உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள்: இப்ராஹீம் ஹாஜியாருக்கு பிணை

மற்றொரு மகனுக்கும் பிணை; இளைய மகனுக்கு பிணையளிக்க மறுப்பு

0 238

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்­ரில்லா ஹோட்­டல்­களில் குண்­டினை வெடிக்கச் செய்த தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளான சகோ­த­ரர்­களின் தந்தை இப்­ராஹீம் ஹாஜியார் என அறி­யப்­படும் யூசுப் மொஹம்மட் இப்­ரா­ஹீமை பிணையில் விடு­விக்க கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று உத்­தர­விட்­டது.

கொழும்பு மேல் நீதி­மன்றின் நீதி­பதி நவ­ரட்ன மார­சிங்க இதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்தார்.

இப்­ராஹீம் ஹாஜியார் என அறி­யப்­படும் யூசுப் மொஹம்மட் இப்­ராஹீம் உள்­ளிட்ட மூவ­ருக்கு எதி­ராக மேல் நீதி­மன்றில் குற்­ற­வியல் வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ராஹீம் ஹாஜி­யா­ருக்கு மேல­தி­க­மாக அவ­ரது மேலும் இரு புதல்­வர்­களே அவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். இந் நிலையில் இப்­ராஹீம் ஹாஜி­யா­ருக்கு பிணை­ய­ளித்த நீதி­மன்றம் அவ­ரது மக­னான மொஹம்மட் இப்­ராஹீம் ஹிஜாஸ் அஹ­மட்­டையும் பிணையில் செல்ல அனு­ம­தி­ய­ளித்­தது. எனினும் இளைய மக­னான மொஹம்மட் இப்­ராஹீம் இஸ்­மா­யீலை பிணையில் விடு­விக்க நீதி­பதி மறுப்பு தெரி­வித்தார்.

இப்­ராஹீம் ஹாஜி­யா­ரையும் அவ­ரது ஒரு மக­னையும், தலா 2 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ரொக்கப் பிணை, தலா 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான மூன்று சரீரப் பிணை­களில் செல்ல அனு­ம­தித்த மேல் நீதி­மன்றம், ஒவ்­வொரு மாதமும் முதல், இறுதி ஞாயிறு தினங்­களில் சி.ஐ.டி.யில் ஆஜ­ராகி கையெ­ழுத்­திட வேண்டும் என உத்­த­ர­விட்­டது. அத்­துடன் அவர்­க­ளது வெளி­நாட்டு பய­ணங்­களை தடை செய்த நீதி­மன்றம் கடவுச் சீட்டை நீதி­மன்றில் ஒப்­ப­டைக்­கவும் பணித்­தது.

பிணை கோரி முன் வைக்­கப்­பட்ட விட­யங்­களில் பிர­தி­வா­தி­களின் உடல் நலம் மற்றும் நீண்ட நாட்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் இருந்து வரு­கின்­றமை ஆகிய இரு விட­யங்­க­ளையும் விஷேட கார­ணி­க­ளாக கருதி பிணை­ய­ளிப்­ப­தாக நீதி­பதி அறி­வித்தார். மொஹம்மட் இப்­ரா­ஹீமின் கண்ணில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள சத்­திர சிகிச்சை, ஹிஜா­ஸுக்கு 3 பிள்­ளைகள் இருப்­பது ஆகி­ய­னவும் இதன்­போது கவ­னத்தில் கொள்­ளப்­பட்­ட­தாக நீதி­பதி அறி­வித்தார். எனினும் 3 ஆம் பிர­தி­வாதி மொஹம்மட் இப்­ராஹீம் இஸ்­மா­யீலை பிணையில் விடு­விக்க விஷேட கார­ணிகள் இல்லை எனக் கூறி அவரை பிணையில் விடு­விக்க நீதி­பதி மறுத்தார்.

பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்ன மன்றில் ஆஜ­ரா­ன­துடன், வழக்குத் தொடுநர் சட்ட மா அதி­ப­ருக்­காக பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­யா­கம ஆஜ­ரானார். இவ்­வ­ழக்கு மீள ஜூன் 30 ஆம் திகதி விசா­ர­ணைக்கு வர­வுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் அறிந்­தி­ருந்தும் அது தொடர்பில் பாது­காப்பு தரப்­புக்கு அறிவிக்காமல் தகவல்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் கீழ் இந்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.