முஸ்லிம் ஒலிபரப்பின் நதிமூலத்தை தேடுதல்

சில முன்னோடிக் குறிப்புகள்

0 3,651

கலா­நிதி எம்.சீ.ரஸ்மின்

அறி­முகம்
இக்­கட்­டு­ரையின் பெரும்­பா­லான பகு­திகள் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் 96 ஆவது வருட நிறைவை முன்­னிட்டு கடந்த டிசம்பர் 21ஆம் திகதி முஸ்லிம் சேவையில் ஒலி­ப­ரப்­பா­கிய பாரம்­ப­ரியம் நிகழ்ச்­சியில் இடம்­பெற்­றன. கலா­பூ­ஷணம் எம்.எஸ்.எம். ஜின்னாஹ் இந்த நிகழ்ச்­சியைத் தொகுத்து வழங்­கினார். முஸ்லிம் சேவையின் பணிப்­பாளர் பாத்­திமா ரினூ­சியா இந்த நிகழ்ச்­சியை தயா­ரித்து வழங்­கினார்.

பொது சேவை ஒலி­ப­ரப்பு (Public Service Broadcasting) உல­க­ளா­வியரீதியில் தோல்­வி­ய­டைந்து வரு­கின்­றது. அது ‘அரச ஒலி­ப­ரப்­பாக’ தர­மி­றங்­கிக்­கொண்­டி­ருப்­பது இதற்­கான பிர­தான கார­ண­மாகும். ஆசிய நாடு­களைப் பொறுத்­த­வரை ஆட்­சி­யி­லுள்ள அர­சாங்­கத்தின் கைப்­பி­டிக்குள் சிக்­குண்­டுள்ள பொது ஒலி­ப­ரப்பு பெரும்­பாலும் அர­சாங்­கத்தின் பிர­சார வாக­ன­மா­கவே பயன்­ப­டு­கின்­றது. சுயா­தீன ஒலி­ப­ரப்பு ஆணைக்­குழு இன்மை இலங்கை போன்ற நாடு­களில் பொது ஒலி­ப­ரப்பை அதிகம் பாதித்­துள்­ளது. இந்த சூழ்நிலையில் மக்­க­ளுக்­கான ஒலி­ப­ரப்பு என்­பது யதார்த்­த­மற்ற ஒரு கோட்­பா­டாக மாறி­விட்­டது.

எனினும் கடந்த பல தசாப்­தங்­க­ளாக இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் கீழ் இயங்கும் முஸ்லிம் சேவை இன்­று­வரை இலங்கை முஸ்­லிம்­களின் இத­ய­மா­கவும் ஆன்­மா­வா­கவும் இருந்து வரு­கின்­றது. கடந்த ஒரு தசாப்­தத்தில் ஏரா­ள­மான விமர்­ச­னங்­களைச் சந்­தித்­த­போதும் அதன் சமூக அறு­வடை காலத்தால் அழி­யா­தது என்­பதை உறு­தி­யாகக் கூற­மு­டியும்.

முஸ்லிம் சேவையின் வர­லாற்றை ஆவ­ணப்­ப­டுத்தும் முயற்­சிகள் சில இடம்­பெற்­றுள்­ளன. ஏரா­ள­மான சிறு கட்­டு­ரை­களும் எழு­தப்­பட்­டுள்­ளன. எனினும் முஸ்லிம் ஒலி­ப­ரப்பின் தொடக்கப் புள்ளி தொடர்பில் சற்று தெளி­வீனம் இருந்து வரு­கின்­றது. முறை­யான ஆய்­வுகள் இடம்­பெ­றாமை இதற்­கான கார­ணங்­களில் ஒன்­றாக இருக்க முடியும்.

கட்­டு­ரையின் நோக்கம்
குறிப்­பாக சுமார் 60களுக்கு முற்­பட்ட முஸ்லிம் சேவையின் வர­லாற்றைத் தேடிப்­பார்ப்­பது இக்­கட்­டு­ரையின் நோக்­க­மாகும். இது ஒரு ஆரம்ப முயற்சி மாத்­தி­ரமே. இதில் பல விடு­ப­டு­தல்கள் இருக்க முடியும். போதா­மை­களும் இருக்­கலாம். நேர்த்­தி­யான வர­லாற்று ஆவணம் இனி­மே­லா­வது எழு­தப்­பட இது ஒரு முன்­னோடி முயற்­சி­யாக இருக்­கலாம்.

