காவியுடை அரசியலின் புதிய அத்தியாயம் ஆரம்பம்

0 611

திஸரணீ குணசேகரா
தமிழில்: எம்.எச்.எம் ஹஸன்

மத­கு­ருக்கள், சுதேச வைத்­தி­யர்கள், ஆசி­ரி­யர்கள், தொழி­லா­ளர்கள், விவ­சா­யிகள், யுத்த வீரர்கள், இளை­ஞர்கள் என்ற இந்த ஏழு மகா­சக்­தி­களும் இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் ராஜ­பக்­சாக்கள் பத­விக்­கு­வர உத­விய மாபெரும் மந்­திர கோல்­க­ளாகும். கோட்­ட­பாய ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாகி இரண்­டாண்டு பூர்த்­தி­ய­டையும் விழாவும் மகிந்த ராஜ­பக்­சவின் 76ஆவது பிறந்த தினமும் கொண்­டா­டப்­படும் போது இந்த மாபெரும் மந்­திர சக்­தியில் கீறல் விழுந்து சிதை­வ­டைந்து காணப்­ப­டு­கி­றது என்ற உண்­மையை வேறு எவ­ரையும் விட அவர்கள் நன்கு உணர்ந்­தி­ருப்­பார்கள் என்றே நம்­பக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
இரண்­டாண்டு பூர்த்தியாகும் போது ஏழு மகா­சக்­தி­களில் இரண்டு மட்­டுமே எஞ்­சி­யி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­வது பற்றி சீர்­தூக்கிப் பார்க்க வேண்டும். அந்த வகையில் யுத்த வீரர்களும் மகா­சங்­கங்­களும் தான் ஓர­ள­வுக்­கேனும் ராஜ­பக்­சாக்­க­ளுடன் கைகோ­ர்த்­துள்­ளனர் என்று தெரி­கி­றது. எனவே எதிர் காலத்தை வெல்ல வேண்­டு­மானால் சிங்­கள பௌத்த மக்­களின் ஏக­பா­து­கா­வ­லர்கள் என்ற கொடியை இறுக்­க­மாகப் பிடித்துக் கொள்ள வேண்­டிய தேவை அவ­சியம் ராஜ­பக்­சாக்­க­ளுக்கு ஏற்­ப­டு­வது தவிர்க்க முடி­யா­த­தாகும்.

பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரரை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனா­தி­பதி செய­ல­ணியின் தலைமைப் பொறுப்பில் நிய­மித்­த­துடன் ஆரம்­பிக்­கப்­பட்ட பிக்­கு­க­ளிடம் மீண்டும் சர­ண­டையும் அரசின் புதிய அர­சியல் வியூகம் இப்­போது பல படி­களைக் கடந்­துள்­ளது. கடந்த ஒரு வரு­டத்­திற்கு மேலாக ஜனா­தி­ப­தி­யையும் அர­சாங்­கத்­தையும் தோலு­ரித்துக் கொண்­டி­ருந்த முருத்­தட்­டு­வே­கம ஆனந்த தேரரை கொழும்புப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் வேந்­த­ராக நிய­மித்­தமை, கள­னிய மகா விகா­ரா­தி­ப­தி மஹிந்த சங்கரக்கித தேரரை கள­னிய பல்­க­லைக்­க­ழக வேந்­த­ராக நிய­மித்­தமை மேலும் சில உதா­ர­ணங்­க­ளாகும். ராஜ­பக்ச ஆத­ரவு பிக்­கு­க­ளுக்கு புதிய பத­வி­களும் கௌர­வங்­களும் வழங்­குதல் கிட்­டிய எதிர்­கா­லத்தில் வெகு­வாக அதி­க­ரிக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இவற்றின் நோக்கம் எதிர்­கால ராஜ­பக்ச அர­சி­யலில் பிக்­கு­களை பர­வ­லாக முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தாகும்.

இந்தப் புதிய உத்­தியின் பெறு­பே­றுகள் இப்­போதே வெளிப்­படத் தொடங்­கி­யுள்­ளன. மாதக்­க­ணக்கில் மௌனம் சாதித்த சிங்­கள ராவய, ராவணா பலய மீண்டும் அர­சியல் களத்தில் குதித்­துள்­ளமை தெரி­கி­றது. கோட்­டா­ப­யவின் சேதனப் பசளைத் திட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்கும் ஊடக மாநா­டு­களை அவர்கள் நடத்தத் தொடங்­கி­யுள்­ளனர். இந்த அமைப்­பு­களின் தலைமைப் பிக்­குமார் விவ­சாய அமைச்­சரைச் சந்­தித்து சேதனப் பசளைச் செயற்­திட்­டத்­திற்குப் பூரண ஆத­ரவு வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர். விவ­சா­யி­களை நேர­டி­யாகச் சந்­தித்து இந்த விடயம் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்­கவும் அவர்கள் முன்­வ­ரு­வ­தா­கவும் அறி­வித்­துள்­ளனர்.

