முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகள் பற்றி ஜனாதிபதி ரணிலுடன் பேச்சு

அல் ஆலிம் பரீட்சையை நடத்தவும் உத்தரவு

0 35

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கடந்த ஐந்து வருட கால­மாக நடத்­தப்­ப­டா­தி­ருந்த அல்­ ஆலிம் பரீட்சை மீண்டும் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கல்வி அமைச்சின் அதி­கா­ரி­களைப் பணித்­துள்ளார்.

நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­தி­ப­தியின் தலை­மையில் நடை­பெற்ற கொழும்பு பிர­தே­சத்­தி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லைகள் எதிர்­கொள்ளும் கல்­விசார் பிரச்­சி­னைகள் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லி­னை­ய­டுத்தே ஜனா­தி­பதி இந்தப் பணிப்­பு­ரையை விடுத்­துள்ளார்.

அல் ­ஆலிம் பரீட்­சைக்­கான பாடத்­திட்டம் திருத்­தி­ய­மைக்­கப்­பட வேண்டும். அதன்­பின்பே அப்­ப­ரீட்சை நடத்­தப்­படும் என கல்­வி­ய­மைச்சு இழுத்­த­டிப்புச் செய்து வரும் நிலை­யிலே ஜனா­தி­பதி இந்தத் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்ளார். 5 வருட கால­மாக பரீட்சை நடத்­தப்­ப­டா­மையை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தெ­னவும் அதி­கா­ரி­க­ளுக்கு அவர் தெரி­வித்தார்.

மேலும் நாட்­டி­லுள்ள மத்­ர­ஸாக்­களை மேற்­பார்வை செய்­வ­தற்­கான குழு­வொன்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழன்றி கல்வி அமைச்சின் கீழேயே நிறு­வப்­பட வேண்டும் என்­ப­தையும் ஜனா­தி­பதி ஏற்­றுக்­கொண்டார்.

கொழும்பு மத்­தியில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­ச­மொன்றில் பாட­சா­லை­யொன்­றினை நிறு­வு­வ­தற்கு காணி­யொன்­றினை இனங்­கா­ணு­மாறும் ஜனா­தி­பதி நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ரவு வழங்­கினார்.

கொழும்­பி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லைகள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள், வளப்­பற்­றாக்­குறை, இட­நெ­ருக்­கடி, ஆசி­ரியர் பற்­றாக்­குறை தொடர்பில் கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்ட பாட­சாலை அதி­பர்கள் மற்றும் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் ஜனா­தி­ப­தி­யி­டமும் வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்­ரி­யி­டமும் எடுத்­து­ரைத்­தனர்.

சிங்­கள மொழியில் இஸ்லாம் கற்­பிப்­ப­தற்கு பாட­சா­லை­களில் ஆசி­ரி­யர்கள் இன்­மையால் மாண­வர்கள் எதிர்­கொள்ளும் சவால்கள் குறித்தும் கலந்­து­ரை­யா­டலின் போது ஆரா­யப்­பட்­டது. சுமார் 40 ஆயிரம் மாண­வர்கள் சிங்­கள மொழியில் பயில்­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது. கொழும்­பி­லுள்ள 19 முஸ்லிம் பாட­சா­லை­களில் சுமார் 200 ஆசி­ரி­யர்கள் வெற்­றி­டங்கள் நில­வு­கின்­றமை ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இது தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி கல்வி அமைச்சின் அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கினார்.

முஸ்லிம் பாட­சா­லை­களில் நிலவும் இடப்­பற்­றாக்­கு­றையை நிவிர்த்தி செய்­வ­தற்­கா­கவும் அவற்றை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கா­கவும் காணி­களை பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் ஆரா­யு­மாறும் ஜனா­தி­பதி நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை க்கு ஆலோ­சனை வழங்­கினார். குறிப்­பாக ஹைரியா மகளிர் கல்­லூரி, தாருஸ்­ஸலாம் மகா வித்­தி­யா­லயம், அல்­ஹி­தாயா மகா வித்­தி­யா­லயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இக்­கல்­லூ­ரி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக கட்­டிடம் நிர்­மா­ணிக்கும் அங்­கீ­காரம் தொடர்பில், சாத்­தி­யக்­கூ­றுகள் தொடர்பில் கவனம் செலுத்­து­மாறும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு பணிப்­புரை விடுக்­கப்­பட்­டது.

கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரிக்குச் சொந்­த­மான மஹ­ர­க­ம­யி­லுள்ள 18 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் சிலரால் சட்­ட­வி­ரோ­த­மாக கைய­கப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளமை தொடர்­பிலும் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. எஞ்­சி­யுள்ள 5 ஏக்கர் காணியில் பாட­சா­லையின் விவ­சாய பிரி­வொன்­றினை ஆரம்­பிப்­ப­தற்கும், விளை­யாட்டு கட்­டிடத் தொகு­தி­யொன்­றினை நிர்­மா­ணிப்­ப­தற்கும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை அங்­கீ­காரம் வழங்க வேண்டும் எனவும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களை ஜனா­தி­பதி வேண்டிக் கொண்டார்.

அத்­தோடு முஸ்லிம் பாட­சா­லைகள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் அதன் முன்­னேற்றம் குறித்து மீளாய்வு செய்­வ­தற்­காக ஒரு மாத காலத்தில் மீண்டும் சந்­திப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­யு­மாறு ஜனா­தி­பதி சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை வேண்டிக் கொண்டார்.

கலந்­து­ரை­யா­டலில் தேசிய பாது­காப்பு தொடர்­பான ஜனா­தி­ப­தியின் சிரேஷ்ட ஆலோ­ச­கரும் ஜனா­தி­ப­தியின் பணிக்­குழாம் பிர­தா­னி­யு­மான சாகல ரத்­நா­யக்க, மேல்­மா­காண ஆளுநர் ரொஷான் குண­தி­லக,வெளி­வி­வ­கார அமைச்சர் அலி­சப்ரி, ஜனா­தி­ப­தியின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்க, கல்வி அமைச்சின் செய­லாளர் திலகா ஜய­சுந்­தர, நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை மற்றும் வீட­மைப்பு அமைச்சின் அதி­கா­ரிகள், பாட­சாலை அதி­பர்கள், பாட­சாலை அபி­வி­ருத்தி குழு உறுப்­பி­னர்கள், வலய கல்வி அதி­கா­ரிகள், முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவரும் தேசிய சூரா சபையின் தலைவருமான ரீ.கே. அஸுர், செயலாளர் ரஷீத் எம். இம்தியாஸ், காந்தாசவிய அமைப்பின் தலைவியும் பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் சங்க உபதலைவியுமான பெரோஸா முஸம்மில், கொழும்பு ஸாஹிரா கல்லூரி அதிபர் ரிஸ்வி, ஸாஹிரா கல்லூரி பணிப்பாளர் சபை தலைவர் பௌசுல் ஹமீட், பஹார்தீன் பவுண்டேஷன் தலைவர் பஹார்தீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் உட்பட முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.