கானல் நீராகும் தீர்வு

0 339

நாட்டின் அர­சியல், பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்­பிக்கை கானல் நீரா­கவே உள்­ளது. சம­கால தேசிய அர­சியல் நகர்­வு­களை நோக்­கு­மி­டத்து, கிட்­டிய எதிர்­கா­லத்தில் ஆக்­க­பூர்­வ­மான விட­யங்கள் எதுவும் நடக்கப் போவ­தில்லை என்­பது மாத்­திரம் உறு­தி­யா­கி­றது.

ரணில் விக்­ர­ம­சிங்க தனது பிர­தமர் பத­விக்கு மேல­தி­க­மாக நிதி­ய­மைச்­ச­ரா­கவும் நேற்­றைய தினம் பொறுப்­பேற்­றுள்ளார். நாடு எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு தீர்வு காணும் வகையில் ரணில் விக்­ர­ம­சிங்க அண்­மையில் பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­றி­ருந்தார். இத­னை­ய­டுத்து, சர்­வ­தேச நாடு­க­ளுடன் உள்ள உற­வு­களைப் பயன்­ப­டுத்தி இலங்­கைக்குத் தேவை­யான உத­வி­களை ரணில் கொண்டு வருவார் என்ற எதிர்­பார்ப்பு அனைவர் மத்­தி­யிலும் மேலோங்­கி­யது. அவர் பத­வி­யேற்­றதைத் தொடர்ந்து ஒரு சில உத­விகள் நாட்டை வந்­த­டைந்­ததும் உண்­மைதான். இந்­தியா வழங்கும் 200 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான மருத்­துவ உத­வியும் நாளை இலங்­கையை வந்­த­டை­ய­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எனினும் ரணில் எதிர்­பார்த்த வகையில் வெளி­நாட்டு உத­விகள் இலங்­கைக்கு கிடைக்கப் பெற­வில்லை. கோத்­தா­பய ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாக இருக்கும் வரை உத­வி­களை வழங்­கு­வது பற்றிச் சிந்­திக்க முடி­யாது என பல நாடுகள் கைவி­ரித்­து­விட்­ட­தாக அறிய முடி­கி­றது. மக்கள் கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு மேலாக ஜனா­தி­ப­தியை பதவி விலகக் கோரி போராடி வரு­கின்ற நிலையில், அந்தக் கோரிக்­கையை நிறை­வேற்­றிய பின்­னரே உத­விகள் குறித்துச் சிந்­திக்­கலாம் என அந்­நா­டுகள் நிபந்­தனை விதித்­துள்­ளன. மத்­திய கிழக்கு நாடு­களும் இதே நிலைப்­பாட்­டி­லேயே உள்­ள­தாக இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் கூறு­கின்­றன.

இத­னி­டையே, நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி நாளுக்கு நாள் மோச­ம­டைந்து செல்­வ­தையே அவ­தா­னிக்க முடி­கி­றது. மீண்டும் எரி­பொருள் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து சகல பொருட்­க­ளி­னதும் விலைகள் சடு­தி­யாக உயர்­வ­டைந்­துள்­ளன. பண­வீக்கம் விரைவில் 40 வீத­மாக அதி­க­ரிக்கும் என்­பதை மத்­திய வங்கி ஆளு­நரும் பிர­த­மரும் உறு­தி­படத் தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த திங்கட் கிழமை இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபனம் ஏற்­பாடு செய்த நிகழ்­வொன்றில் உரை­யாற்­றிய இலங்கை மத்­திய வங்­கியின் ஆளுநர் கலா­நிதி நந்­தலால் வீர­சிங்க தெரி­வித்த கருத்­துக்கள் நாட்டின் எதிர்­கால பொரு­ளா­தார நிலை­மைகள் குறித்த அச்­சத்தை மேலும் அதி­க­ரிப்­ப­தாக உள்­ளன.

“சர்­வ­தேச நாணய நிதி­யத்­து­ட­னான பேச்­சு­வார்த்­தை­களின் மூலம் அத­னு­ட­னான செயற்­திட்டம் வெற்­றி­ய­ளிக்­கு­மே­யானால், அடுத்த வரு­ட­ம­ளவில் நாட்டின் பொரு­ளா­தாரம் மீட்­சி­ய­டையும் என்று எதிர்­பார்க்­க­மு­டியும். இருப்­பினும் பண­வீக்­க­மா­னது 30 – முதல் 40 சத­வீ­த­மா­கவே தொடர்ந்து காணப்­படும். அதனை மத்­திய வங்­கி­யினால் குறைக்க முடி­யாது. இதன் விளை­வாக வறி­ய­வர்கள் வெகு­வாகப் பாதிப்­ப­டைய நேரும் என்­ப­துடன், மேலும் பலர் வறு­மைக்குத் தள்­ளப்­ப­டுவர்.

இறக்­கு­ம­திகள் மூல­மான செல­வி­னங்கள் ஏற்­று­ம­திகள் மூல­மான வரு­மா­னத்தை விடவும் உயர்­வாகக் காணப்­ப­டு­கின்­றது. எரி­பொருள், எரி­வாயு உள்­ள­டங்­க­லாக நாளாந்தம் தேவைப்­படும் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கு அவ­சி­ய­மான வெளி­நாட்டு நாண­யத்தைப் பெற்­றுக்­கொள்­வது மிகவும் கடி­ன­மான காரி­ய­மாக மாறி­யி­ருக்­கின்­றது” என அவர் குறிப்­பிட்டார்.

இத­னி­டையே உலக வங்­கியும் இலங்­கைக்கு தற்­போது உத­வி­களை வழங்க முடி­யா­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. உரி­ய­வா­றான நுண்­பாகப் பொரு­ளா­தாரக் கொள்கைச் செயற்­திட்­ட­மொன்று உரு­வாக்­கப்­படும் வரையில் இலங்­கைக்கு புதிய நிதி­யு­த­வி­களை வழங்­கு­வ­தற்குத் தாம் திட்­ட­மி­ட­வில்லை என்று உலக வங்கி நேற்று முன்­தினம் வெளி­யிட்ட அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் நிபந்­த­னை­களைப் பூர்த்தி செய்து இலங்கை அதன் உத­வி­களைப் பெற்றுக் கொள்ளும் என்­ப­தற்­கான சாத்­தி­யங்­க­ளையும் இப்­போ­தைக்கு காண முடி­ய­வில்லை. உலக நாடு­களும் உதவி நிறு­வ­னங்­களும் கையை­வி­ரித்­து­விட்­டன. இந் நிலையில் மிகவும் இருள் சூழ்ந்த எதிர்­கா­லமே நம்மை முன்­னோக்­கி­யுள்­ளது. ஆகஸ்ட் மாத­ம­ளவில் உணவுப் பற்­றாக்­குறை உச்­சத்தைத் தொடும் என பிர­தமர் எச்­ச­ரித்­துள்ளார். அவ்வாறானதொரு நிலை வந்தால் இலங்கை பட்டினிச்சாவையே எதிர்கொள்ள வேண்டி வரும்.

இவ்வாறான நெருக்கடியை நாம் எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சிகள் என எல்லோரும் அவரவரது அரசியல் நோக்கங்களை முன்னிறுத்தியே செயற்பட்டு வருகின்றனர். கோட்டா கோ கம போராட்டமும் சோபையிழந்து வருவது போல் தெரிகிறது. உலகின் மிக மோசமானதொரு பின்தங்கிய நாடு என்ற பெயரை இலங்கை விரைவில் பெறப் போவது மாத்திரமே இப்போதைக்கு உறுதியாகத் தெரிகிறது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.