கல் – எளிய முஸ்லிம் அரபுக் கல்லூரியில் என்ன நடக்கிறது?

- அத்தனகல்ல மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்காலத் தடையும் பின்னணியும் -

0 377

எம்.எப். அய்னா

கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி நாட­ளா­விய ரீதியில் பிர­பல்­ய­மான மகளிர் அரபுக் கல்­லூ­ரி­யாகும். குறித்த அர­புக்­கல்­லூ­ரி­யா­னது இலங்­கையின் முத­லா­வது மகளிர் அர­புக்­கல்­லூரி (1959) என வர­லாறு கூறு­கின்­றது. ஆனால் இன்று அக்­கல்­லூ­ரியில் இடம்­பெ­று­வ­தாக கூறப்­படும் முறைகே­டுகள், நோக்­கத்­துக்கு அப்­பாற்­பட்ட நடை­மு­றைகள் பொது வெளி­யிலே பேச்­சுக்­களை உரு­வாக்­கி­யுள்­ளன.

அத்­த­ன­கல்ல மாவட்ட நீதி­மன்றில் கல்­லூ­ரியின் முகா­மைத்­துவ சபை உறுப்­பி­னர்கள், பெற்றோர், பழைய மாண­வர்கள் இணைந்து தாக்கல் செய்­துள்ள சிவில் வழக்கு, கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரியின் தற்­போ­தைய நிலை­மை­யினை விளக்­கு­வ­தாக அமைந்­துள்­ளது.

சட்­டத்­த­ரணி அர­விந்து மன­துங்க ஆரச்­சி­யினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த மனுவில், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் கடந்த 19 ஆம் திகதி ஆஜ­ராகி வாதங்­களை முன் வைத்­தி­ருந்தார்.

இந்த வாதங்­களை மிகக் கவ­ன­மாக செவி­ம­டுத்த அத்­த­ன­கல்ல மாவட்ட நீதி­பதி கேசர சம­ர­தி­வா­ஹர, பாதிப்­பொன்­றினை தடுப்­ப­தற்­காக வழங்க முடி­யு­மான இடைக்­கால ‘இன் ஜன்ஷன்’ தடை உத்­த­ர­வொன்­றினை 14 நாட்­க­ளுக்கு செல்­லு­ப­டி­யாகும் வண்ணம் பிறப்­பித்­துள்ளார்.

உண்­மையில், இந்த இடைக்­கால தடை உத்­த­ரவு, ஏற்­படவுள்­ள பாதிப்­பினை தடுப்­ப­தற்­காக வழங்­கப்­பட்ட உத்­த­ர­வுதான். தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கில் நீதி­மன்­றிடம் கோரப்­பட்­டுள்ள கோரிக்­கை­களின்’ ஈ’ பிரிவின் கீழ் முன் வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளித்து இந்த தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­ப­டு­வ­தாக நீதி­பதி கேசர சம­ர­தி­வா­க­ரவின் உத்­த­ரவில் கூறப்­பட்­டுள்­ளது.

வழக்கின் கோரிக்­கைகள் பட்­டி­யலில் ‘ஈ’ பிரி­வா­னது பிர­தா­ன­மாக சில விட­யங்­களை முன் வைத்து இடைக்­கால தடை உத்­த­ர­வினை கோரி­யுள்­ளது.

