தேசிய பிரச்சினைகளில் முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பங்களிப்பு போதுமா?

0 392

றிப்தி அலி

நாட்டின் தேசிய முக்­கி­யத்­து­வ­மிக்க பிரச்­சி­னை­களில் இலங்கை வாழ் முஸ்­லிம்­களின் பங்­கு­பற்றல் மிகக் குறைவு என்ற குற்­றச்­சாட்­டொன்று நீண்ட கால­மா­கவே முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இப்­பி­ரச்­சி­னை­களின் போது ஏனைய சமூ­கத்­தவர்களுடன் இணைந்து முஸ்லிம் சமூகம் குரல் கொடுக்­காமல் ஒதுங்கி நிற்­ப­த­னா­லேயே இந்தக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. நூற்றுக்கணக்­கான முஸ்லிம் சிவில் அமைப்­புகள் உள்ள போதிலும் அவை தம்மை முஸ்லிம் சமூ­கத்­தினுள் மாத்­திரம் தனி­மைப்­ப­டுத்திக் கொண்டே இயங்­கு­கின்­ற­மையும் இதற்கு பிர­தான கார­ண­மாகும்.

தற்­போது, எமது நாட்டின் பொரு­ளா­தாரம் நாளுக்கு நாள் பாரிய பின்­ன­டைவை நோக்கிச் சென்று கொண்­டி­ருக்­கின்­றது. இதற்கு எதி­ராக கொழும்பில் ஜனா­தி­பதி செய­ல­கத்­தினை முற்­று­கை­யிட்டு கடந்த ஒரு மாதத்­திற்கு மேலாக ‘கோட்டா கோ கம’ எனும் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இன, மத, மொழி பேத­மின்றி அனைத்து மக்­களும் இதில் பங்­கேற்று தங்­களின் எதிர்ப்­பினை வெளி­யிட்டு வரு­கின்­றனர். மிகுந்த ஆர்­வத்­துடன் குறிப்­பி­டத்­தக்­க­ள­வான முஸ்­லிம்­களும் இந்த போராட்­டத்தில் கலந்­து­கொண்­டதை அவ­தா­னிக்க முடிந்­தது.

எனினும், பிர­தான முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் பங்­கேற்­பினை இந்த போராட்­டத்தில் காண­வில்லை. சிங்­கள, தமிழ் மற்றும் கிறிஸ்­தவ சமூ­கங்­களைச் சேர்;ந்த சிவில் மற்றும் சமய அமைப்­புக்­களும் அவற்றின் முக்­கி­யஸ்தர்களும் இந்த போராட்­டத்தில் நேர­டி­யாக கலந்­து­கொண்டு ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­விற்கும், ஆளும் அர­சாங்­கத்­திற்கும் எதி­ராக பாரிய அழுத்­தங்­களை வழங்கி வரு­கின்­றனர்.

எனினும், இலங்கை முஸ்­லிம்­களை பிர­தி­தி­நித்­து­வப்­ப­டுத்­து­வ­தாக கூறிக்­கொள்ளும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் தேசிய சூரா சபை போன்ற எந்­த­வொரு முஸ்லிம் சிவில் அமைப்­புக்­க­ளையோ, அதன் முக்­கி­யஸ்தர்களையோ இந்த போராட்­டத்தில் காண முடி­ய­வில்லை.

மாறாக, இந்த போராட்டம் தொடர்பில் இவர்கள் சில ஊடக அறிக்­கை­களை வெளி­யிட்­டதை மாத்­தி­ரமே காணக் கிடைத்­தது. ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தலின் பின்னர் சில முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் செயற்­பா­டுகள் குறை­வ­டைந்து விட்­டன. எனினும், குறித்த அமைப்­புக்­க­ளினால் வெளி­யி­டப்­படும் ஊடக அறிக்­கை­களின் எண்­ணிக்கை குறை­வ­டை­ய­வில்லை.

நாச­கார குழு­வொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த சம்­ப­வத்­தினால் கிறிஸ்­தவ மக்கள் எவ்­வ­ளவு பாதிக்­கப்­பட்­டார்­களோ அந்­த­ளவு முஸ்லிம் மக்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளமை யாவரும் அறிந்த உண்­மை­யாகும். எனினும், இப்­பா­திப்­பு­க­ளுக்கு எதி­ராக பகி­ரங்­க­மாக குரல் கொடுக்க எந்­த­வொரு முஸ்லிம் சிவில் அமைப்­பு­களும் முன்­வ­ர­வில்லை என்­பது கவ­லை­யான செயற்­பா­டாகும்.