நதி மூலம்
பிர­பல சிங்­கள ஊடக ஆய்­வா­ள­ரான கலா­நிதி நந்­தன கரு­ணா­நா­யக்க எழு­திய இலங்கை ஒலி­ப­ரப்பு வர­லாறு தொடர்­பான ஆய்வில் 1937ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி முதன் முதலில் சிங்­க­ளத்தில் புனித அல்­குர்ஆன் ஓதல் இடம்­பெற்­ற­தா­கவும் இதில் மௌலவி எச். எம். எஸ். சலா­ஹுத்தீன் அவர்கள் பங்­கெ­டுத்­த­தா­கவும் குறிப்­பி­டு­கின்றார். இதனை இப்­போ­துள்ள முஸ்லிம் சேவை­யுடன் நேர­டி­யாக தொடர்­பு­ப­டுத்த முடி­யா­விட்­டாலும் முஸ்­லிம்­க­ளுக்­கான ஒலி­ப­ரப்பின் தோற்­று­வா­யாக இதனை கரு­து­வதில் தவ­றில்லை.

இதனைத் தொடர்ந்து 1940 ஒக்­டோபர் 28ஆம் திகதி சேர் ஜோன் கொத்­த­லா­வல ஒலி­ப­ரப்பு தொடர்­பான பரிந்­து­ரை­களை வழங்­கு­வ­தற்­கான கே. வைத்­தி­ய­நாதன் குழுவை நிய­மித்தார். இதில் எச்.எம்.எம். கஸ்­ஸாலி என்­பவர் இடம்­பெற்றார். கே.வைத்­தி­ய­நாதன் குழு உரு­வாக்­கப்­பட்ட அடுத்த ஆண்டு (1941) மற்­று­மொரு விசேட குழுவும் நிய­மிக்­கப்­பட்­டது. ஒலி­ப­ரப்பு மேம்­பாடு தொடர்­பான பரிந்­து­ரை­களை வழங்­கு­வதே இக்­கு­ழுவின் நோக்­க­மாகும். இக்­குழு நிகழ்ச்சி ஆலோ­சனைக் குழுவில் ஒரு முஸ்லிம் அங்­கத்­த­வரும் இடம்­பெற வேண்டும் என்­பதை பரிந்­துரை செய்­தது. இஸ்­லா­மி­யர்­களை இலக்­காகக் கொண்ட சில நிகழ்ச்­சிகள் இக்­கா­லத்தில் இடம்­பெற்­றி­ருப்­ப­தையே இது குறிக்­கின்­றது.
தொடர்ந்து 1942 ஆம் ஆண்டு செப்­டம்பர் 3ஆம் திகதி ஒலி­ப­ரப்பு நிலையம் பொரல்லை கொட்டா வீதிக்கு மாற்­றப்­பட்­டது. டொரிங்டன் மையம் இரா­ணுவ வீரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. 1947ஆம் ஆண்டு வரை வானொலி ஒலி­ப­ரப்பு கொட்டா வீதி­யி­லி­ருந்தே இடம்­பெற்­றது. இதில் அவ்­வப்­போது இஸ்­லா­மிய நிகழ்ச்­சிகள் கணி­ச­மான அளவு இடம்­பெற்­றுள்­ளன. எனினும் முஸ்லிம் நிகழ்ச்­சி­க­ளுக்­கென்று தனி­யான நிகழ்ச்சி நிரல் இருக்­க­வில்லை. அதி­க­மான முஸ்லிம் பாட­கர்கள் இக்­கா­லத்தில் இஸ்­லா­மிய கீதங்­களை பாடி­யுள்­ளனர். மர்ஹூம் எம். ஏ. ஹசன் அலியார் (1946) முதன் முதலில் இஸ்­லா­மிய கீதங்­களைப் பாடி­யுள்ளார். இவரைத் தொடர்ந்து எம். எம். ஹுசைன் (1947) மற்றும் எம். முஹம்­மது அலி (கலா­நிதி. என். எம். நூர்தீன் அவர்­களின் சகோ­தரன்) போன்றோர் பாடி­யுள்­ளனர்.

இக்­கா­லத்தில் தொழில் மற்றும் சமூக சேவைகள் அமைச்­ச­ரா­க­வி­ருந்த சேர். ரீ.பி. ஜாயா வானொலி ஒலி­ப­ரப்பில் முஸ்லிம் சமூகம் பய­ன­டைய வேண்டும் என்­பதில் ஆர்­வ­முள்­ள­வ­ராக இருந்தார். 1948 செப்­டம்பர் 11ஆம் திகதி பாகிஸ்­தானின் ஸ்தாபகத் தந்தை முகம்­மது அலி ஜின்னா அவர்கள் வபாத்­தா­ன­போது முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மன்றி முஸ்லிம் அல்­லா­த­வர்­களும் வானொலி வாயி­லாக மர­ணத்­து­யரை வெளிப்­ப­டுத்­தினர். இந்த நிகழ்வு இடம்­பெற்­றதில் சேர்.ரீ.பி.ஜாயா­வுக்கு அதிக பங்­குண்டு. இதனைத் தொடர்ந்து விசேட தினங்­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்­கான சில நிகழ்ச்­சிகள் இடம்­பெற்று வந்­துள்­ளன.