முப்­ப­தாண்டு யுத்­தத்தை நினை­வூட்டும் நோக்கில் அமைக்­கப்­பட்­டுள்ள ‘சந்­ந­கி­ரி­சாய’ கட்­டடத் தொகு­தியை பிக்­கு­க­ளுக்குப் பூஜையாக வழங்கி வழி­படும் வைப­வமும் மகிந்­தவின் பிறந்த நாளில் இடம் பெற்­றது. இவற்­றை­யெல்லாம் பார்க்கும் போது ராஜ­பக்ச அர­சி­யலின் எதிர்­காலம் காவித் துணியால் அலங்­க­ரிக்­கப்­படும் பணி மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளமை தெளி­வா­கின்­றது.

பொது­ஜன முன்­ன­ணியின் ஐந்­தாண்டு நிறைவு விழா­வி­னூ­டாக ராஜ­பக்ச அர­சி­யலின் கசப்­பான உண்­மைகள் களத்­துக்கு வந்­தன. இது அண்ணன் தம்­பி­மார்­களின், சித்­தப்பா மகன்­மாரின் கட்­சி­யாகும். அதன் ஒரே நோக்கம் ராஜ­பக்ச குடும்­பத்­தி­னரைப் பத­வியில் அமர்த்­து­வ­தாகும். மற்ற அனைத்துச் செயற்­பா­டு­களும் அந்த நோக்­கத்தை அடை­வ­தற்­கான நாட­கங்­களும் கண்­கட்டி வித்­தை­க­ளு­மாகும்.

இச்­செ­யற்­திட்­டத்­திற்கு இப்­போது உள்­ளே­யி­ருந்தும் வெளி­யி­லி­ருந்தும் சவால்கள் எழத்­தொ­டங்­கி­யுள்­ளன. எதிர்க்­கட்­சி­களின் சவால்­களை விட உள்­ளே­யி­ருக்கும் சில பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளி­ட­மி­ருந்து வரும் சவால்கள் ஆட்­சி­யா­ள­ருக்குப் பெரும் தலை­யி­டி­யாக மாறி­யுள்­ளது. அடுத்த மாபெரும் சவால் ராஜ­பக்ச வாதி­க­ளான வாக்­கா­ளர்­க­ளி­ட­மி­ருந்து அரசின் சில செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்­புகள் கிளம்­பி­யுள்­ள­மை­யாகும். அந்த எதிர்ப்பும் ஆர்ப்­பாட்­டமும் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வதும் அவ­தா­னிக்­கப்­ப­டு­கி­றது. இந்த சவால்­களை வெற்­றி­கொள்­ளா­விட்டால் ராஜ­பக்ச செயற்­திட்­டத்தின் எதிர்­காலம் இருள் சூழ்ந்­த­தாகி விடும்.

இந்த யதார்த்­தங்கள் ராஜ­பக்­சக்­க­ளுக்கு விளங்­காமல் இல்லை. ஆனால் ராஜ­பக்ச குடும்­பத்­தினர் இந்தப் பிரச்­சி­னை­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­கேனும் தங்கள் நாச­கார நட­வ­டிக்­கை­களை விடத்­த­யா­ராக இல்லை. தமது விருப்­பப்­படி செய்ய முடி­யா­விட்டால் அந்த அதி­காரம் எதற்­காக? என்று அவர்கள் நினைக்­கி­றார்­களோ தெரி­யாது.

மொட்டுக் கட்­சியின் ஐந்­தாண்டு நிறைவு விழாவில் உரை­யாற்­றிய பிர­தமர் மகிந்த ராஜ­பக்ச போராட்டம் நடத்தும் விவ­சா­யிகள் பற்றி, நாட்டை விட்டு வெளி­யே­று­வ­தற்­கான கட­வுச்­சீட்டு வரி­சையில் நிற்கும் இளை­ஞர்கள் பற்­றி­யெல்லாம் பேசினார். கோட்­டா­பய, பஸில் ஆகிய தம்­பி­மார்கள் போலன்று, அண்ணன் மகிந்த மக்கள் பிரச்­சி­னை­களில் உணர்­வுபூர்வமாக செயற்­ப­டு­பவர் என்ற கருத்தை வலி­றுத்­து­வ­தாக அவ­ரது உரை அமைந்­தது. ஆனால் எரி­வாயு இறக்­கு­மதி செய்­யவும் மண்­ணெண்ணை வாங்­கவும் டொலர் இல்­லாத நாட்டில் எம்பீ மார்­க­ளுக்­கான சொகுசு வாக­னங்­களை இறக்­கு­மதி செய்யும் பிரே­ர­ணையைக் கொண்டு வந்­தவர் மகிந்த ராஜ­பக்­சவே. பால்மா பக்கற் ஒன்றை திரு­டு­வ­தற்­காக காலியில் சதொச வர்த்­தக நிலை­யத்தை உடைக்கும் அள­வுக்கு வறுமை மேலிட்ட நாட்டில் சர்­வ­தேச கால்­பந்துப் போட்­டி­களை நடாத்த தீர்­ம­ானித்­த­வரும் அவரே. அது அவ­ரது பெய­ரி­லான மகிந்த ராஜ­பக்ச கிண்­ணத்­துக்­கான புதிய காற்­பந்துப் போட்டித் தொடர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. உண்­மையில் மகிந்­த­விடம் இருப்­பது மக்கள் மீதான பரி­வு­ணர்­வல்ல வெறும் நடிப்பு.

