இன, மதவாத கொள்கைக்கு எதிராக செயற்படுவேன்

நாட்டில் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக முஸ்லிம்-சிங்கள -தமிழர்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தினர்

0 212

(எம்.ஆர்.எம்.வசீம்)
பேதங்கள் மூலம் எமது நாடு முற்­காலம் தொட்டு பின்­ன­டை­வு­க­ளுக்கு உள்­ளா­னது. அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக சில தரப்­பி­னர்கள் இப்­பி­ரி­வினை மேலும் விஸ்­த­ரித்­தனர். முஸ்­லிம்­க­ளுக்கும் சிங்­க­ள­வர்­க­ளுக்கு இடையே பிரச்­சி­னை­களை உரு­வாக்­கி­ய­துடன் தமிழ்ர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடை­யிலும் குரோ­தங்­களை தோற்­று­வித்­தனர். பிரி­வு­க­ளற்ற இலங்­கை­யெனும் ஆள­டை­யா­ளத்தைக் கொண்ட சமூ­க­மொன்­றினை உரு­வாக்க முயற்­சித்­ததால் நான், அர­சியல் ரீதி­யாக தோல்­வி­களை சந்­தித்தேன். விமர்­ச­னங்­க­ளுக்கு ஆளானேன். இன­வா­தி­க­ளுக்கும். சம­ய­வா­தி­க­ளுக்கும் எதி­ராக தொடர்ச்­சி­யாக ஈடு­பட்­ட­மையால் சில தேசத்­து­ரோ­கி­யா­கவும் சமய எதி­ரி­யா­கவும் அவ­தூ­றுக்கு உட்­பட்டேன். எனினும் நான் எனது கொள்­கையில் இருந்து விலகிச் செல்­ல­வில்லை. ஒரு­போதும் நான் அந்­தக்­கொள்­கை­யி­லி­ருந்து வில­கவும் மாட்டேன் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்­றத்தின் மூன்­றா­வது அமர்வை நேற்று காலை ஆரம்­பித்து வைத்த ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது கொள்கை பிரக­டன உரையை ஆற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது அவர் மேலும் தெரி­விக்­கையில், நான் கஷ்­டத்தில் விழுந்­தி­ருந்த ஒரு நாட்­டையே பொறுப்­பேற்றேன். கடு­மை­யான பொரு­ளா­தாரப் பிரச்­சினை ஒரு­புறம். பாரிய மக்கள் எதிர்ப்பு மறு­புறம். எனினும் நாட்­டுக்­காக இந்த கடி­ன­மான சவாலை பொறுப்­பேற்க நான் தீர்­மா­னித்தேன். அதற்குக் காரணம் இரு­ளுக்கு சாப­மிட்­டு­கொண்டு இருப்­பதை விட ஒரு விளக்­கி­னை­யேனும் ஏற்­று­வது நாட்­டிற்­காக நான் செய்யும் கடமை என நான் கரு­தி­ய­மை­யாகும்.

எனவே சர்­வ­கட்சி அர­சாங்கம் ஒன்­றினை அமைப்­ப­தற்­காக ஒன்­றி­ணை­யு­மாறு நான் மீண்டும் இந்த பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அனைத்துத் தரப்­பி­ன­ரிடம் வேண்­டுகோள் விடுக்­கின்றேன். நான் உங்கள் அனை­வ­ருக்கும் நட்பின் கரத்தை கௌர­வத்­துடன் நீட்ட விரும்­பு­கின்றேன். கடந்த காலத்­தினை பின்­தள்­ளி­விட்டு நாட்­டினைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக ஒன்­றி­ணை­யு­மாறு நம்­பிக்­கை­யுடன் அழைப்பு விடுக்­கின்றேன். சர்­வ­கட்சி அர­சாங்கம் பற்றி அர­சியல் கட்­சி­க­ளுடன் நடாத்தும் பேச்­சு­வார்த்­தை­யினை நான் ஏற்­க­னவே ஆரம்­பித்­துள்ளேன்.

