சர்வகட்சி அரசாங்கத்துக்கான பேச்சுகள் ஆரம்பம் அதாவுல்லாஹ்வுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மு.கா., அ.இ.ம.கா. விருப்பம்

0 234

சர்­வ­கட்சி அர­சாங்­கத்தை அமைப்­பது தொடர்பில் அர­சியல் கட்­சி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல்கள் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்­றன. ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற குறித்த பேச்­சு­வார்த்­தை­களின் மூன்­றா­வது கலந்­து­ரை­யா­டல் தேசிய காங்­கி­ர­ஸுடன் இடம்­பெற்­ற­தோடு, அதன் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம். அதா­வுல்லா உள்­ளிட்ட குழு­வினர் இதில் கலந்­து­கொண்­டனர்.

மகா ­சங்­கத்­தினர் தலை­மை­யி­லான மதத் தலை­வர்கள், சிவில் அமைப்­புகள், இளைஞர் குழுக்கள் உட்­பட பொது­மக்கள் அனை­வரும் சர்­வ­கட்சி அர­சாங்­கத்தின் மீது பல­மான நம்­பிக்­கையும் எதிர்­பார்ப்பும் கொண்­டுள்­ளனர் என ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதன்­போது தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன மற்றும் ஆளும் கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்சித் தலை­வர்கள் மற்றும் உறுப்­பி­னர்கள் முதல் சுற்றுக் கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்­ட­துடன் இரண்­டா­வது கலந்­து­ரை­யாடல், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸுடன் இடம்­பெற்­றது.

மூன்­றா­வது கலந்­து­ரை­யாடல் தேசிய காங்­கி­ர­ஸுடன் இடம்­பெற்­ற­தோடு, அதன் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எல்.எம். அதா­வுல்லா உள்­ளிட்ட குழு­வினர் இதில் கலந்­து­கொண்­டனர்.

சர்­வ­கட்சி அர­சாங்­கத்தை அமைப்­பது தொடர்பில் ஜனா­தி­ப­தி­ ஐக்­கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட பல கட்­சிகள் இணக்கம் தெரி­வித்­துள்­ளன.

இந்த கலந்­து­ரை­யா­டலில் பிர­தமர் தினேஷ் குண­வர்­தன, ஜனா­தி­ப­தியின் செய­லாளர் சமன் ஏக்­க­நா­யக்க, ஜனா­தி­ப­தியின் மேல­திக செய­லாளர் சட்­டத்­த­ரணி சமிந்த குல­ரத்ன மற்றும் பலர் கலந்­து­கொண்­டனர்.

இத­னி­டையே, நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு தீர்வு காண்­ப­தற்­காக ஜனா­தி­பதி மேற்­கொள்ளும் சிறந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்க்­கட்­சியில் அனைத்துத் தரப்­பி­ன­ரோடும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தமது ஒத்­து­ழைப்பை வழங்க தயா­ராக இருக்­கின்­றது. அத்­துடன் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண ஒன்­றி­ணைந்து வேலைத்­திட்­டங்­களை அமைப்­பது தொடர்பில் ஜனா­தி­ப­தியின் கடிதத்­துக்கு சாத­க­மான பதிலை அனுப்­பு­வ­தற்கு எதிர்­பார்க்­கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று இடம்­பெற்ற ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

மேலும், அனைத்து தரப்­பி­ன­ரதும் யோச­னை­களை பெற்றுத் தரு­மாறு இப்­போதும் அவர் கடிதம் மூலம் எமக்குத் தெரி­வித்­துள்ளார். அவ­ரது வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க அவ­ரது ஆலோ­ச­னை­க­ளுடன் மேலும் சில விட­யங்­களை உள்­ள­டக்கி நாட்டை முன்­னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் நாம் எமது யோச­னை­களை அவ­ருக்குத் தெரி­விக்­க­வுள்ளோம்.

அதன் பின்னர் எதிர்க்­கட்­சியில் அனைத்து தரப்­பி­ன­ரி­டமும் பேச்­சு­வார்த்தை நடத்தி அதற்­கான உரிய செயற்­பா­டு­களை நாம் மேற்­கொள்வோம்.

நாம் கட்சி ரீதி­யாக ஜனா­தி­ப­தியின் கடி­தத்­திற்குப் பதில் வழங்கத் தயா­ராகவுள்ளோம். அதன் பின்னர் எதிர்க்­கட்­சியில் ஏனைய கட்­சி­க­ளு­டனும் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு தீர்வு பெற்றுக் கொள்­வதில் ஒத்­து­ழைப்பு வழங்­குவோம்.
அனைத்துக் கட்­சி­களும் ஜனா­தி­பதி மேற்­கொள்ளும் சிறந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும். அதே­வேளை எமது கட்­சியின் ஒத்­து­ழைப்­பையும் நாம் வழங்­குவோம் என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதி­னி­டையே, நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் ஜனா­தி­பதியின் நல்ல வேலைத்­திட்­டங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். மாறாக அர­சாங்­கத்தில் இணைந்து அமைச்­சுப்­ப­த­வி­களை பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் நாங்கள் யாரும் கலந்­துரை­யா­டவும் இல்லை. அது­தொ­டர்பில் அழைப்பு வரவும் இல்லை என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், ஜனா­தி­ப­தியின் கொள்கை உரையை நாங்கள் வர­வேற்­கின்றோம். நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் அவ­ரது நல்ல வேலைத்­திட்­டங்­க­ளுக்கு நாங்கள் ஆத­ர­வ­ளிப்போம். அத்­துடன் அர­சாங்­கத்தில் இணைந்­து­கொண்டு அமைச்­சுப்­ப­த­வி­களை பெற்­றுக்­கொள்­ளு­மாறு எமக்கு எந்த கோரிக்­கையும் வரவும் இல்லை. அது­தொ­டர்­பாக எந்த பேச்­சு­வார்த்­தையும் இடம்­பெ­றவும் இல்லை. மாறாக சர்வ கட்சி வேலைத்­திட்­டத்­துக்கு வரு­மாறு கடிதம் ஒன்று அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. அதற்கு இணக்கம் தெரி­வித்து பதில் கடிதம் அனுப்பி இருக்­கின்றோம்.

சர்வ கட்சி வேலைத்­திட்டம் தொடர்பில் கலந்­து­ரை­யாட வரு­மாறு எமக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. நாளை வெள்­ளிக்­கி­ழமை நாங்கள் இது­தொ­டர்பில் ஜனா­தி­ப­தியை சந்தித்து கலந்துரையாடுவோம். அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்போம் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.