

ஹெட்­டி­பொல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கொட்­டாம்­பிட்டி லுஃலு பள்­ளி­வா­சலில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த தொழு­கைகள் மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அப்­பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபைச் செய­லாளர் முஹம்மத் ஷாபி ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், பள்­ளி­வா­சலில் தொழு­கை­க­ளுக்கு பொலி­ஸாரால் தடை விதிக்­கப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. அவர் தொழு­கை­களை…

நிகாப், புர்காவுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதா? விரிவான அறிக்கை தேவை

நாட்டில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நாட்டில் அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டுள்ள நிலையில் அச்­சட்­டத்­தின்கீழ் வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் நிகாப் மற்றும் புர்­கா­வுக்கு விதிக்­கப்­பட்ட தடை நீக்­கப்­பட்­டுள்­ளதா? இல்­லையா? என்­பது தொடர்பில் மக்­க­ளுக்கு விரி­வான அறிக்­கை­யொன்­றினை வெளி­யி­டு­மாறு பதில் பொலிஸ்மா அதி­ப­ரிடம் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­துள்ளார். அவ­ச­ர­காலச் சட்டம்…

பொலிஸாரின் உத்தரவினால் ஒரு மாதமாக மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அலை உச்சகட்டத்தை எட்டியிருந்தது. இந்நிலையில் மே 13 ஆம் திகதி முதல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்தி கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. இந்த வன்­செ­யல்­க­ளின்­போது முஸ்­லிம்­களின் பெரும் எண்­ணிக்­கை­யி­லான பள்­ளி­வா­சல்கள் இலக்கு வைக்­கப்­பட்­டன. மே மாதம் 13 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளினால் குருநாகல் மாவட்­டத்தில் 23…