பிர­தமர் நடிப்பில் திற­மை­யா­னவர் என்­றாலும் அது ராஜ­பக்­சாக்­களின் மீது எழும் எதிர்ப்புச் சுவா­லை­களில் இருந்து பாடம் கற்றுக் கொள்­வ­தற்குப் போது­மா­ன­வை­க­ளாக இல்லை. அவர் மக்­களின் குறைகள் விட­யத்தில் அனு­தா­பப்­ப­டு­வ­தாக காட்டிக் கொள்ளும் போது கோட்­டா­பய ராஜ­பக்ச பிக்­கு­மார்­களைத் திருப்­திப்­ப­டுத்தும் செயற்­பாட்டில் இறங்­கி­யி­ருப்­பது எல்­லாமே நடிப்­புதான்.

மீண்டும் பிக்­கு­மார்கள் வலுப்­பெறல்
பிர­பல பொரு­ளியல் அறி­ஞ­ரான பேரா­சி­ரியர் தோமஸ் விகட் Capital and Ideology என்ற நூலில் மனித வர­லாறு நெடு­கிலும் சமத்­து­வ­மின்­மையை (Inequality) நியா­யப்­ப­டுத்த உலகம் பூராகவும் நில­விய கருத்­தா­டல்கள், முறை­மை­களை விளக்க முயற்­சிக்­கிறார். கடந்த காலத்தில் மேலைத்­தேய, கீழைத்­தேய நாடு­களில் பெரும்­பா­லான ஆட்­சி­மு­றை­களை அவர் மும்மைச் சமூகம் (Ternary societies) என்று குறிப்­பி­டு­கின்றார். பூசகர்கள் (சம­யத்­த­லை­வர்கள்), பாது­கா­வ­லர்கள், மக்கள் இந்த மூன்று பிரி­வுக்குள் அடங்­குவர். சமயத் தலை­மைகள் நாட்­டுக்குத் தேவை­யான கோட்­பாட்டை வழங்­கி­ய­துடன் சமூ­கத்தின் பௌதீக, பொரு­ளா­தாரத் தேவை­களை மக்கள் நிறைவு செய்­தனர். பாது­கா­வ­லர்­க­ளாக அரசன், இள­வ­ர­சர்கள், நிர்­வா­கிகள் மேற்­படி செயற்­பா­டு­க­ளுக்­கான சமா­தா­னத்­தையும் பாது­காப்­பையும் நிலை­நாட்­டினர். இந்த சமூ­கங்­களில் நில­விய பாரிய பொரு­ளா­தார அதி­கார இடை வெளியை இவ்­வாறு பேரா­சி­ரியர் பிகட் நியா­யப்­ப­டுத்­தினார்.

2015-–2019 காலப்­ப­கு­தியின் ரா­ஜ­பக்ச அர­சி­யலின் கருப்­பொ­ருளும் இது­வாகத் தான் இருந்­துள்­ளது. 2015 இல் ஜனா­தி­பதித் தேர்தல் தோல்­வியைத் தொடர்ந்து மத­மு­லன வளவ்­வ­வுக்குச் சென்று யன்னல் கம்­பியில் தொங்­கிய படி அங்கு குழு­மி­யி­ருந்த மக்­களை விழித்துப் பேசிய மகிந்த ராஜ­பக்ச நடந்து முடிந்த ஆட்சி மாற்றம் நாட்டுப் பிரி­வினை என்று அறி­முகம் செய்தார்.