1947ஆம் ஆண்டு மற்­று­மொரு முக்­கி­ய­மான நிகழ்வு இடம்­பெற்­றது. ஜூலை – ஆகஸ்ட் முழு­வதும் பாட­கர்­க­ளுக்­கான குரல் தேர்வு இடம்­பெற்­றது. இதற்­காக பாத்­கண்டே பல்­க­லைக்­க­ழ­கத்தின் பேரா­சி­ரியர் ரத்ன ஷங்கர் மற்றும் தென்­னிந்­தி­யாவைச் சேர்ந்த பேரா­சி­ரியர் ஆர். சிறி­னி­வாசன் ஆகியோர் அழைக்­கப்­பட்­டனர். இதில் 310 தமிழ் பாட­கர்­களும் 21 முஸ்லிம் பாட­கர்­களும் பங்­கு­பற்­றினர். எத்­தனை முஸ்­லிம்கள் தெரிவு செய்­யப்­பட்­டார்கள் என்­பது தெரி­ய­வில்லை.

அதே­வேளை 1947 டிசம்பர் 14 ஆம் திகதி மௌலவி எச். எஸ். எம்.சலா­ஹுதீன் அவர்கள் மீண்டும் குர்ஆன் உரை நிகழ்த்­து­வ­தற்­காக அழைக்­கப்­பட்­ட­தாக நந்­தன கரு­ணா­நா­யக்க எழு­து­கின்றார். இது முஸ்­லிம்­களின் ஆன்­மிகத் தேவை­யினை வானொலி நிலையம் உணர்ந்­தி­ருந்­தது என்­ப­தையே எடுத்துக் காட்­டு­கின்­றது.

1951 ஆம் ஆண்டு பேரா­சி­ரியர் அல்­லாமா எம்.எம். உவைஸ் அவர்கள் அப்­போது முஸ்லிம் நிகழ்ச்­சிக்­கான தனி­யான அதி­கா­ரி­யாக நிய­மிக்­கப்­பட்டார். அப்­போது அவர் கொழும்பு சாஹிராக் கல்­லூ­ரியில் ஆசி­ரி­ய­ராகக் கட­மை­யாற்றி வந்தார். இவர் இஸ்­லா­மியத் தமிழ் இலக்­கியம், மொழி, சமயம், தத்­துவம் போன்­ற­வற்றில் அதிக புலமை கொண்­ட­வ­ராக காணப்­பட்டார். இவர் கட­மை­பு­ரிந்த காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட வானொலி அனு­ம­திப்­பத்­தி­ரங்­களைப் பெற்றுக் கொண்­ட­வர்கள் தொடர்­பான ஆய்வில் அப்­போது 4997 தமி­ழர்­களும் 2646 முஸ்­லிம்­களும் வானொலி அனு­ம­திப்­பத்­தி­ரங்­களைப் பெற்­றி­ருந்­த­தாக அறி­யப்­பட்­டது. நிகழ்ச்­சி­களைத் தயா­ரிப்­ப­தற்­காக 1953 ஏப்ரல் 11 இல் பேரா­சி­ரியர் எம். எம். உவைஸ் நிய­மிக்­கப்­பட்­ட­தா­கவும் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. இதன் பின்­னரே முஸ்லிம் நிகழ்ச்­சி­க­ளுக்குத் தனி­யான நிகழ்ச்சி நிரல் தயா­ரிக்­கப்­பட்டு வெள்ளி இர­வு­களில் அல்­குர்ஆன் விளக்கம், மற்றும் கிராஅத், ஏனைய தினங்­களில் வேறு நிகழ்ச்­சி­களும் இடம்­பெற்­றுள்­ளன.

