இம்ரான் கானின் 2ஆவது இன்னிங்ஸும் துருக்கிய மக்களின் எதிர்பார்ப்பும்

0 244

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

கடந்த (21.05.2023)ஞாயிறு திவயின வாராந்த பத்திரிகையில்
பிரசுரமான ஆக்கத்தின் தமிழ் வடிவம்.

உலகக் கோப்பைக் கிண்­ணத்தை பாகிஸ்தான் வெல்­வ­தற்கு வழி­வ­குத்த பிர­பல கிரிக்கெட் நட்­சத்­தி­ர­மான இம்ரான் கான், இன்று உலக அர­சி­யலில் அதிக அவ­தானம் பெறும் நப­ராக மாறி­யுள்ளார்.பாகிஸ்தான் படிப்­ப­டி­யாக உலக வரை­ப­டத்தில் தனித்­துவ நாடாக மாறி வரும் பின்­ன­ணியில், பாகிஸ்­தானின் பெரும்­பான்மை மக்­களின் விருப்­பத்­திற்கு எதி­ரா­னதும் மக்கள் அபிப்­பி­ரா­யத்தைப் பிர­தி­ப­லிக்­காததுமான நாடா­ளு­மன்ற முடிவின் பிர­காரம் அவர் அதி­கா­ரத்தை இழக்­கிறார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கட்சி தாவிய திரி­பு­ப­டுத்­தப்­பட்ட தீர்­மா­னத்தை முன்­னி­றுத்­தி­யதன் பின்­ன­ணியில், அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கத்­திய காய் நகர்த்­தலும் அது தொடர்­பான இரா­ணுவ சதிப்­பு­ரட்சி குறித்தும் பாகிஸ்­தா­னிய சமூ­கத்தில் வலு­வான கருத்து எழுந்­துள்­ளதை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

கட்சி தாவல் ஊடாக உரு­வாக்­கப்­பட்ட மக்கள் அபிப்­பி­ரா­யத்தைப் பிர­தி­ப­லிக்­காத அர­சாங்­கத்­திற்கு எதி­ராக பாரிய போராட்டத் தொடர் ஆரம்­ப­மா­கி­றது. கட்சி தாவிய எம்­பிக்கள் மக்­களைச் சந்­திப்­பது கடி­ன­மாக மாறு­கி­றது.

அதி­காரம் பறி­போ­னதால் தயங்­காத இம்ரான் கான், மீண்டும் ஒழுங்­க­மைந்து சக்தி பெறு­கிறார். மூன்று இரா­ணுவ சதிப்­பு­ரட்­சிகள் மூலம் ஜென­ரல்­களால் நாட்டில் அதி­கா­ரத்தைக் கைப்­பற்ற முடிந்­தாலும், இரா­ணு­வத்­திற்கு எதி­ராக இவ்­வ­ளவு வலு­வான மக்கள் போராட்டம் இது­வரை ஏற்­பட்­ட­தில்லை. இரா­ணு­வத்தின் தலை­யீட்டை எதிர்த்து இம்ரான் கானின் ஆத­ர­வா­ளர்கள் போராட்­டத்தை தொடங்­கி­யுள்­ளனர். இந்தப் பின்­ன­ணி­யில்தான் இஸ்­லா­மா­பாத்தில் உள்ள நீதி­மன்ற வளா­கத்தில் இம்ரான் கான் கைது செய்­யப்­பட்டார்.

வன்­மு­றைகள் தலை­தூக்­கிய இரண்டு நாட்­க­ளுக்குப் பிறகு,மே 11 ஆந் திகதி கைதுகள் சட்­ட­வி­ரோ­த­மா­னது என்று பாகிஸ்தான் உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. தற்­போது பாகிஸ்தான் முழு­வதும் மக்கள் அவர் மீது காட்டும் அன்பை தெளி­வாக பார்க்க முடி­கி­றது. பாகிஸ்­தானின் எதிர்­காலம் மற்றும் தொலை­நோக்குப் பார்­வையில் அவ­ரது நேர்­மையில் பா­கிஸ்­தா­னிய மக்கள் மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளனர்.

வல்­ல­ர­சு­களின் பிடியிலிருந்து விடுபட்டு, அந்தக் கொள்­கை­க­ளுக்கு விடை­கொ­டுத்து, பாகிஸ்­தானின் எதிர்­காலம் குறித்த தெளி­வான பார்­வை­யுடன் துணிச்­ச­லான தூய்­மை­யான தலை­மைத்­து­வத்தை இம்ரான் கான் வழங்­கி­யது உலக நாடு­க­ளுக்கு முன்­மா­தி­ரியை பிர­தி­ப­லித்த வண்ண­மாகும்.