அதா­வது, கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரியின் யாப்­புக்கு முர­ணாக நிய­மனம் பெற்­றுள்ள, நிய­மனம் பெற எதிர்ப்­பார்த்­துள்ள மற்றும் வேறு நபர்கள் கல்­லூ­ரிக்குள் நுழை­வதை, கல்­லூ­ரியின் நிதி, வங்கிக் கணக்­கு­களை பயன்­ப­டுத்­து­வதை , கல்­லூரி நட­வ­டிக்­கை­களில் தலை­யீடு செய்­வதை, கல்­லூ­ரியின் ஆவ­ணங்­களை பயன்­ப­டுத்­து­வதை தடுக்க வேண்டும் என அந்த பிரி­வூ­டாக கோரப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட அநீ­தி­யான முறையில் பத­வி­யி­லி­ருந்து இடை நிறுத்­தப்­பட்­டுள்ள கல்­லூ­ரியின் அதி­பரை மற்றும் ராலியா என்­ப­வரை மீள பணியில் இணைக்க வேண்டும் என அப்­பி­ரி­வூ­டாக கோரப்­பட்­டுள்­ளது. அத்­துடன் சட்ட ரீதி­யான செய­லாளர் என மனு­வூ­டாக கூறப்­பட்­டுள்ள முத­லா­வது முறைப்­பாட்­டாளர் அக்­க­ட­மை­களை முன்­னெ­டுக்க ஆவன செய்­யப்­படல் வேண்டும் என அதில் கோரப்­பட்­டுள்­ளது.

இவற்­றை­யெல்லாம் விட, கல்­லூரி யாப்­புக்கு முர­ணாக நிய­மனம் பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் தற்­போ­தைய முகா­மைத்­துவ சபை உறுப்­பி­னர்கள் ( பிர­தி­வா­திகள்) உறுப்­பி­னர்கள் மற்றும் வேறு நபர்கள் சட்ட ரீதி­யாக நடாத்த உள்ள பொதுச் சபை கூட்­டத்­துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனு­தா­ரர்­களால் கோரப்­பட்­டுள்­ளது.

இந்த விட­யங்­களை உள்­வாங்­கியே அத்­த­ன­கல்ல நீதி­மன்­றினால் இந்த இடைக்­கால உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டு பிர­தி­வா­தி­க­ளுக்கு அறி­வித்தல் அனுப்­பப்­பட்­டுள்­ளது. அதன்­படி எதிர்­வரும் ஜூன் 2 ஆம் திகதி இது குறித்த வழக்கு மீண்டும் விளக்­கத்­துக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

1959 ஆம் ஆண்டு ஜன­வரி முதலாம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி தொடர்பில் அண்­மைய நாட்­களில் கேள்­விப்­படும் தக­வல்கள் அவ்­வ­ளவு ஆரோக்­கி­ய­மா­ன­தாக இல்லை. கல்­லூரி அதி­பரை திடீ­ரென இடை நிறுத்­தி­யது முதல், கல்­லூ­ரியின் மாண­வி­களின் நலன்கள் தொடர்­பி­லான குறை­பா­டுகள், நிர்­வாகம் சார் விட­யங்கள் என பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் சமூக மட்­டத்தில் பேசப்­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பாக முஸ்லிம் சமூ­கத்தின் கல்விச் சொத்­துக்­க­ளுக்கு இன்று பாரிய அச்­சு­றுத்­தல்கள் ஏற்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­யு­மான பின்­ன­ணியில், இந்த கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரியின் விட­யமும் மேலெ­ழுந்­துள்­ளமை கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மாகும்.

கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி ஒரு அறக்­கட்­டளை நிறு­வ­ன­மாக பார்க்­கப்பட வேண்­டிய நிறு­வ­ன­மாகும். அதா­வது இக்­கல்­லூரி முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரி­யாக இயங்­கிய போது, 1960 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க உதவி பள்ளி மற்றும் பயிற்சி கல்­லூ­ரிகள் சட்­டத்தின் கீழும் அதற்கு கொண்­டு­வ­ரப்­பட்ட திருத்­தங்கள் பிர­கா­ரமும், கட்­டணம் அற­விடும் சமய அடிப்­ப­டை­யி­லான பாட­சா­லை­களை அர­சுக்கு சுவீ­க­ரிக்கும் ஒரு திட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதன் பிர­தி­ப­ல­னாக 1964.03.28 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 13998 ஆம் இலக்க அரசின் விஷேட வர்த்­த­மானி அறி­வித்தல் பிர­காரம் கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி ஒரு அறக்­கட்­டளை நிறு­வ­­னமாக அர­சினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அதன் பிர­கா­ரமே, அரச பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பட்டப் பின் டிப்­ளோமா பாட நெறியை தேசிய கல்வி நிறு­வகம் கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி ஆசி­ரி­யர்­க­ளுக்கும் வழங்­கி­ய­தா­கவும், அரச பாட­சாலை பாடப் புத்­த­கங்­களை இல­வ­ச­மாக வழங்­கு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