1950களுக்குப் பின்னர் முஸ்லிம் நிகழ்ச்சி சில நடை­மு­றைச்­சிக்­கல்­களை எதிர்­கொண்­டது. நிகழ்ச்­சிகள் இடை­ந­டுவே நிறுத்­தப்­பட்­டன. நேரடி ஒலி­ப­ரப்­புகள் தன்­னிச்­சை­யாக நிறுத்­தப்­பட்­டன. சோனக இஸ்­லா­மிய கலா­சார நிலையம் நடத்­திய வரு­டாந்த அல்­குர்ஆன் மனனப் போட்­டியின் ஒரு மணி­நேர நேரடி ஒலி­ப­ரப்பு தன்­னிச்­சை­யாக நிறுத்­தப்­பட்­டது. இது தொடர்­பாக சேர். ராசிக் பரீட் அவர்கள் பாரா­ளு­மன்­றத்­திலும் எடுத்துக் கூறி­யுள்ளார். ஆண்­டு­தோறும் சுமார் 12 நேரடி ஒலி­ப­ரப்­புக்­களை ஏனைய சமய நிகழ்ச்­சி­க­ளுக்கு வழங்க முடியும் என்றால் ஏன் ஒரு நேரடி ஒலி­ப­ரப்பை இஸ்­லா­மிய நிகழ்ச்­சி­க­ளுக்கு வழங்க முடி­யாது எனக் கேள்­வி­யெ­ழுப்­பினார். முஹம்­மது நபி (ஸல்) அவர்­களின் பிறந்த தினத்தை முன்­னிட்டு மௌலவி டப்ளிவ். எல். எச். எம் ராமிஸ் ஆலிம் அவர்­களால் நிகழ்த்­தப்­பட்ட மௌலிது நிகழ்வு 1952 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திக­தி­யன்று காலை 7.15 தொடக்கம் 7.45 வரை இடம்­பெற ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. இதற்­கான முன்­கூட்­டிய அனு­ம­தியும் பெறப்­பட்­டி­ருந்­தது. எனினும் இந்த நிழ்ச்சி ஏற்­கவே – 1951ஆம் ஆண்டு ஒலி­ப­ரப்­பா­கிய நிகழ்ச்­சி­யொன்றின் மறு ஒலி­ப­ரப்பு என்­ப­தாகக் கூறி நிறுத்­தப்­பட்­டது. இது தொடர்­பாக சோனக இஸ்­லா­மிய நிலையம் முறைப்­பாடு ஒன்­றையும் பதிவு செய்­தது. இது கலா­சார நிலையம் 1951ஆம் ஆண்டு புனித அல்­குர்ஆன் மனனப் போட்­டி­யொன்றை நடத்­தி­யது என்­ப­தையும் அதன் தொகுப்பு அல்­லது நேரடி ஒலி­ப­ரப்பு இலங்கை வானொ­லியில் இடம்­பெற்­­றுள்­ளது என்­ப­தையும் எடுத்துக் காட்­டு­கின்­றது.

முஸ்லிம் ஒலி­ப­ரப்பின் முத­லா­வது மைற்கல்
முஸ்லிம் ஒலி­ப­ரப்பு வர­லாற்றில் மிக­முக்­கி­ய­மான மைற்­கல்­லாக 1953ஆம் ஆண்டு அமை­கின்­றது. இவ்­வாண்டு என். ஈ. வீரசூரிய தலை­மையில் ஒலி­ப­ரப்பு ஆணைக்­குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்­டது. இக் குழுவில் ஏ. எச். எஸ். இஸ்­மாயில் அங்­கத்­த­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார். இதன் செய­லா­ள­ராக கலா­நிதி ஏ. எம். சஹாப்தீன் கட­மை­யாற்­றினார். இக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் முஸ்லிம் சேவையின் தோற்­று­வாயில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. பெரும்­பாலும் தமிழ் சேவையின் கீழ் இயங்­கி­வந்த முஸ்­லிம்­க­ளுக்­கான ஒலி­ப­ரப்பு தனி­யா­ன­தொரு முஸ்லிம் நிகழ்ச்சி அல­கா­கவும் சுதந்­தி­ர­மான தனிப் பிரி­வா­கவும் நிறு­வப்­ப­ட­வேண்டும் என இக்­கு­ழுவால் பரிந்­து­ரைக்­கப்­பட்­டது.

பரிந்­து­ரை­களை முன்­வைக்க முன்னர் இவ்­வா­ணைக்­குழு முஸ்லிம் நேயர்­க­ளி­டமும் நிறு­வ­னங்­க­ளி­டமும் கருத்­துக்­களைக் கேட்டுத் தொகுத்­துள்­ளனர். பல நேயர்கள் எழுத்­து­மூல முறைப்­பா­டு­களை தெரி­வித்­தி­ருந்­தனர். குறிப்­பாக சோனக வானொலிக் கலை­ஞர்கள் சங்கம், அகில இலங்கை சோனகர் சங்கம், வை.எம்.எம்.ஏ., அகில இலங்கை முஸ்லிம் லீக், சோனகர் இஸ்­லா­மிய கலா­சார நிலையம் என்­பன முஸ்­லிம்­க­ளுக்­கான தனி­யான ஒரு சேவை உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பதை எழுத்­து­மூலம் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன.

