டாக்டர் ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு

0 122

(எம்.எப்.அய்னா)
குரு­ணாகல் வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்­தி­ய­ராக கட­மை­யாற்­றிய சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுவை விசா­ர­ணைக்கு ஏற்­காது நிரா­க­ரிப்­ப­தாக உயர் நீதி­மன்றம் நேற்று முன் தினம் ­அ­றி­வித்­தது.

இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு நீதி­ய­ரசர் விஜித் மலல்­கொட தலை­மை­யி­லா­ன ­ய­சந்த கோதா­கொட மற்றும் அர்­ஜுன ஒபே­சே­க­ர ­ஆ­கியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் முன்­னி­லையில் பரி­சீ­லிக்­கப்­பட்­டது. இதன்­போதே இவ்­வாறு இம்­ம­னுவை விசா­ர­ணைக்கு ஏற்­காது நிரா­க­ரிக்க நீதி­ய­ர­சர்கள் தீர்­மா­னித்­தனர்.

வைத்­தியர் ஷாபி, உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 2 வாரங்­க­ளி­லேயே கைது செய்­யப்­பட்­ட­தா­கவும், 40 கோடி ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் சம்­பா­திக்­கப்­பட்ட வழி­முறை தொடர்­பில் ­வி­ளக்கம் கோரவும் அத­னுடன் தொடர்­பு­பட்ட விட­யங்­க­ளுக்­கா­கவும் அந்த சந்­தர்ப்­பத்தில் அவரை கைது செய்ய நியா­ய­மான கார­ணிகள் இருந்­த­தாக நீதி­மன்றம் கரு­து­வ­தா­க­வும் ­உயர் நீதி­மன்றம் மனுவை நிரா­க­ரித்து அறி­வித்­தது.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஊடாக தாக்கல் செய்­யப்பட்ட இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுவில் குரு­ணாகல் பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­பலால், பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, குரு­ணாகல் பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்­த ­கித்­சிறி ஜயலத்,  சி.ஐ.டி. பணிப்­பாளர், பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்ன, பாது­காப்பு செயலர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகி­யோரை பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

தான் வரு­மா­னத்தை மீறி சொத்து சேர்த்­துள்­ள­தாக குற்றம் சுமத்தி கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் ­த­டுத்து வைக்­கப்­பட்­ட­மை ­சட்ட விரோ­த­மா­னது என அறி­விக்­கு­மாறும், எந்த நியா­ய­மான கார­ணி­களும் இன்றி தான் கைது செய்­யப்­பட்­ட­மையை சட்ட விரோ­த­மா­னது என தீர்ப்­ப­ளிக்­கு­மாறும், மனு­தாரர் கோரி­யுள்ளார்.
அர­சி­ய­ல­மைப்பின் 12(1), 12(2), 13(1), 13 (2) மற்றும் 14(1)(ஏ) உறுப்­பு­ரைகள் ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்ள அடிப்படை உரிமைகள், தனது விடயத்தில் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறும் மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனுதாரருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா சட்டத்தரணி ஹபீல் பாரிசுடன் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.