இத­னை­விட கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரியின் நோக்கம், அதன் நிர்­வாக செயற்­பா­டு­களை மேலும் ஒழுங்­க­மைக்கும் வித­மாக 1991 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க முஸ்லிம் பெண்கள் (அரபு) கல்­லூரி முகா­மைத்­துவ சங்­கத்தின் முகா­மைத்­துவ சபை கூட்­டி­ணைப்பு சட்டம் பாரா­ளு­மன்றால் இயற்­றப்­பட்­டது.

இவற்றை மையப்­ப­டுத்தி பார்க்கும் போது, கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரியின் நோக்கம், ஒரு அறக்­கட்­டளை நிறு­வ­னத்தின் நோக்­கத்­தையே கொண்­டுள்­ள­துடன், இலாப நோக்கம் கொண்­ட­தாக கொள்ள முடி­யாது.

குறித்த அரபுக் கல்­லூரி பிர­தா­ன­மாக ஆத­ர­வற்ற மாண­வி­க­ளுக்­கான தாருல் ஐதாம் பிரிவு, 6 வய­துக்கும் குறைந்த சிறு­வர்­க­ளுக்­கான தாருல் அத்பால் குழந்­தைகள் நல பிரிவு மற்றும் பைதுஸ் சகாத் பிரிவு என பிரி­வு­களை உள்­ள­டக்­கி­யது. தாருல் ஐதாம் எனும் பிரிவில் நீதி­மன்ற உத்­த­ர­வு­களின் கீழ் ஆத­ர­வற்ற சிறு­மிகள் குறித்த கல்­லூ­ரியில் அனு­ம­திக்­கப்­பட்டு வரு­வ­துடன் தந்­தையை இழந்த பெண் பிள்­ளை­களும் உள்­ளீர்க்­கப்­ப­டு­கின்­றனர். கட்­டணம் செலுத்தி கற்கும் மாண­வி­யரும் அங்கு கல்வி பயில்­கின்­றனர்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே, கல் எளிய முஸ்லிம் அரபுக் கல்­லூ­ரியின் தற்­போ­தைய முகா­மைத்­துவ சபையின் செயற்­பா­டு­களை சவா­லுக்கு உட்­ப­டுத்தி, அக்­கல்­லூ­ரியின் தற்­போ­தைய நிலை­மை­யினை படம்­பி­டித்­துக்­காட்டும் சிவில் வழக்கு அத்­த­ன­கல்ல நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அந்த வழக்கின் பிர­காரம், சட்ட ரீதி­யான செயலர் என கூறும் நூர் மொஹம்மட் மொஹம்மட் மிப்லி, சட்ட ரீதி­யான பொரு­ளாலர் எனக் கூறப்­படும் அப்துல் ஹமீட் மொஹம்மட் கலீல், அக்­கல்­லூ­ரியில் கல்வி பயிலும் இரு மாண­வி­யரின் பெற்­றோர்­க­ளான பிர்­தெ­ளவுஸ் மொஹம்மட் புஹாரி , மொஹம்மட் அப்னாஸ் மொஹம்மட் பர்ஹான், குறித்த கல்­லூ­ரியின் பழைய மாண­வியர் சங்க தலைவி சுல்­பிகார் ஜுனைட் மற்றும் செய­லாளர் ஜமீலா உம்மா மொஹம்மட் அஷ்ரப் ஆகி­யோரே மனு­தா­ரர்­க­ளாவர்.
வழக்கில் பிர­தி­வா­தி­க­ளாக மொஹம்மட் டில்ஷாத் பாசில், அர்ஷாட் மொஹம்மட் இக்பால், மொஹம்மட் பயாஸ் சலீம், மொஹம்மட் ஜமீல் அஹமட், மொஹம்மட் ரிஷாட் சுபைர் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