மக்­களின் அபி­லா­ஷை­களைப் புரிந்து கொண்டு நல்­லெண்­ணத்­துடன் மக்­க­ளுக்­காக முன்­நிற்கும் ஜன­ரஞ்­சகத் தலை­வர்­களை மக்கள் அர­வ­ணைக்கும் போக்­கை­யல்­லவா முழு உல­கமும் வேக­மாக நிரூ­பித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. உயிரைப் பணயம் வைத்து பாது­காப்­ப­தை­யல்­லவா இது நிரூ­பித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

ஜன­நா­யக விரோதம், சதிகள், ஊழல், சுரண்டல், சமூக அநீ­திகள், அடக்­கு­மு­றைகள் போன்­ற­வற்றை மக்கள் பொறுத்­துக்­கொள்ள மாட்­டார்கள் என்­பதை உலகம் முழு­வதும் நடக்கும் நிகழ்­வுகள் நமக்கு நன்­கு­ணர்த்­து­கின்­றன.

இம்ரான் கான் பற்றி நான் இந்த பதிவை எழுதும் தரு­ணத்தில், துருக்­கியில் தேர்தல் முடி­வுகள் வெளி­யாகி வரு­கின்­றன. உலகம் முழு­வதும் செய்­தி­களை விநி­யோ­கிக்கும் மேற்­கத்­திய செய்தி நிறு­வ­னங்­க­ளாலும் முக­வ­ராண்­மை­க­ளாலும் வெளி­யி­டப்­பட்ட கணிப்­புகள் பொய்­யா­னவை என்­பது இந்த தேர்தல் முடி­வு­களால் நிரூ­ப­ண­மா­கி­விட்­டது. அவ்­வாறே அந்த ஆதா­ரங்கள் வழங்­கிய கணக்­கெ­டுப்பு முடி­வு­களும் தவ­றா­ன­வை­யாக மாறிப்­போ­யின.

இந்தத் தேர்தல் முடி­வு­களால் ஜனா­தி­பதி எர்­டோகான் தோற்­க­டிக்­கப்ப­டுவார் என்று மேற்­கு­லகில் உள்ள அனைத்து சக்­தி­வாய்ந்த செய்தி ஏக­போ­கங்­களும் தெரி­வித்­தன.
துருக்­கிய தேர்­த­லுக்கு முன் வெளி­யான மேற்­கு­லகில் வெளி­வரும் Economist ஆசி­ரியர் தலை­யங்­கத்­தில் “­இவ்­வாண்டின் உலகின் மிக முக்­கிய நிகழ்வு துருக்­கிய ஜனா­தி­பதி தேர்­த­லாகும்” என்றும், “ஜனா­தி­பதித் தேர்தல் துருக்­கியின் எதிர்­கா­லத்­திற்கு மட்­டு­மல்­லாது, உலகின் ஜன­நா­ய­கத்தின் எதிர்­கா­லத்­திற்கும் தீர்க்­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்” என்­ற­வாறும் தலைப்­பிட்­டி­ருந்­தது. என்­றாலும் ஜன­நா­ய­கத்தின் காவ­லர்­க­ளாகத் தோன்றும் இந்த சக்­தி­வாய்ந்த ஊட­கங்கள், எகிப்தில் மக்கள் ஆணை­யினால் நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி நீக்­கப்­பட்டு இரா­ணுவ ஆட்சி உரு­வாக்­கப்­பட்ட போதும், பலஸ்­தீ­னத்தில் புதிய பிர­தமர் உட்­பட அர­சாங்கம் கவிழ்க்­கப்­பட்ட போதும், ஜன­நா­ய­கத்தின் இருப்­புக்­காக குரல் எழுப்­பா­தது புதி­ரா­கவே உள்­ளது.

எர்­டோகான் தனது ஆட்­சியின் இறுதிக் காலத்தில் எதிர்­கொள்ள வேண்டி இருந்த சவால்கள் பாரி­ய­தாகும். இந்த பின்­ன­ணியில், 2019 இஸ்­தான்புல் மேயர் தேர்­தலில் எர்­டோ­கானின் கட்சி வேட்­பாளர் தோல்­வி­ய­டைந்து, எதிர்க்­கட்சி வேட்­பாளர் இமா­மோக்லு ஜன­நா­யக ரீதி­யி­லான தேர்­தலில் மேய­ரானார்.