தமிழ் சேவையின் நேரடிக் கண்­கா­ணிப்­பி­லி­ருந்­த­போது இஸ்­லா­மிய நிகழ்ச்­சி­க­ளுக்கு போதிய அவ­தானம் செலுத்­தப்­ப­டா­மையை ஆணைக்­குழு மிகக்­காத்­தி­ர­மாகப் பதிவு செய்­தி­ருக்­கின்­றது. முஸ்லிம் கலை­ஞர்­களும் ஒலி­ப­ரப்­பா­ளர்­களும் சில கசப்­பான அனு­ப­வங்­களைச் சந்­தித்­த­தையும் ஆணைக்­குழு பதிவு செய்­துள்­ளது. அப்­போது போதிய வானலை நேரங்கள் இருந்­த­போ­திலும் முஸ்லிம் நிகழ்ச்­சிகள் இறு­திக்­கு­றி­யி­சையை நிறைவு செய்ய முதல் நிறுத்­தப்­பட்ட கசப்­பான அனு­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளமை பதி­வா­கி­யுள்­ளது. முஸ்­லிம்­களால் எழு­தப்­பட்ட வானொலி பிர­திகள் நியா­ய­மற்ற கார­ணங்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­டதும் பதி­வா­கி­யுள்­ளது.

முஸ்லிம் நிகழ்ச்சி அலகு ஒன்றின் தோற்­றத்­திற்­கான போதிய பின்­புலம் இருப்­பதை ஆணைக்­குழு உள்­வாங்கிக் கொண்­டது. அப்­போது ஆணைக்­குழு தமிழ் ஆலோ­ச­னைக்­குழு தலை­வ­ரிடம் கருத்­துக்­களை கேட்­டது. அவர் வழங்­கிய கடி­தத்தில் “தனி­யான முஸ்லிம் பிரிவு உரு­வாக்­கப்­ப­டு­வதில் எந்த ஆட்­சே­ப­னையும் இல்லை. அது தமிழ் சேவையின் ஒரு தனி அல­காக இருக்­கலாம். தமிழ் சேவை முஸ்லிம் பிரிவின் தேவை­களை நிறைவு செய்­யலாம். ஆனால் தனி­யான அலை­வ­ரிசை ஒன்றைப் பெற்­றுக்­கொ­டுப்­பது சாத்­தி­ய­மற்­ற­தாக அமையும்” எனக் குறிப்­பிட்டார். அப்­போது முஸ்லிம் அலகு தனி­யான முஸ்லிம் அமைப்­பாளர் ஒரு­வரின் நேரடி கண்­கா­ணிப்பின் கீழ் அமைய வேண்டும் என தமிழ் ஆலோ­சனைக் குழுவின் முஸ்லிம் உறுப்­பினர் குறிப்­பிட்டார். அத்­தோடு தமிழ் சேவை தினமும் 6½ மணி­நேரம் ஒலிப்­பதால் முஸ்லிம் நிகழ்ச்­சி­க­ளுக்கு 1½ மணி­நேரம் வேண்டும் எனவும் அவர் தனது கருத்தை எழுத்து மூலம் தெரி­வித்தார். இக்­கா­லத்தில் 24397 தமி­ழர்­களும் 7293 முஸ்­லிம்­களும் வானொலி அனு­ம­திப்­பத்­தி­ரத்தை வைத்­தி­ருந்­தனர். எனவே இதனைப் பிர­தி­ப­லிக்கும் வகையில் ஒலி­ப­ரப்­புக்­காலம் 30 நிமி­டங்கள் போதாது என்றும் பதி­யப்­பட்­டது. மிக­முக்­கி­ய­மாக 6.30 ற்கும் 7.30 ற்கும் இடம்­பெற்ற முஸ்லிம் நிகழ்ச்­சிகள் முஸ்­லிம்­களின் இரண்டு தொழுகை நேரங்­களைப் பாதிப்­பதால் நிகழ்ச்சி நேரம் மாற்­றப்­பட வேண்டும் எனப்­பட்­டது.