தற்­போ­துள்ள மின் வெட்­டினை குறைத்­துக்­கொள்ள எம்மால் முடிந்­துள்­ளது. பயிர்ச் ­செய்­கைக்­காக எதிர்­கா­லத்தில் தேவைப்­படும் உரத்தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான பணிகள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. சமையல் எரி­வாயு பிரச்­சினை தற்­போது முழு­மை­யாக தீர்க்­கப்­பட்­டு­வரும் நிலையில் உள்­ளது. வரி­சையில் காத்­தி­ருக்­காது சமையல் எரி­வா­யுவை இன்னும் சில தினங்­களில் அனை­வ­ராலும் பெற்­றுக்­கொள்ள முடியும். உணவுத் தட்­டு­ப்பா­டொன்று ஏற்­ப­டா­த­வாறு அனைத்து பாது­காப்பு நட­வ­டிக்­கைகளும் எடுக்­கப்­பட்­டுள்­ளன. மருத்­து­வ­ம­னை­க­ளுக்குத் தேவை­யான மருந்து வகைகள் மற்றும் மருத்­துவ உப­க­ர­ணங்கள் என்­ப­வற்­றினைக் கொள்­வ­னவு செய்யும் பணி ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பாட­சா­லை­களை மீண்டும் திறப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. கைத்­தொ­ழில்கள் மற்றும் ஏற்­று­மதித் துறை என்­ப­வற்­றிற்கு ஏற்­பட்­டுள்ள தடை­களை அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

மீளெழும் முயற்சியிலே எமது அயல் நாடான இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக நான் விசேடமாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் எமக்கு வழங்கிய உயிர் மூச்சுக்கு நான் இலங்கை மக்கள் சார்பாக பிரதமர் மோடிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

தற்­போது எமது முன்னால் உள்ள குறுங்­கால பிரச்­சினை எரி­பொருள் தட்­டுப்­பா­டாகும். எரி­பொ­ருளை கொண்டு வரு­வ­தற்­காக ஏனைய நாடு­க­ளி­ட­மி­ருந்து கடன் உத­விகள் கிடைக்கும் வரையில் காத்­தி­ருக்கும் முறை­மை­யிலே நாம் முடி­வுக்கு கொண்டு வருதல் வேண்டும். எனவே எமது நாட்டின் ஏற்­று­மதி வரு­மானம் மற்றும் வெளி­நாட்டு நாண­ய­மாற்று ஊடாக எரி­பொ­ருளை கொண்டு வரு­வ­தற்­கான முறைமை ஒன்­றினை நாம் ஆரம்­பிக்க உள்ளோம். இதன் போது எரி­பொ­ரு­ளுக்­கான கொடுப்­ப­ன­வினை சமப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக தேர்ந்­தெடுக்கப்பட்ட இறக்­கு­ம­தி­களை வரை­ய­றுத்­துக்­கொள்ள வேண்­டியும் எமக்கு ஏற்­படும். மறு­பு­ற­மாக எரி­பொருள் விநி­யோ­கத்தை மட்­டுப்­ப­டுத்த வேண்­டியும் ஏற்­படும். எனவே இந்த ஆண்டின் இறுதி வரையில் இந்த கஷ்­டத்­தினை நாட்­டுக்­காக நாம் தாங்­கிக்­கொள்ளல் வேண்டும்.

இந்த கஷ்­டங்­க­ளி­லி­ருந்து மீளுவ­தற்­கு நாம் நீண்ட கால தீர்­வு­களை நோக்கிப் பய­ணித்தல் வேண்டும். மீண்டும் ஒரு­போதும் எமது நாட்­டிலே இவ்­வா­றான பொரு­ளா­தார நெருக்­க­டி­யொன்று எமது நாட்­டிலே ஏற்­ப­டா­த­வாறு பல­மிக்க அடித்­தள­மொன்­றினை இடுதல் வேண்டும். பொரு­ளா­தா­ரத்தை நவீ­ன­ம­யப்­ப­டுத்­துதல் வேண்டும். பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மை­யினை ஏற்­ப­டுத்தி, போட்­டித்­தன்­மை­மிக்க சந்தைப் பொரு­ளா­தாரம் ஒன்றின் பக்கம் மாற்­றி­ய­மைத்தல் வேண்டும். அவற்­றிற்குத் தேவை­யான அறிக்­கைகள், திட்­ட­மிடல், சட்­ட­திட்­டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்­டங்கள் என்­ப­வற்­றினை தற்­போது நாம் தயா­ரித்து வரு­கின்றோம்.