அன்று முதல் ராஜ­பக்ச அர­சி­யலின் அடிப்­படை கருப்­பொ­ரு­ளாக அமைந்­தது நாடு, சமயம், இனம் என்­பன ஆபத்­துக்­குள்­ளா­கி­யி­ருப்­பது குறித்த விட­யங்­க­ளாகும். இந்த செய­ல­ணியில் மூன்று சகோ­த­ரர்­களும் மிக நேர்த்­தி­யாக வேலை­களைப் பகிர்ந்து கொண்டு செயற்­பட்­டனர் (division of labor) அண்ணன் மகிந்த வாரம் தோறும் ஏதா­வது ஒரு பௌத்த விகா­ரைக்குச் சென்று நல்­லாட்­சியில் பௌத்த மதத்­திற்­கான முதன்மை சிதைக்­கப்­ப­டு­வ­தா­கவும் பிக்­கு­மார்கள் சிறையில் அடைக்­கப்­ப­டு­வ­தா­கவும் பிர­சாரம் செய்தார். தம்பி கோட்­டா­பய வியத்­மக எளிய (சான்றோர் பாதை, வெளிச்சம்) ஆகிய நிகழ்சித் திட்­டங்கள் மூலம் பல்­வேறு தொழில்­வாண்­மை­யி­ன­ரையும் ஒன்று திரட்டும் பணியில் ஈடு­பட்டார். தம்பி பசிலின் முயற்­சி­யாக அமைந்­தது ராஜ­பக்­சாக்­க­ளுக்­கான ஒரு அர­சியல் சக்­தியை (மொட்­டுக்­கட்சி) உரு­வாக்­கு­வ­தாகும்.

சிறி­சேன, விக்­கி­ர­ம­சிங்க அரசின் தவ­றுகள், குறை­பா­டுகள் கார­ண­மாக ராஜ­பக்ச சகோ­த­ரர்­களின் முயற்சி பெரு­ம­ளவு வெற்­றியை நோக்கி நடை­போட்­டது. 2018 இல் நடை­பெற்ற உள்­ளு­ராட்சி தேர்­தலில் இரண்டு பிர­தான கட்­சி­களைப் பின்­தள்ளி பொது­சன ஐக்­கிய முன்­னணி பெற்ற வெற்றி இதனை உறுதி செய்­தது. ஆயினும் அளிக்­கப்­பட்ட வாக்­கு­களின் 40 சத­வீதம் மட்­டுமே மொட்டுக் கட்­சிக்குக் கிடைத்­தது. வாக்­கா­ளர்­களில் 60 வீதம் ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரா­கவே கிடைத்­தது.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் நிலைமை தலை­கீ­ழாக மாறி­யது. பீதியும் சந்­தே­கமும் மீண்­டு­மொரு முறை இலங்கை அர­சி­யலின் தீர்க்­க­மான கார­ணி­யாக மாறி­யது. இந்தப் பீதி­யையும் சந்­தே­கத்­தையும் நீக்க முடி­யு­மான ஒரே வழி ராஜ­பக்­சாக்­க­ளிடம் அரசை வழங்­கு­வது தான் என்ற கோசத்தை மக்­க­ளி­டையே இல­கு­வாகப் பரப்­புரை செய்ய தாக்­குதல் கார­ண­மாக அமைந்­தது. இப்­ப­ரப்­பு­ரையின் முக்­கிய பங்­கு­தாரர்களாக பிக்­கு­மார்­களும் விகாரை வாசி­க­ளுமே செயற்­பட்­டனர். விகா­ரைகள் மொட்டுக் கட்­சியின் உத்­தி­யோ­க பூர்வமற்ற காரி­யா­ல­யங்­க­ளாகச் செயற்­படத் தொடங்­கின. தேச­பி­மா­னி­களை உள்­நாட்டு வெளி­நாட்டு தேசத்­து­ரோ­கி­க­ளி­ட­மி­ருந்து பாது­காக்­கவும் தேச­பி­மா­னி­களின் நாளாந்த வாழ்க்­கையைச் செவ்­வனே செயற்­ப­டுத்தும் சமா­தா­ன­மான நிலை­யான சமூக மொன்றை உறு­திப்­ப­டுத்­தவும் முடி­யு­மான ஒரே அர­சியற் சக்தி ராஜ­பக்­சாக்கள் தான் என்ற கருத்து சிங்­கள சமூ­கத்தின் மூலை முடுக்­கு­களில் எல்லாம் சென்­ற­டைந்­தன.

இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன் நடை­பெற்ற ராஜ­பக்­சாக்­களின் வெற்­றிக்­கான பாதையை அமைத்­த­வர்கள் பிக்கு சமூ­கத்­தி­னரே. ராஜ­பக்­சாக்­களின் முயற்சி குடும்ப ஆதிக்­கத்­திற்­கா­னது அல்ல என்றும் இலங்கை மாதாவின் சிங்­கள பௌத்த சமூ­கத்­தி­னதும் பௌத்த சாச­னத்தின் பாது­காப்­புக்­குமே என்­பதை காவி­யுடை அணிந்தோர் உறு­திப்­ப­டுத்­தினர். இன்று இவை­ய­னைத்தும் புஸ்­வா­ன­மாகி நகைப்புக் கிட­மாக மாறி­யுள்­ளமை வேறு விடயம்.
ராஜ­பக்ச ஆட்சி 2019 டிசம்பர் முதல் நடை­மு­றைப்­ப­டுத்­திய வரிக் கொள்­கையும் அப­ரி­மித­மான நாண­யத்தாள் அச்­சி­டலும் கார­ண­மாக ஆரம்­பித்த பொரு­ளா­தாரப் பின்­ன­டைவு இப்­போது மேலும் தீவி­ர­ம­டைந்­துள்­ளது. செப்­டம்பர் இறு­தியில் 2.7 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாக இருந்த வெளி­நாட்டுச் செலா­வணிக் கையி­ருப்பு ஒக்­டோபர் முடிவில் 2.2 பில்­லியன் டொலர்­க­ளாகக் குறைந்­துள்­ளது. இப்­போது அது அடி­மட்­டத்­துக்கே இறங்­கி­விட்­டது. டொலர் இருப்பு வேக­மாக வீழ்ச்­சி­ய­டை­வதைத் தொடர்ந்து சர­வ­தேசக் கடன் தரப்­ப­டுத்தல் நிறு­வ­ன­மான மூடிஸ் (Moody’s) நிறு­வனம் இலங்­கைக்­கான தரப்­ப­டுத்­தலை மேலும் கீழி­றக்­கி­யுள்­ளது. வங்­கு­ரோத்து நிலையை அடைய இன்னும் இரண்டு நிலை­களே எஞ்­சி­யுள்­ளது.