அதே நேரம் ஆணைக்­கு­ழுவின் பந்தி 143 (பக்கம் 56) பின்­வ­ரு­மாறு தனது பரிந்­து­ரையை பதிவு செய்­கின்­றது. “முஸ்­லிம்­களை மைய­மாகக் கொண்டு ஒலி­ப­ரப்­பாக்­கப்­படும் எந்த ஒரு நிகழ்ச்­சியும் முஸ்­லிம்­களின் தொழுகை நேரத்தை பாதிக்­கக்­கூ­டாது எனும் அடிப்­படை நிபந்­த­னையை அங்­கீ­க­ரிக்க வேண்டும்.” 30 நிமிட ஒலி­ப­ரப்­புக்­காலம் போதாது எனக் கரு­திய ஆணைக்­குழு காலை 8.00 மணி தொடக்கம் 30 நிமி­டங்கள் ஒதுக்­கப்­பட வேண்டும் என பரிந்­துரை செய்­தது. அத்­தோடு ஞாயிறு தினங்­களில் காலை 10.00 மணி -11 மணி வரை முஸ்லிம் நிகழ்ச்­சி­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட வேண்டும் என்­பது மற்­று­மொரு பரிந்­து­ரை­யாகும். இந்த ஆணைக்­கு­ழுவே முஸ்லிம் நிகழ்ச்­சி­க­ளுக்­காக தனி­யான ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்­பதைப் பதிவு செய்­தது. தமிழ் சேவையின் நேர­டித்­த­லை­யீடு இன்றி பிர­தி­நி­கழ்ச்சிப் பணிப்­பா­ள­ருக்கு முஸ்லிம் பிரிவு பொறுப்­புக்­கூற வேண்டும் என்­பதும் நிய­தி­யா­கி­யது.

1953ஆம் ஆண்டு ஆணைக்­கு­ழுவின் அழுத்­த­மான சில பரிந்­து­ரை­களை கவ­னிப்­பது முக்­கியம். சமய நிகழ்ச்­சி­க­ளுக்கு எவ்­வ­ளவு நேரம் வழங்­கப்­பட வேண்டும் என்ற உரை­யாடல் ஆணைக்­கு­ழுவின் முன் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அப்­போது ஒரு வாரத்­திற்கு ஒலி­ப­ரப்­பாக்­கப்­படும் மொத்த வானலை நேரத்தில் 10வீதம் மாத்­தி­ரமே சமய நிகழ்ச்­சி­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட வேண்டும் எனும் நிலைப்­பாட்டை ஆணைக்­குழு உறு­தி­யாகக் கொண்­டி­ருந்­தது.

எவ்­வா­றா­யினும் 1952ஆம் ஆண்டு முதல் சமய நிகழ்ச்­சி­க­ளுக்­கான நேர ஒதுக்­கீடு பின்­வரும் அடிப்­ப­டையில் அமைந்­தி­ருந்­தது (பார்க்க அட்டவணை). அதா­வது, ஒரு வாரத்தின் மொத்த ஒலி­ப­ரப்புக் காலத்தில் 10வீத­மான நேரம் சமய நிகழ்ச்­சி­க­ளுக்­காக வழங்­கப்­பட்­டது.

எவ்­வா­றா­யினும் இந்த நேர ஒதுக்­கீடு தொடர்­பாக கார­சா­ர­மான விமர்­ச­னங்கள் வெளி­வந்­தன. நேர ஒதுக்­கீடு தொடர்­பான இறு­தித்­தீர்­மானம் 1953 ஜூன் மாதம் வெளி­யா­ன­போது கிறிஸ்­தவ ஆலோ­ச­னைக்­கு­ழுவும் கிறிஸ்­தவ சமய நிறு­வ­னங்­களும் இதில் திருப்­தி­ய­டை­ய­வில்லை. சமய நிகழ்ச்­சி­க­ளுக்­காக இத­னை­விட அதி­க­மான நேரம் ஒதுக்­கப்­பட வேண்டும் என்­பது அவர்­க­ளது எதிர்­பார்ப்­பாக இருந்­தது. எனினும் ஆணைக்­குழு இந்த நேர ஒதுக்­கீட்டில் எந்த அதி­க­ரிப்­பையும் பரிந்­து­ரைக்­க­வில்லை.