குறிப்­பாக ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­த­லினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியாயம் கோரி கொழும்பு போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் பல போராட்­டங்­களை தொடர்ச்சியாக முன்­னெ­டுத்து வரு­கின்றார். வத்­திக்­கா­னி­லுள்ள பாப்­ப­ரசர் வரை இந்தப் போராட்­டத்­தினை அவர் கொண்டு சென்­றுள்ளார். இப்­போ­ராட்­டங்­களை அவர் இர­க­சி­ய­மாக மேற்­கொள்­ளாது பகி­ரங்­க­மா­கவே மேற்­கொண்டு வரு­கின்றார்.

எனினும், இலங்கை முஸ்­லிம்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தாக கூறிக்­கொள்ளும் முஸ்லிம் அமைப்­புக்கள், இலங்கை வாழ் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை சர்வதேசம் வரை கொண்டு சென்­றுள்­ள­தா என்ற கேள்­விக்கு சாத­மான பதில் இல்லை.
காலத்­திற்கு காலம் சில நிகழ்ச்சி நிரல்­களை முன்­வைத்து செயற்­படும் முஸ்லிம் சிவில் அமைப்­புக்­க­ளினால் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எந்­த­வொரு நியா­ய­மான தீர்­வி­னையும் இது­வரை பெற்­றுக்­கொ­டுக்க முடி­ய­வில்லை.

கடந்த 2012 ஆம் ஆண்டு அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்­கத்­திற்கு குரல் கொடுப்­ப­தற்­காக ஜெனீவா சென்ற அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, கொவிட் – 19 கார­ண­மாக உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் பல­வந்­த­மாக தகனம் செய்­யப்­பட்­டதை சர்வதே­ச ­ம­யப்­ப­டுத்த தவ­றி­விட்­டது. மாறாக உலமா சபையின் தலைவர், எரிக்­கப்­பட்ட ஜனா­சாக்­களின் சாம்­பலை அடக்கம் செய்­யலாம் என்ற சர்ச்­சைக்­கு­ரிய பத்­வா­வையே வழங்­கினார்.

இது போன்று, முஸ்லிம் சமூகம் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கிய காலப் பகு­தி­யிலோ, தற்­போது நாடு எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார பிரச்­சி­னையின் போதோ அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை கண்­டித்து எந்­த­வொரு முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களும் பகி­ரங்க அறிக்­கை­யொன்­றினைக் கூட வெளி­யி­ட­வில்லை.

ஜனாஸா எரிப்பின் போது முஸ்லிம் சிவில் அமைப்­பு­களை விட ஏனைய சிவில் அமைப்­புக்­களின் செயற்­பா­டு­களே அதிகம் வினைத்­தி­ற­னாக அமைந்­தி­ருந்­தன. அது மாத்­தி­ர­மல்­லாமல், சமூ­கத்­திற்கு எதி­ரான பிரச்­சி­னை­களின் போது முஸ்லிம் இளைஞர்கள் போராட்­டங்­களை முன்­னெ­டுக்க முற்­படும் போது, ஆலோ­சனை, வழி­காட்டல் என்ற பெயரில் அவர்­களை அச்­ச­மூட்­டு­கின்ற அல்­லது உற்­சா­க­மி­ழக்கச் செய்­கின்ற வேலை­க­ளையே தொடர்ந்தும் செய்து வரு­கின்­றனர். மாறாக இளைஞர்களை ஒழுங்குபடுத்தி, அவர்களை போராட்டத்தில் ஈடுபடச் செய்வதற்கான வழிகாட்டல்களை வழங்கத் தவறிவிடுகின்றனர்.

எனவே, முஸ்லிம் சிவில் அமைப்புக் களில் காணப்படும் இவ்வாறன பலவீனங்கள் களையப்பட்டு துணிச்சலும் தூர நோக்கும் கொண்ட சிறந்ததொரு சிவில் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். அக் கட்டமைப்பு முஸ்லிம் சமூகத்திற்காக மாத்திரமன்றி ஏனைய சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கின்ற, தேசிய பிரச்சினைகளில் அக்கறையுடன் செயற்படுவதாக அமைய வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.