நாம் நடை­மு­றைப்­ப­டுத்தும் செயல்­திட்­டங்கள் தொடர்­பான விப­ர­மான தக­வல்கள் எதிர்­கா­லத்தில் பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­படும் இடைக்­கால வர­வு­செ­லவு மற்றும் 2023 ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­லவுத் திட்­டத்­தி­னூ­டாக முன்­வைக்­கப்­படும்.
கடந்த காலத்தில் வெளி­நாட்டு ஊழி­யர்கள் இலங்­கைக்கு அனுப்பும் நிதியின் அளவு குறைந்­து­விட்­டது. அதற்குப் பல கார­ணங்கள் உள்­ளது. கொவிட் தொற்­றுப்­ப­ரவல் கார­ண­மாகப் பல தொழில்கள் இல்­லாது போனது. தொழில்­க­ளுக்­காக வெளி­நாடு செல்வோர் குறைந்­துள்­ளனர். ரூபாயின் பெறு­ம­தியைச் செயற்­கை­யாகக் கட்­டுப்­ப­டுத்­தி­யதன் கார­ண­மாக வேறு முறை­க­ளின்­மூலம் இலங்­கைக்கு பணம் அனுப்­புதல் மிகவும் இலா­ப­க­ர­மா­ன­தாக இருந்­தது. தற்­போது படிப்­ப­டி­யாக இந்­நி­லைமை மாற்­ற­ம­டைந்து வரு­கின்­றது. வங்கி முறை­மை­யி­னூ­டாக இலங்­கைக்குப் பணம் அனுப்­பு­தலை ஊக்­கு­விப்­ப­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுப்போம்.

இலங்கை தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காகப் பாடு­ப­டும்­போது சம்­பி­ர­தாய சிந்­த­னை­யி­லி­ருந்து விடு­ப­டு­மாறு நான் சகல தரப்­பி­ன­ரி­டமும் கேட்­டுக்­கொள்­கின்றேன்.
இந்­தி­யா­வோடு ஒன்­றி­ணைந்து திரு­கோ­ண­மலை எண்­ணெய்த்­தாங்கித் தொகு­தி­யினை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கும்­போது இந்­தி­யா­வுக்கு இலங்­கையை விற்­கின்­றார்கள் என்று கூறி அபி­வி­ருத்தித் திட்­டத்­துக்கு இடை­யூறு விளை­வித்­தனர். அன்று எமக்கு எண்­ணெய்த்­தாங்கித் தொகு­தி­யினை அபி­வி­ருத்தி செய்­து­கொள்­வ­தற்குச் சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருப்பின் இன்று மக்­க­ளுக்கு எரி­பொருள் வரி­சை­களில் நீண்­ட­நாட்கள் அலை­வ­தற்கு அவ­சியம் ஏற்­பட்­டி­ருக்­காது.

சுவ­செ­ரிய நோய் காவு வண்­டி­களின் சேவையை ஆரம்­பிக்­கும்­போது அதே­போன்று எதிர்ப்­பு­களைச் செய்­தார்கள். சுவ­செ­ரிய நோய் காவு வண்­டிகளில் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு வந்தால் ஏற்­ப­டு­வது மரணம் எனக்­கூறி சில வைத்­தி­யர்கள் ஊடகக் கலந்­து­ரை­யா­டல்கள் நடத்­தி­னார்கள். ஆனாலும் நாம் எவ்­வா­றா­யினும் சுவ­செ­ரி­யவை ஆரம்­பித்­த­தனால் தற்­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உயிர்கள் பாது­காக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு குறு­கிய அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக மக்­களை வழி­த­வறி நடத்தி தடை­செய்த கருத்­திட்­டங்கள் கார­ண­மாக எமது பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பு அழி­வ­டைந்­தது.
இலகு புகை­யி­ரதச் சேவையைத் தாபிப்­ப­தற்கும், துறை­மு­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் ஜப்பான் நாடு முன்­வந்த சந்­தர்ப்­பத்தில் அதற்­கெ­தி­ராக அடிப்­ப­டை­யற்ற வீணான கார­ணிகள் பல­வற்றை எடுத்­துக்­காட்­டி­யதன் கார­ண­மாக எமது நாட்­டுக்குக் கிடைப்பதற்கிருந்த 3 பில்லியன் டொலருக்கு அதிகமான அளவு கிடைக்காமல் போயிற்று. அதுமட்டுமன்றி ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையே இருந்த நீண்டகால நட்பு சிதறிப்போனது.