1954 ஆம் ஆண்டு மார்ச் மூவர் அடங்­கிய குழு ஒன்று அப்­போ­தைய ஒலி­ப­ரப்புச் செல்­நெ­றி­களை அவ­தா­னிக்க டில்­லிக்கும் இந்­தி­யா­வி­லுள்ள இரண்டு பிராந்­திய நிலை­யங்­க­ளுக்கும் விஜயம் ஒன்றை மேற்­கொண்­டனர். இதில் கலா­நிதி ஏ. எம். சஹாப்­தீனும் இடம்­பெற்றார். அங்கு ஒலி­ப­ரப்பு உத்தி தொடர்­பான பல தர­வு­களை அவர் ஆவ­ணப்­ப­டுத்­தினார். அகில இந்­திய ஒலி­ப­ரப்பு உத்­திகள், நிகழ்ச்­சித்­தரம், சம­யம்சார் உள்­ள­டக்­கங்கள், இஸ்­லா­மி­யர்­களின் இசை­வ­ழக்­காறு என்­ப­ன­வற்றை பதிவு செய்தார். அந்த அறி­வினை அவர் ஆணைக்­குழு அறிக்கை எழுத பயன்­ப­டுத்­தினார். முக்­கி­ய­மாக, இந்த நேர அளவு போதி­யது என்றும் இதில் மாற்­றத்தை எற்­ப­டுத்­து­வ­தற்­கான தேவை இல்லை எனவும் கரு­தப்­பட்­டது.

ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் அல்­குர்ஆன் மொழி­பெ­யர்ப்பு, மௌலீது மனா­கிப்கள், ஹதீ­து­களை முதன்­மைப்­ப­டுத்­திய உரைகள், கிரா­மியப் பெண்­க­ளுக்­கான நிகழ்ச்­சிகள், அரபு, உருது, மலே பாணி­களில் அமைந்த இசைகள் நிகழ்ச்­சி­களில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டலாம் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அந்த வகையில் வார­மொன்­றிற்கு 7 மணித்­தி­யா­லங்­க­ளாக அமையும் முஸ்லிம் நிகழ்ச்­சிகள் 2 மணி நேரம் சம­யத்­திற்கும் 5 மணி நேரம் கலா­சார நிகழ்ச்­சி­க­ளுக்கும் ஒதுக்­கப்­ப­டலாம் எனப்­பட்­டது.

அதே­வேளை 1953ஆம் ஆண்டு ரமழான் விஷேட நிகழ்ச்­சிகள் இடம்­பெற்­ற­தா­கவும் தென்­னிந்­தியப் பாடகர் இசை முரசு ஈ.எம். நாகூர் ஹனிபா இலங்­கைக்கு அழைக்­கப்­பட்­ட­தா­கவும் சில பதி­வுகள் உள்­ளன. இஸ்­லா­மிய நிகழ்ச்­சி­களை ஒலிப்­ப­திவு செய்­வ­தற்­காக ஒலிப்­ப­திவுக் குழு மட்­டக்­க­ளப்­பிற்குச் சென்று நாட்டார் பாடல்கள் பல­வற்றை ஒலிப்­ப­திவு செய்­த­தா­கவும் அறிய முடி­கின்­றது. ஆணைக்­குழு அறிக்­கையின் பல பகு­திகள் (ஆணைக்­குழு அறிக்கை பக்கம் 83, 84) முஸ்லிம் நாட்டார் வழக்­கினை உள்­வாங்­கு­வது முக்­கியம் எனக் குறிப்­பிட்­டுள்­ளது.

ஆணைக்­குழு அறிக்­கையை வாசிக்­கும்­போது அதன் செய­லா­ள­ரான கலா­நிதி தேச­மா­னிய ஏ.எம். சஹாப்தீன் அவர்­களும் அதன் அங்­கத்­தவர் ஏ.எச்.எம். இஸ்­மாயில் அவர்­களும் பாரிய சமூ­கப்­ப­ணி­யாற்­றி­யமை தெரி­கின்­றது. இரு­வரும் ஒலி­ப­ரப்­பா­ளர்கள் இல்­லா­விட்­டாலும் நேர்த்­தி­யான முஸ்லிம் ஒலி­ப­ரப்பு இலங்கை முஸ்­லிம்­களின் ஒட்­டு­மொத்த சமூக மேம்­பாட்­டுக்கு அதீத பங்­காற்ற முடியும் என்­பதை நன்கு தெரிந்­தி­ருந்­தார்கள். இரு­வ­ரது சமூக பிரக்­ஞையும் தூர­த­ரி­ச­னமும் பின்­னாளில் முஸ்லிம் சேவை ஒரு பள்­ளிக்­கூடம் போல, பல்­க­லைக்­க­ழகம் போல வளர வழி­வ­குத்­தது.

ஆணைக்­கு­ழுவின் பின்­வரும் வாச­கங்கள் எதிர்­கா­லத்தில் முஸ்லிம் சேவை எவ்­வாறு அமைய வேண்டும் என்­பதை துல்­லி­ய­மாக எடுத்­துக்­காட்­டு­வ­தாக அமை­கின்­றன. “எவ்­வா­றா­யினும், ஆக்க பூர்­வ­மான விட­யங்­க­ளுக்­காக நேரம் ஒதுக்­கா­த­வரை முஸ்லிம் சமூ­கத்தின் கலா­சார மேம்­பாட்­டுக்­கான பெறு­ம­தி­மிக்க பாரம்­ப­ரியம் ஒன்றை உரு­வாக்க முடி­யாது.” இது கலை, கலா­சார, பண்­பாட்டு செழு­மை­மிக்­க­தாக சமூ­கமும் ஒலி­ப­ரப்பும் அமைய வேண்டும் எனும் தாகத்தை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.