துருக்கி மிகவும் இக்­கட்­டான பொரு­ளா­தார சூழலை எதிர்­கொண்­டி­ருந்த சூழ்­நி­லை­யி­லையே எர்­டோகான் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலை எதிர்­கொண்டார். அதி­க­ரித்து வரும் வாழ்க்கைச் செலவு, துருக்­கியின் நாணய மதிப்பு, பண­வீக்கம், அதி­க­ரித்து வரும் வேலை­யில்லாத் திண்­டாட்டம், நில­ ந­டுக்­கங்­களால் 50,000 இக்கும் மேற்­பட்ட இறப்­புகள்,150,000 இக்கும் மேற்­பட்­ட­வர்கள் அக­தி­க­ளாதல், சிரியா யுத்தம் கார­ண­மாக இலட்­சக்­க­ணக்­கான அக­தி­களை துருக்கி ஏற்­றுக்­கொண்­டமை போன்ற சூழ்­நி­லை­களில் துருக்­கிய மக்கள் மிகவும் கடி­ன­மான சூழலை எதிர்­கொண்­டுள்­ளனர். இந்தப் பின்­ன­ணியில், இரண்டு தசாப்­தங்­க­ளாக நாட்டை வழி­ந­டத்தி வரும் பழைய முக­மான எர்­டோ­கானின் கட்சி, நாடா­ளு­மன்­றத்தில் அதிக ஆத­ரவைக் கொண்ட கட்­சி­யாக மாறி­யுள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­தலில் 49.5% வாக்­குகள் பெற்று முத­லிடம் பிடித்­துள்­ளனர்.

ஐரோப்­பாவின் தீவிர வல­து­சாரிக் கட்­சி­களின் அதி­கா­ரத்தில் உள்ள நாடு­களின் கார­ண­மாக ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் துருக்கி இணை­வ­தற்­கான கத­வுகள் தொடர்ந்து மூடப்­பட்டு வரு­கின்­றன. எர்­டோ­கானின் தோல்­வியை மேற்கு நாடுகள் விரும்­பு­வதும், அவ்­வாறு கணிப்­பீ­டு­களை தொடர்ந்து வெளி­யி­டு­வதும், துருக்­கியின் சுயா­தி­பத்­தியம் மற்றும் அடை­யா­ளத்தைப் பற்றி துருக்­கிய மக்­களை சிந்­திக்கத் தூண்டும் சூழ்­நிலை உரு­வாக்­கி­யுள்­ளது.

பொரு­ளா­தாரப் பிரச்­சினை­களில் சிக்­காமல் துருக்­கிக்கு பிர­கா­ச­மான எதிர்­கா­லத்தை கட்­ட­மைக்க பச்­சைக்­கொடி காட்டும் சூழ்­நி­லைக்கு துருக்கிய மக்­களின் இந்த முடிவு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இம்ரான் மற்றும் எர்­டோகான் இந்த சகாப்­தத்தில் தங்கள் நாட்டின் சுதந்­திரம், சுயா­தீனம் மற்றும் அபி­மா­னத்­திற்­காக தைரி­ய­மாக முன் நிற்கும் ஜன­ரஞ்­சக மக்கள் தலை­வர்­க­ளாவர். உள்­நாட்டு வெளி­நாட்டுச் சவால்கள், சதிகள், இடை­யூ­று­க­ளுக்கு மத்­தியில் மக்­களின் ஆணையை அவர்கள் பெறு­வது அந்­நா­டு­களின் ஊடக பிர­சாரங்­களின் மேலோட்ட பார்­வை­களை தகர்த்து ஆழ­மான உண்­மை­களை அந்­நாட்டு மக்­களால் புரிந்து கொள்ள முடி­வ­தால் தான்.

மக்கள் அபி­லா­ஷை­களின் பிர­கா­ர­ம­மைந்த மக்கள் ஆட்­சியும், சட்­டத்தின் ஆட்சியும், ஜனநாயக இருப்பும், மக்கள் பங்கேற்புகளுக்கான பிரவேசங்களும், சுயாதிபத்தியத்திற்கான இயல்பான ஆளுகையும், நடுநிலையான ஊடக வகிபாகமும், அதிகாரத்தை திசைமுகப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகளும், சவால் விட முடியாத இறையாண்மையும், ஏனைய சிவில் தரப்புகளின் உள்நோக்கற்ற ஊடாட்டமான பங்கேற்பும், கொள்கை ரீதியிலான வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாடுகளுமே நாட்டின் தேசநலனுக்கு வலுச் சேர்க்கும்.

இதற்கு இனத்துவ, மதத்துவ அரசியல் என்று இல்லை. தமது சொந்த இறையாண்மைகளை வெளிநாட்டு நலன்சார் ஏகபோகங்களுக்கு தாரைவார்க்க பாகிஸ்தானிய மக்களும் துருக்கிய மக்களும் தயார் இல்லை என்பதையே நடந்து வரும் நிகழ்வுகள் காண்பிக்கின்றன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.