சர்­வ­தேசக் கடன் தர நிர்­ணய நிறு­வ­னங்­க­ளிடம் இலங்கை பல தட­வைகள் (fail) பெயில் பண்­ணி­யுள்­ளதன் கார­ண­மாக கடன் பெற்­றுக்­கொள்­வதில் இலங்கை பல சிக்­கல்­களை எதிர் கொள்­கி­றது. முத­லீட்­டா­ளர்கள் வரு­கையும் மிகக் குறைந்த மட்­டத்­தி­லேயே உள்­ளது. கொழும்­பி­லுள்ள வர்த்­தக முக்­கி­யத்­துவம் வாய்ந்த காணி­களை திறந்த ஏலத்தில் விற்­ப­தற்­கான திட்­டங்­களைத் தீட்­டி­னாலும் அவற்றை கொள்­வ­னவு செய்ய எதிர்­பார்த்த அளவு முயற்­சி­யாண்­மைகள் வர­வில்லை. கொவிட-19 உலகில் ஏற்­ப­டுத்­தி­யுள்ள பொரு­ளா­தாரத் தேக்க நிலையின் தாக்கம் இலங்­கை­யிலும் காணப்­ப­டு­கின்­றது என்­பது உண்­மை­யா­யினும் எல்லா பிரச்­சி­னை­க­ளையும் அதன் கணக்கில் வரவு வைக்க முடி­யாது. அரசின் நிர்­வாக குறை­பாட்­டினால் நிலைமை தலைக்கு மேலால் போய்­விட்­டமை பிர­தான கார­ண­மாகும். வங்­கு­ரோத்து நிலையை அண்­மிய ஒரு நாட்­டுக்கு எந்த நாடுதான் கடன் கொடுக்கும் என்ற நிலை உரு­வா­கி­யுள்­ளது.

தமது இருப்­புக்­காக நாட்டில் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கு­வது ராஜ­பக்­சாக்­க­ளுக்கு கை வந்த கலை. இன வன்­மு­றைகள் கார­ண­மாக உலக நாடு­க­ளி­டையே இலங்­கையின் நற்­பெயர் மேலும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இன, மதக் குழுக்­க­ளி­டையே மோதல் நிலவும் நாடு­க­ளுக்கு கடன் வழங்­கு­வது ஆபத்­தா­னது. முத­லீட்­டா­ளர்­களும் வரத் தயங்­கு­வார்கள். சிங்­கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்­தவ இனத்­த­வர்­க­ளி­டையே பீதி­யையும் பயத்­தையும் விருத்­தி­செய்யும் நட­வ­டிக்­கைகள் மற்றும் சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தி­க­ளுக்கு பத­விகள் வழங்­கு­வதன் பெறு­பேறு யாதெனில் இலங்­கைக்கு கடன் வழங்­கு­வதும் இலங்­கையில் முத­லீடு செய்­வதும் மேலும் தடைப்­ப­டு­வ­தாகும்.

புதிய நிதி­ய­மைச்­சரின் கன்னி வரவு செல­வுத்­திட்ட உரையில் மக்­க­ளுக்கு எவ்­வித சலு­கை­களும் கிடைக்­க­வில்லை. மேலும் மேலும் விலை­யு­யர்­வு­களே நிகழ்­கின்­றன. டொலர் பற்றாக் குறைக்­கான எவ்­வித பரி­கா­ரமும் இல்­லாத நிலையில் பொருட் தட்­டுப்­பாடு மேலும் அதி­க­ரிக்கும். தற்­போது இர­சா­யனப் பசளை இறக்­கு­ம­திக்கு தனியார் துறைக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருப்­பினும் அதி­க­ரித்த விலை­கா­ர­ண­மாக விவ­சா­யிகள் நன்­மை­ய­டைய முடி­யாது. உரிய காலத்தில் பசளை கிடைக்­கா­மையால் இம்­முறை 50 சத­வீ­தத்­துக்கும் குறை­வான விவ­சாய நட­வ­டிக்­கை­களே நடந்­துள்­ளன. இன்னும் சில மாதங்­களில் அறு­வடை நடை­பெறும் போது பாரிய பொருட் தட்­டுப்­பாடு வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. நெல் அரிசி மட்­டு­மன்றி தேயிலை சோளம் மரக்­க­றிகள் பழங்கள் என்ற எல்­லா­வற்­றிலும் பாரிய தட்­டுப்­பாட்டை எதிர்­பார்க்­கலாம். உண­வுப்­பற்­றாக்­கு­றையைப் போக்க இறக்­கு­மதி செய்ய வேண்டி வரும். அப்­போது டொலர் பிரச்­சினை மேலும் அதி­க­ரிக்கும்.