முத­லா­வது பிர­தி­வாதி கல்­லூரி யாப்­புக்கு முர­ணாக தெரிவு செய்­யப்­பட்ட சட்ட ரீதி­யற்ற செய­லாளர் என மனுவில் கூறப்­பட்­டுள்­ளது. இத­னை­விட பிர­தி­வா­தி­களில் 1,2,3 ஆவது நபர்கள் ஒரே குடும்­பத்­த­வர்கள் எனவும், 5 ஆவது பிர­தி­வாதி முன்னாள் தலை­வரின் மகன் எனவும் 4 ஆவது பிர­தி­வாதி சட்ட ரீதி­யற்ற உறுப்­பினர் எனவும் மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்த மனுவின் பிர­காரம் பிர­தா­ன­மாக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் எழுப்­பப்பட்­டுள்­ளன. அதா­வது மனு­தா­ரர்கள் சட்ட ரீதி­யற்ற முகா­மைத்­துவ சபை உறுப்­பி­னர்கள் எனக் கூறும் பிர­தி­வ­ாதி­களால், கல் எளிய முஸ்லிம் அரபுக் கல்­லூ­ரியில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளாக அவை சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக கல்­லூ­ரியின் யாப்பின் பிர­காரம் முகா­மைத்­துவ சபையின் அனு­மதி இன்றி நிதி கையாள்­கையை முன்­னெ­டுக்க முடி­யாது. அதா­வது முத­லீ­டுகள், நன்கொ­டை­கள்,பங்­க­ளிப்­பா­ளர்­களின் நிதி நன்­கொ­டை­கள், கட்­ட­ணங்கள் என எந்­த­வ­கை­யி­லான வரு­மா­ன­மாக இருப்­பினும் அவை கல்­லூரி நிதி­யத்தில் வைப்புச் செய்­யப்­பட்டு, முகா­மைத்­துவ சபையின் அனு­ம­தியின் பிர­கா­ரமே செல­வு­க­ளுக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­படல் வேண்டும். அவ்­வாறு அனு­மதி இன்றி செல­வுக்­காக அந் நிதி பயன்­ப­டுத்­தப்­படக் கூடாது என அக்­கல்­லூ­ரியின் யாப்பில் 18 ஆவது அத்­தி­யாயம் கூறு­கின்­றது.

எனினும் அவ்­வாறு முகா­மைத்­துவ சபையின் அனு­ம­தி­யின்றி 50 மில்­லியன் ரூபா பணம் கையா­ளப்­பட்­டுள்­ள­தா­கவும், கொழும்பு 13 இல் உள்ள கல்­லூ­ரியின் சொத்­தான கட்­டிடம் ஒன்று 68 இலட்சம் ரூபா­வுக்கு விற்­கப்­பட்டு 40 இலட்சம் ரூபா­வுக்கு விற்­கப்­பட்­ட­தாக கணக்குக் காட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் மனு­தா­ரர்கள் மனு­வூ­டாக குற்றம் சுமத்­து­கின்­றனர். அத்­துடன் முகா­மைத்­துவ சபையின் உற­வினர் ஒரு­வரின் நிறு­வனம் கல்­லூ­ரியில் முத­லீ­டு­களை செய்­துள்­ள­தா­கவும், கொழும்பு 13 கட்­டி­டத்தை கொள்­வ­னவு செய்த முகா­மைத்­துவ சபை உறுப்­பினர் ஒரு­வரின் உற­வினர் 29 இலட்சம் ரூபா­வுக்கு முத­லீட்­டினை செய்­துள்­ள­தா­கவும் இவை எவற்­றுக்கும் முகா­மைத்துவ சபையின் அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை என மனு­தா­ரர்கள் கூறு­கின்­றனர். இது கல்­லூரி யாப்பின் 11 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு முரண் என்­பது அவர்­களின் நிலைப்­பா­டாகும்.

