பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கைவிடுக

கிழக்கு முஸ்லிம் சிவில் சமூகம் கோரிக்கை; இன்றேல் உயர் நீதிமன்றத்தை நாடவும் தீர்மானம்

0 172

(எம்.எஸ்.எம். நூர்தீன்)
நடை­மு­றையில் உள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை அர­சாங்கம் முற்­றாக இல்­லா­ம­லாக்­கு­வ­துடன் உத்­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தை முழு­மை­யாக கைவிட வேண்டும் என கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­திகள் கோரிக்கை விடுத்­துள்­ளனர். மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை மற்றும் திரு­கோ­ண­மலை மாவட்ட முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­திகள் ஒன்­றி­ணைந்து இக் கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளனர்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ள­னத்தின் ஏற்­பாட்டில் காத்­தான்­குடி அல்­மனார் மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் தொடர்­பான விழிப்­பூட்டல் நிகழ்­வி­லேயே இக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை மற்றும் திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களின் முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், சட்­டத்­த­ர­ணிகள், உல­மாக்கள், பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன பிர­தி­நி­திகள், மஜ்லிஸ் அஷ் ஷூரா பிர­தி­நி­திகள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்­டனர்.

இரண்டு அமர்­வு­க­ளாக நடை­பெற்ற இந் நிகழ்வில் முதல் அமர்வில் பயங்­க­ர­வாத தடைச் சட்ட விவ­கா­ரங்­களில் மிக நீண்­ட­கா­ல­மாக செயற்­பட்டு வரும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான ருஷ்தி ஹபீப், சுவஸ்­திகா அரு­லிங்கம் மற்றும் ரணிதா ஞான­ராஜா ஆகியோர் கலந்து கொண்டு இச் சட்­டத்தின் உள்­ள­டக்கம் மற்றும் அதன் பாதிப்­புகள் தொடர்பில் விளக்­க­ம­ளித்­தனர். இரண்­டா­வது அமர்வில், கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் இச் சட்டம் தொடர்­பான தமது நிலைப்­பா­டு­களை முன்­வைத்­த­துடன் எதிர்­கா­லத்தில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய செயற்­பா­டுகள் குறித்த கலந்­து­ரை­யா­டலும் இடம்­பெற்­றது.

கிழக்கு மாகா­ணத்தில் உள்ள சகல சிவில் சமூக அமைப்­பு­களும் இந்த விட­யத்தில் ஒரு­மித்த கருத்தில் உள்­ள­தா­கவும் கடந்த காலங்­களில் இந்த சட்டம் சிறு­பான்மை சமூ­கத்தை கடு­மை­யாக பாதித்­துள்­ளது என்றும் இதனால் எமது நாட்­டுக்கு பொருத்­த­மற்ற இந்த சட்­ட­மூலம் உட­ன­டி­யாக கைவி­டப்­பட வேண்டும் என அர­சாங்­கத்தை கோரு­வ­தா­கவும் இதன்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

முஸ்­லிம்கள் இந்த நாட்­டுக்கு எப்­போதும் விசு­வா­ச­மா­ன­வர்கள். இந்த நாட்டின் வளர்ச்­சிக்கும், பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கும் கணி­ச­மான பங்­க­ளிப்பை வழங்­கி­ய­வர்கள். அந்த அடிப்­ப­டையில் பயங்­க­ர­வா­தத்தை முற்­று­மு­ழு­தாக வெறுத்து எதிர்ப்­ப­வர்கள். இந்த சட்­ட­மூலம் ஒட்­டு­மொத்த இலங்­கை­யர்­க­ளுக்கும் பாதிப்பை உண்­டு­பண்ணும் என்ற அடிப்­ப­டை­யிலும் ஜன­நா­ய­கத்தை சித­ற­டிக்கும் சட்­ட­மென்ற வகையில் இந்த சட்­ட­மூ­லத்தை கைவிட வேண்டும் என்றும் இங்கு உரை­யாற்­றிய கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர்.

இந்தக் கலந்­து­ரை­யா­டலின் இறு­தியில் கூட்­டாக தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.
தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை அர­சாங்கம் முழு­மை­யாக வாபஸ் பெறு­வ­துடன் தற்­போது கொண்டு வர உத்­தே­சித்­துள்ள ஏ.ரி.ஏ. எனப்­படும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை முழு­மை­யாக கைவிட வேண்டும் எனும் கோரிக்கை பிர­தான தீர்­மா­ன­மாக நிறை­வேற்­றப்­பட்டு அறி­விக்­கப்­பட்­டது.

மேற்­படி தீர்­மா­னங்­களை அவ்வப் பிரதேச பள்ளிவாசல் சம்மேளனங்கள், மஜ்லிஸ் அஷ் ஷூரா அமைப்புகள், உலமா சபைகள் ஊடாக தனித்தனியாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்விடயங்கள் தொடர்பில் அரசின் பிரதிபலிப்பை அவதானித்து தேவைப்படும்பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.