இந்த நச்சு வட்­டத்­துக்­கான காரணம் கொரோனாத் தொற்றோ அல்­லது வெளி­யகக் கார­ணி­களோ அல்ல. ராஜ­பக்ச குடும்­பத்தின் இயல்­பாகும். வரிக்­கு­றைப்பும் பண அச்­சி­டலும் நடை­பெறக் காரணம் அவர்­களின் அறி­யா­மை­யாகும். தங்­க­ளுக்கு இது தெரி­யாது என்­பதும் தெரி­யா­தி­ருப்­ப­தாகும். பசளைப் பிரச்­சி­னைக்குக் காரணம் இர­சா­யனப் பச­ளையை ஒழித்த புகழ் வர­வேண்டும் என்ற புகழ் மயக்­க­மாகும். இந்த நாட்டின் பயிர்ச் செய்கை முறை பற்­றிய அறி­யா­மை­யாகும். அவர்­களின் தவ­று­களைத் திருத்திக் கொள்­ளாத பிடி­வாதம் நிலை­மையை மேலும் மோச­மா­க்கி­யுள்­ளது. இவை­ய­னைத்தும் ராஜ­பக்­சாக்­களின் பண்­பு­க­ளாகும் அவை ஒரு போதும் மாறப் போவ­தில்லை.

ராஜ­பக்­சாக்கள் உரு­வாக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வும் பரி­கா­ரமும் அவர்­களை தேர்­தலில் தோற்­க­டிப்­ப­தொன்று மட்டும் தான். அடுத்­து­வரும் தேர்­தல்­களில் தாம் தோற்­று­வி­டுவோம் என்ற பயம் ராஜ­பக்­சாக்­க­ளுக்கும் தோன்­றி­யுள்­ள­தா­கவே தெரி­கி­றது. அவர்கள் மீண்டும் காவி­யு­டை­தா­ரி­க­ளிடம் சர­ண­டைய இதுவே காரணம்.
ராஜ­பக்ச குடும்­பத்தை வழி­படும் வாக்­கா­ளர்கள் சிலர் இருக்­கவே செய்வர். ஏனை­ய­வர்கள் தம்மை முன்பு போல மதிக்­க­மாட்­டார்கள் என்ற பயம் அவர்­க­ளுக்குள் தோன்ற ஆரம்­பித்­துள்­ளது. கோட்­ட­பா­யவின் பய­மு­றுத்தும் உரை­களும் மகிந்­தவின் மனம் கனியும் உரை­களும் இதற்­கான துலங்­கல்­க­ளாக இருக்­கலாம்.

வடக்கு கிழக்கில் மட்­டு­மல்ல தெற்­கிலும் பாது­காப்பு நோக்கில் இரா­ணு­வத்தைக் கள­மி­றக்க ராஜ­பக்­சாக்கள் தயங்­கு­வ­தில்லை என்­ப­தற்கு ரது­பஸ்­வல சம்­பவம் சான்­றாகும். ஏனைய சகல வழி­களும் நெருக்­க­டிக்­குள்­ளானால் மட்­டுமே அப்­ப­டி­யொரு உத்­தியை பயன்­ப­டுத்­து­வார்கள். சிங்­கள அர­சுக்கு ஆத­ர­வாக இரா­ணு­வத்தைக் கள­மி­றக்­கு­வதை இழி­வ­ள­வாக்கும் நோக்­கி­லேயே மீண்டும் பிக்­குகள் கள­மி­றக்­கப்­ப­டு­கி­றார்கள்.