நான் இவ்­வா­றான நீண்­ட­கால இலக்­கு­க­ளுக்குத் திட்­டங்­களைத் தயா­ரிக்­கும்­போது சிலர் பரி­கா­ச­மாகப் பார்க்­கின்­றார்கள். கேலிக்­க­தைகள் சொல்­கின்­றனர். ஆம். நான் ஏனைய அர­சி­யல்­வா­திகள் போன்­றவரல்ல. என்­னிடம் இருப்­பது நீண்­ட­காலத் திட்­டங்கள். நான் திட்­ட­மி­டு­வது எனது முன்­னேற்­றத்­துக்­காக அல்ல. இளைஞர் சமு­தா­யத்­துக்­கா­கவே. நாளைய நாளுக்­கா­கவே. நான் இன்று நாட்டும் மரத்தின் அறு­வ­டையை எனக்கு அனு­ப­விக்க கிடைக்­காது என்­பதை நான் நன்­றாக அறிவேன். ஆனாலும் நாளைய தினம் எமது பிள்­ளை­க­ளான எதிர்­காலப் பரம்­ப­ரைகள் அந்த அறு­வ­டையை அனு­ப­விப்­பார்கள்.

எமது நாட்டின் வெளி­நாட்டுக் கொள்கை தொடர்­பிலும் விசே­ட­மாகக் குறிப்­பிட நான் விரும்­பு­கின்றேன். வெளி­நாட்டுக் கொள்­கையில் உறு­தி­யற்ற தன்மை கார­ண­மாக எமக்கு சர்­வ­தேச மட்­டத்தில் அதி­க­ள­வி­லான இழப்­பீ­டுகள் மற்றும் பின்­ன­டை­வுகள் ஏற்­பட்­டன. நான் இந்த நிலை­மையை மாற்­றுவேன். உல­கத்தில் சகல நாடு­களும் எனது நண்­பர்கள். எமக்கு எதி­ரா­ளிகள் இல்லை. நாம் எந்­த­வொரு கட்­சி­யையும் சேர்ந்­த­வர்கள் அல்லர். சகல நாடு­க­ளோடும் நட்­பு­ ரீ­தி­யான கொள்­கையைப் பின்­பற்­று­வ­தனை நான் உறு­திப்­ப­டுத்­து­கின்றேன்.

சுபீட்­ச­மான இலங்­கை­யொன்றைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காகப் பொரு­ளா­தார மேம்­ப­டுத்­த­லுக்குச் சமாந்­தி­ர­மாக சமூக மற்றும் அர­சியல் மறு­சீ­ர­மைப்­புகள் பல­வற்றைச் செய்­ய­வேண்­டு­மென நான் இதற்­கு­முன்பும் வலி­யு­றுத்­தி­யுள்ளேன். எமது நாட்டின் மக்­களும் பாரிய அர­சியல் மறு­சீ­ர­மைப்புச் செயற்­பா­டொன்றை எதிர்­பா­ர்க்­கின்­றனர்.
இலங்கை நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்குத் தேவை­யான சகல மாற்­றங்­க­ளையும் செய்­வ­தற்கு நான் நட­வ­டிக்கை எடுப்பேன். நாடு கேட்கும் சமூக மற்றும் அர­சியல் மறு­சீ­ர­மைப்­பு­களை நான் நடை­மு­றைப்­ப­டுத்­துவேன்.

ஆட்சி முறையில் மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்தும் நோக்கில், நாடு பூராக ஆங்­காங்கே ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்­டங்­கள் ­பிற்­கா­லத்­தில் ­கா­லி­ மு­கத்­தி­டலில் கேந்­தி­ர­மா­னது. நாட்டின் பிர­தான நக­ரங்கள் சில­வற்­றுக்கும் அது வியாபித்­தது. இந்தப் போராட்­ட­மா­னது மிகவும் அஹிம்­சை­யா­கவும் ஆக்­க­பூர்­வ­மா­கவும் இடம்­பெற்­றது. இப்­போ­ராட்­டக்­கா­ரர்­கள் ­எந்­த­வொரு வன்­மு­றை­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை. அதன் கார­ண­மா­க­வே ­கு­டும்பம் குடும்­ப­மாக வந்து போராட்­டத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கினர். சிறு குழந்­தை­க­ளையும் போராட்ட பூமிக்கு அழைத்து வரு­வ­தற்கு பெற்­றோர்கள் அச்சம் கொண்­டி­ருக்­க­வில்லை.
ஒரு சந்­தர்ப்­பத்தில் போராட்­டக்­கா­ரர்கள் ஜனா­தி­பதி செய­ல­கத்­தின் ­சுவர்­களில் எந்­த­வி­த­மான பாதிப்பும் இல்­லா­த­வா­று ­டி­ஜிட்டல் முறையில் சித்­திரம் வரைந்­தனர். ஆனால் அதன்­பின்னர் இப்­போ­ரட்டத்தில் அஹிம்­சா­வாதம் கீழ்­ப­டிந்து வன்­முறை மேலெ­ழுந்­தது. ஒரு சில குழுக்­கள் ­போ­ராட்­டத்தின் ஒற்­று­மையை மிதித்­து ­போ­ராட்­டத்தின் உரி­மை­யா­ளர்­க­ளா­க ­மா­றினர். அவர்கள் அன்­பிற்கு பதி­லாக போராட்­டத்தில் வன்­மு­றையை திணித்­தனர். நான் ஒரு­போதும் வன்­முறை மற்றும் பயங்­க­ர­வா­தத்­திற்கு இட­ம­ளிக்­க­மாட்டேன். ஆயினும் அஹிம்சை மற்றும் ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்பேன். அமை­தி­யாக போராட்­டத்தில் ஈடு­ப­டு­வது அடிப்­படை உரி­மை­யாகும். அந்த உரி­மையை நான் ஏற்­றுக்­கொள்­கிறேன்.