இந் நிலையில், கல் – எளிய முஸ்லிம் அரபுக் கல்­லூ­ரியில் இடம்­பெ­று­வ­தாக கூறப்­படும் நிதி முறை­கே­டுகள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு கடந்த மே 2 ஆம் திகதி குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கும் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக மனு­தா­ரர்கள் கூறு­கின்­றனர்.

புண்­ணிய நிறு­வ­ன­மாக அல்­லது அறக்­கட்­ட­ளை­யாக செயற்­பட வேண்­டிய கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி தற்­போது அதன் நோக்­கத்­துக்கு மாற்­ற­மாக இலாபம் ஈட்டும் நிறு­வ­னமாக மாற்­றப்­பட முயற்­சிக்­கப்­ப­டு­வ­தாக மனு­தா­ரர்கள் பர­வ­லாக குற்றம் சுமத்­து­கின்­றனர்.

அதன் பிர­தி­பலன், அக்­கல்­லூ­ரியின் குழந்­தைகள் நல பரா­ம­ரிப்பு பிரிவு முற்­றாக மூடப்­பட்­டுள்­ள­தா­கவும், ஆத­ர­வற்ற மாண­வி­யரை அர­வ­ணைக்க ஏற்­ப­டுத்­தப்­பட்ட பிரி­வுக்கும் மாண­வி­யரை உள்­வாங்­கு­வ­தையும் மட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் மனு­தா­ரர்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

இத­னை­விட கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரியில் கற்­கை­களை முன்­னெ­டுக்கும் மாண­வி­யரை அவர்­களின் செயற்­பா­டு­களை மையப்­ப­டுத்தி எந்த நியா­ய­மான கார­ணி­களும் இன்றி அங்­கி­ருந்து விலக்­கு­வ­தாக கூறும் மனு­தா­ரர்கள், சமய விழு­மி­யங்­க­ளுக்கு அமைய மாண­வி­யரை வளர்த்து எடுக்க வேண்­டிய பொறுப்­புள்ள நிறு­வனம் இவ்­வாறு பொறுப்­பற்று செயற்­ப­டு­வது அதன் நோக்­கங்­களை மீறும் செயல் என குறிப்­பி­டு­கின்­றனர்.

முஸ்­லிம்­களின் வக்பு சொத்­தாக கரு­தப்­படும் இந்த கல்­லூ­ரியில், மாண­வி­யரின் விடு­திகள் வரை நிர்­வாக சபை உறுப்­பி­னர்கள் சிலர் செல்வதாக சுட்டிக்காட்டும் மனுதாரர்கள், பெண் பிள்ளைகளின் விடுதி வரை அத்துமீறும் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.

க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுத இருந்த 17 வயது ஆதரவற்ற மாணவி ஒருவர், இவ்வாறு விடுதிக்குள் அத்துமீறியதாக கூறப்படும் முகாமைத்துவ சபை உறுப்பினர் ஒருவர் எனக் கூறப்படும் நபரின் இடையூறுகளுக்கு உள்ளானதால், கல்லூரியில் இருந்து சென்று, ரண்முத்துகல சிறைச்சாலையில் வைக்கப்பட்ட பின்னர் தற்போது எதிர்காலமே சூனியமாகி தொழில் ஒன்றில் ஈடுபடுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறு கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியில் தற்போதைய நிலைமையை மிகத் தெளிவாக படம்பிடித்துக்காட்டும் விதமாக இந்த மனு 98 விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றது.

நீதிமன்றம் முன் உள்ள வழக்கில் கூறப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் கவலையளிக்கும் நடக்கக் கூடாத ஆரோக்கியமற்ற விடயங்களாகும்.

எனவே வழக்கு விசாரணைகள் எவ்வாறிருப்பினும், முஸ்லிம் பெண்களின் கல்விச் சொத்தான கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் மீட்சி மற்றும் அதன் இருப்பு தொடர்ச்சியான சேவையை உறுதி செய்யும் விதமாக அதன் எதிர்காலம் அமைய அனைத்து தரப்புகளும் முன்வர வேண்டும் என்பதே இன்றைய தேவையாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.