மீண்டும் ஒரு தமிழ் அல்­லது முஸ்லிம் எதி­ரியை உரு­வாக்கி அந்த எதி­ரி­க­ளிடம் இருந்து சிங்­கள பௌத்த சமூ­கத்தை காப்­பாற்ற சிங்­கள மக்கள் தம்­முடன் இணைய வேண்டும் என்­பது ராஜ­பக்ச குடும்­பத்தின் கனவு. அவர்­களின் மீட்­சியும் எதிர்­கால வெற்­றியும் அதில் தான் தங்­கி­யுள்­ளது. பொது­ப­ல­சேனா, ராவணா பலய, சிங்­கள ராவய போன்ற அமைப்­பு­களின் பணி ஏதோ ஒரு வகையில் எதி­ரியை உரு­வாக்கம் செய்­வ­தாகும். முருத்­தெட்­டுவே ஆனந்த தேரர், களனி ரஜ­மகா விகா­ரா­தி­பதி பேரா­சி­ரியர் மத­கொட அப­ய­திஸ்ஸ தேரர் போன்­ற­வர்­களின் பணி­யாக அமைந்­தி­ருப்­பது சிங்­கள பௌத்­தர்­க­ளி­னதும் நாட்­டி­னதும் ஒரே பாது­கா­வ­லர்கள் ராஜ­பக்­சாக்கள் தான் என்ற மூட­நம்­பிக்­கையை மீண்டும் சமூக மயப்­ப­டுத்­து­வ­தாகும்.

கழு­குக்கும் டிரா­க­னுக்கும் மத்­தியில்
அமெ­ரிக்­காவின் பாது­காப்­புக்குப் பொறுப்­பான நிறு­வ­ன­மான பென்­டகன் வரு­டந்­தோறும் பாது­காப்பு தொடர்­பான ஓர் அறிக்­கையை வெளி­யிடும். இம்­முறை வெளி­யிட்ட அறிக்­கையின் கரு சீனாவைப் பற்­றி­தாகும். (Military and Security Development Involving the People Republic of China) இந்த அறிக்­கையை வாசிப்­ப­தற்கு அல்­லது விளங்­கு­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­ததா என்று தெரி­யாது. உக்­கி­ர­ம­டையும் நவீன கெடு­பிடி யுத்தம் பற்­றியே இவ்­வ­றிக்கை பேசு­கின்­றது. அடுத்த சில தசாப்­தங்­களில் உலக அர­சி­யலில் குறிப்­பாக இலங்­கை­யையும் உள்­ள­டக்­கிய இந்து பசுபிக் வல­யத்தின் தீர்­மா­னிக்கும் கார­ணி­யாக அமையப் போவது அமெ­ரிக்­கா­வுக்கும் சீனா­வுக்­கு­மி­டை­யி­லான அதி­காரப் போட்­டி­யாகும்.

முன்னர் போலவே அணி­சேராக் கொள்­கையைப் பின்­பற்­றி­யி­ருந்தால் இந்தப் போட்­டியில் நன்­மை­ய­டைந்து கொள்ளும் நிலை இலங்­கைக்கு ஏற்­பட்­டி­ருக்கும். ஆயினும் 2010–-11 காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து ராஜ­பக்­சாக்­களின் ஆட்சி படிப்­ப­டி­யாக சீனாவின் ஒரு துணைக்கோள் போல இலங்­கையை ஆக்­கி­யி­ருக்­கின்­றது. 2019–-2020 களில் மீண்டும் இந்தப் பய­ணத்தை தொடர்ந்­துள்ள நிலையில் கொழும்பு துறை­முக நகர சட்ட மூலத்­தி­னூ­டாக அது பயண முடிவை நோக்கி நகர்­வ­தா­க­வுள்­ளது.

பென்­டகன் அறிக்­கையில் சீன இரா­ணு­வத்தின் வளர்ச்சி பற்றிக் கூறும் பகுதி இலங்­கை­யுடன் மிக­வுமே தொடர்­பு­ப­டு­கி­றது. தமது கடல், வான், தரை, இணையம் மற்றும் விண்­வெளி அதி­காரப் பலத்­துக்­காக தமது இரா­ணுவ வச­திகள் பற்றித் தேடிப்­பார்ப்­பதில் சீனா ஆர்வம் கொண்­டுள்­ளமை பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது விட­யத்தில் சீனாவின் கவனம் திரும்­பி­யுள்ள நாடு­களில் இலங்­கையும் உள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அமெ­ரிக்­காவின் இந்த அனு­மானம் சரியா பிழையா என்று கூறு­வ­தற்கு இன்னும் கால­மெ­டுக்கும். எனினும் அமெ­ரிக்­காவின் நோக்கு இது­வா­கவே உள்­ளது. ஆகவே விரும்­பியோ விரும்­பா­மலோ இந்த அதி­காரப் போட்­டியில் இலங்கை சிக்­கிக்­கொள்­வதைத் தவிர்க்க முடி­யாது. அமெ­ரிக்­காவின் இந்த எதிர்வு கூறல் ஒரு நல்ல ஜோக் என்று இலங்­கைக்­கான சீனத் தூத­ரகம் கூறி­யுள்­ளது. எமது நாட்டின் எதிர்­கா­லத்­துடன் தொடர்­பு­பட்ட இப்­பி­ரச்­சினை சம்­பந்­த­மாக ராஜ­பக்ச அரசு இது­வரை எக்­க­ருத்­தையும் கூற­வில்லை.