நான் இந்தப் போராட்­டக்­கா­ரர்­க­ளை ­வேட்­டை­யாடப் போவ­தாக ­பா­ரிய பிரச்­சா­ரத்தை சில குழுக்கள் சமூக ஊட­கங்­களின் வாயி­லாக பரப்ப முயற்­சித்து வரு­கின்­றனர். ஆயினும் அது ­உண்­மை­யல்ல. நான் அமை­தி­யான போராட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எந்­த­வொரு வகை­யிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்த இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. அமை­தி­யான போராட்­டக்­கா­ரர்­களைப் பாது­காக்­கவும், அவர்­க­ளுக்­காக முன்­வ­ரு­வ­தற்கும் நான் விசேட செய­ல­ணி­யொன்றை தாபிப்பேன்.

மே 09 ஆம் திகதி அமை­தி­யான போராட்­டக்­கா­ரர்கள் மீது தாக்­குதல் நடத்­திய நபர்கள் மற்­றும் ­போ­ராட்­டத்தின் பெயரில் வன்­முறை மற்றும் பயங்­க­ர­வா­தத்­தை ­ப­ரப்பும் நபர்கள் குறித்தும் அதே­போன்று சட்­டத்தை அமுல்­ப­டுத்­துவேன். இந்தச் செயற்­பாட்­டின்­போ­து ­எந்த ஒரு அர­சியல் அழுத்­தம் ­இ­டம்­பெ­றாத வகையில் பொறுப்­புக்­கூ­றுவேன்.

அர­சியல் கட்சி முறை பற்றி நாம் புதி­தாக சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. கட்­சி­களின் செயற்­பா­டா­னது எதிர்­கா­லத்­திற்கு பொருந்­தக்­கூ­டி­ய­வாறு மாற்­றி­ய­மைக்­கப்­ப­டுதல் வேண்டும். அர­சியல் என்று நாம் இன்று நினைத்­துக்­கொண்­டி­ருப்­பவை, அர­சியல் என்று நாம் இன்று மேற்­கொள்­பவை அனைத்­தையும் அதே விதத்தில் நாம் முன்­னெ­டுத்துச் செல்­வதா என சிந்­தித்தல் வேண்டும். அர­சியல் கல்வி பற்றி ஆழ­மாக கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

தற்­போது தேர்தல் ஆணைக்­குழு, அர­சாங்க சேவைகள் ஆணைக்­குழு, பொலிஸ் ஆணைக்­குழு, நீதிச் சேவைகள் ஆணைக்­குழு உள்­ளிட்ட அனைத்­திற்கும் உறுப்­பி­னர்­களை நிய­மிக்கும் பூரண உரிமை ஜனா­தி­ப­திக்கே உண்டு. அது சன­நா­ய­கத்­திற்கு உகந்த நிலை ஒன்­றல்ல என்­ப­தனை நான் நேர­டி­யாக குறிப்­பிட விரும்­பு­கின்றேன். நாம் அந்த நிலை­யினை மாற்­றி­ய­மைத்தல் வேண்டும். தற்­போது ஜனா­தி­ப­தி­யிடம் இலங்­கையின் ஆதி­கா­லத்தில் அரசர் ஒரு­வ­ரிடம் இருந்த அதி­கா­ரங்­களை விடவும் அதி­க­மான அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அதனை உட­ன­டி­யாக மாற்றி அமைத்தல் வேண்டும்.
ஒரு நாட்டின் ஜனா­தி­பதி என்­பவர் மக்­க­ளுக்கு மேலால் வாழு­கின்ற அர­ச­ராக அல்­லது கட­வு­ளாக இருக்க வேண்­டி­ய­தில்லை. அவரும் பிர­ஜையில் ஒருவர். எனவே தனி­யான கொடி, இலச்­சினை, தனி­யான கௌர­வங்கள் மூலம் புனி­தத்­தன்­மைக்கு ஆளாக்க வேண்­டி­ய­தில்லை.

அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு செயற்­பாட்டின் ஆரம்­ப­மாக, 19 ஆவது திருத்­தத்­தி­லி­ருந்த அனைத்து நேர்­ம­றை­யான விட­யங்­க­ளையும் உள்­ள­டக்கி 22 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தை நிறை­வேற்­றிக்­கொள்ள நாம் எதிர்­பார்க்­கின்றோம். அதற்­காக இந்த சபையின் முழு­மை­யான ஆத­ர­வினை நான் எதிர்­பார்க்­கின்றேன்.

பேதங்கள் மூலம் எமது நாடு முற்­காலம் தொட்டு பின்­ன­டை­வு­க­ளுக்கு உள்­ளா­னது. நாம் இன ரீதி­யாக பிரிந்தோம், மொழி ரீதி­யாக பிரிந்தோம், சமய ரீதி­யாக பிரிந்தோம். கட்சி ரீதி­யாக பிரிந்தோம். வகுப்பு ரீதி­யாக பிரிந்தோம், பூகோள ரீதி­யா­கவும் பிரிந்தோம், குல ரீதி­யா­கவும் பிரிந்தோம்.

சில தரப்­பி­னர்கள் இப்­பி­ரி­வினையை மேலும் விஸ்­த­ரித்­தனர். அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இவ்­வா­றான பிள­வு­களை பயன்­ப­டுத்­தினர். பிரித்து ஆள்­வதன் அனு­கூ­லத்தை அனு­ப­வித்­தனர். முஸ்லிம் மக்­க­ளுக்கும் சிங்­கள மக்­க­ளுக்கும் இடையில் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கினர். தமிழ் மக்­க­ளுக்கும் முஸ்லிம் மக்­க­ளுக்கும் இடையில் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கினர். இவ்­வாறு இன ரீதி­யாவும் சமய ரீதி­யா­கவும் பல்­வேறு வித­மான பிள­வு­களை ஏற்­ப­டுத்தி அதி­கா­ரத்தை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்கு முயற்­சித்­தனர்.

1977 இல், அர­சி­யலில் பிர­வே­சித்த நாள் முதல் எனக்கு தேவைப்­பட்ட ஒரு விடயம் இவ்­வா­றான பிரி­வு­க­ளற்ற இலங்­கை­யெனும் ஆள­டை­யா­ளத்தைக் கொண்ட சமூ­க­மொன்­றினை உரு­வாக்­கு­வ­தாகும். ஒரு ­தாயின் பிள்­ளை­க­ளாக ஒற்­று­மை­யாக வாழக்­கூ­டிய தேச­மொன்றை உரு­வாக்­கு­வ­தாகும். இம்­மு­யற்­சியில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்­டதன் கார­ண­மாக நான் அர­சியல் ரீதி­யாக தோல்­வி­களை சந்­தித்தேன். தோல்­வி­களை சந்­தித்தேன். சிங்­கள பேரி­ன­வா­தி­களின் மாத்­தி­ர­மன்றி, தமிழ், முஸ்லிம் பேரி­ன­வா­தி­களின் விமர்­ச­னங்­க­ளுக்கு ஆளானேன். இன­வா­தி­க­ளுக்கும். சம­ய­வா­தி­க­ளுக்கும் எதி­ராக தொடர்ச்­சி­யாக ஈடு­பட்­ட­மையால் சில அர­சியல் கட்­சிகள் என்னை தேசத்­து­ரோ­கி­யா­கவும் சமய எதி­ரி­யா­கவும் அவ­தூ­றுக்கு உட்­ப­டுத்­தின. எனினும் நான் எனது கொள்­கையில் இருந்து விலகிச் செல்­ல­வில்லை. ஒரு­போதும் நான் அந்­தக்­கொள்­கை­யி­லி­ருந்து வில­கவும் மாட்டேன்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.