இலங்கை நிலப்­ப­ரப்­புக்குள் எந்­த­வொரு வலய அல்­லது உலக வல்­ல­ர­சுக்கும் இரா­ணுவ வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­ட­மாட்­டாது என்று பிர­க­ட­னப்­ப­டுத்தி இந்தக் கெடு­பிடி யுத்­தத்தில் எமது நடு­நிலைத் தன்­மையை உறு­திப்­ப­டுத்த இது மிகச் சிறந்த சந்­தர்ப்­ப­மாகும். ராஜ­பக்ச அரசு இதற்கு இன்னும் தாம­திப்­ப­தற்குக் காரணம் பென்­டகன் அறிக்­கையின் உண்மைத் தன்மை தெரி­யா­மை­யி­னாலா அல்­லது எமது நடு­நிலைக் கொள்­கை­களை உறு­திப்­ப­டுத்­து­வது சீனா­வுடன் மோது­வ­தற்கு சமம் என்று பயப்­ப­டு­வ­த­னாலா? என்று தெரி­ய­வில்லை.

2019 இல் ஏற்­பட்ட ராஜ­பக்ச செயற்­திட்­டத்தின் வெளி­நாட்­டுக்கு காரணி சீனா­வாகும். தாம் சீனா­வுடன் ஒத்துப் போனால் இலங்­கையின் உள்­நாட்டு வெளி­நாட்டு நிதித்­தே­வை­களை நிறை­வேற்­று­வார்கள் என்று ராஜ­பக்­சாக்கள் நினைத்­தி­ருக்­கலாம். துறை­முக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் இலங்கையின் வெளிநாட்டுச் செலாவணிப் பிரச்சினை தீர்ந்து விடும் என்று அரசாங்கம் நினைத்தமையை அப்போது வெளியிட்ட கருத்துக்களில் இருந்து அறியலாம். சீனா, ராஜபக்சாக்களை ஏமாற்றி விட்டதா? ராஜபக்சாக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டார்களா? என்பதைத் தீர்மானிப்பது சிரமமாயுள்ளது. ஆயினும் இலங்கையின் விடயத்தில் கைகளை வீசிச் செலவளிக்க சீனா தயாராக இல்லை என்பது மட்டும் உறுதி.

சேதனப் பசளை இறக்குமதி தொடர்பில் சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவில் கீறல் விழுந்துள்ளது. தமக்கு 8 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்க வேண்டும் என்று சீனக் கம்பனி மக்கள் வங்கியைக் கேட்டுள்ளது.

கொழும்பு வணிக நீதிமன்றம் கொடுப்பனவை நிறுத்தும்படி அறிவித்துள்ள நிலையிலேயே இது நடைபெற்றுள்ளது. தமது பசளை பொருத்தமற்றது என்று கூறிய நிறுவனங்களுக்கு சீனக் கம்பனி எச்சரிக்கையும் விடுத்தது. சீனா இலங்கையின் நிதித்தீர்வுகளையோ பொதுமக்கள் அபிப்பிரயங்களையோ மதிக்க தயாராக இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

பசளைக் கப்பல் இலங்கையைச் சுற்றித் திரிந்த காலத்துக்கு ஒரு நாளைக்கு 30000 டொலர் பசளைக் கம்பனி, கப்பல் கம்பனிக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சீனா இலங்கைக்கு மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்பிக்கிறேன் என்று அடம் பிடிப்பது தெரிகிறது. இறுதியில் சீனாவிடம் மண்டியிட்டுள்ள இலங்கை 6.7 மில்லியன் டொலர்களை வழங்க இணங்கியுள்ளது. ராஜபக்ச அரசாங்கம் உள்நாட்டு நட்பை மட்டுமன்றி வெளிநாட்டு நட்பு நாடுகளையும் பகைத்துக் கொண்டுள்ளமை தெளிவாகின்றது. ராஜபக்ச அரசு கையாண்ட பொருளாதார உத்திகள் யாவும் தோல்வியடைந்த நிலையில் வேறு வழியின்றி மீண்டும் காவியுடை அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளது.

சிங்கள பௌத்த மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தகுதி தமக்கேயுள்ளது என்பதை சமூகமயப்படுத்தும் பொறுப்பை பிக்குமார்களை ஏற்கச்செய்வதே அவர்களின் நோக்கமாக உள்ளது. அன்றாடப் பிரச்சினைகளை மறக்கடித்து எதிர்கால வெற்றிக்கு அடித்தளம் போடுவதே ராஜபக்சாக்களின் செயற்பாடாக உள்ளது. அளுத்கமை தாக்குதல், திகன வன்முறை அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற ஒன்றை மீண்டும் உருவாக்காமல் காவியுடைதாரிகளின் செயற்திட்டம் வெற்றிபெறுமா என்பதே கேள்வியாக உள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.