1954 ஆம் ஆண்டு இஸ்­லா­மிய நிகழ்ச்­சிக்­க­ளுக்­கான தனி­யா­ன­தொரு ஆலோ­ச­னைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. இக்­குழு அமைக்­கப்­ப­டு­வதில் சோனக இஸ்­லா­மிய கலா­சார நிலை­யத்­திற்கு அதிக பங்­குண்டு. இதில் எம்.ஐ.எம்.ஹனிபா, எஸ்.எம்.எச். மஸூர், எம்.கே.எம். அபூ­பக்கர், பீ.ஜே.எச்.பாஹர் (ஆசி­ரியர்) போன்றோர் இடம்­பெற்­றனர். இவர்­களுள் எம்.ஐ.எம். ஹனிபா தமிழ் ஆலோ­சனை குழு­விலும் உறுப்­பி­ன­ராக இருந்தார். இதே குழு 1955ஆம் ஆண்டும் சேவையில் இருந்­தது. 1954ஆம் ஆண்டு தமிழ் சேவையில் வாராந்த ஒலி­ப­ரப்பு நேரம் 47 மணி­நே­ர­மாகக் காணப்­பட்­டது. இதில் 3.7 வீத கால அளவு, அதா­வது தினமும் ஒன்றே முக்கால் மணித்­தி­யாலம் முஸ்லிம் நிகழ்ச்­சி­க­ளுக்­காக வழங்­கப்­பட்­டன.

1953 ஜூலை 6ஆம் திகதி முதல் தினமும் 30 நிமி­டங்கள் முஸ்லிம் நிகழ்ச்­சிகள் தமிழ் சேவையில் இடம்­பெற்­ற­தாக சில குறிப்­புகள் உள்­ளன. முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்­பாளர் மர்ஹூம் இசட் எல். எம். முஹம்மத் தன்­கைப்­பட எழு­திய ஆவணம் ஒன்றில் 1953 ஜூலை 6ஆம் திக­தியே முதல் 30 நிமிட நிகழ்ச்சி தொடங்­கி­ய­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. 1953 ஆம் ஆண்டு ஒலி­ப­ரப்பு ஆணைக்­குழு தம் பணி­களை ஆரம்­பிக்க முன்­னரே 30 நிமிட நிகழ்ச்­சிகள் தமிழ் சேவையில் தினமும் இடம்­பெற்­ற­தாகக் குறிப்­பி­டு­கின்­றது.

1953 ஆம் ஆண்டு ஆணைக்­கு­ழுவின் அறி­மு­கத்தின் பின்னர் 1954களில் முஸ்லிம் நிகழ்ச்­சிகள் 30நிமிடம் ஒலி­ப­ரப்­பா­கின. இவ்­வாண்­டுக்­கு­ரிய பணிப்­பாளர் நாய­கத்தின் அறிக்­கையின் பிர­காரம் இவ்­வாண்டு பேரு­வளை வரு­டாந்த அஞ்சல், கொள்­ளுப்­பிட்டி ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் இடம்­பெற்ற ஹஜ்­ஜுப்­பெ­ருநாள் தொழுகை மற்றும் சொற்­பொ­ழிவு சாஹிராக் கல்­லூ­ரியில் இடம்­பெற்ற மிஹ்ராஜ் இரவு நிகழ்­வுகள் என்­ப­ன­வற்­றுடன் மக்கள் பங்­கேற்­பு­ட­னான ஒலிப்­ப­திவு நிகழ்ச்­சிகள் இடம்­பெற்­ற­தா­கவும் அறிய முடி­கின்­றது. இக்­கா­லத்தில் ஆங்­கில சேவையில் வாரந்­தோறும் 15 நிமிட நிகழ்ச்­சி­களும் இடம் பெற்­றுள்­ளன. அப்­போது வாரத்தில் 60 மணி நேரங்கள் ஆங்­கில சேவை நிகழ்ச்­சிகள் இடம்­பெறும்.

இவ் ஆரம்­பக்­கால முஸ்லிம் நிகழ்ச்­சி­களை நடத்­தி­ய­வர்­க­ளுக்கு சோனக இஸ்­லா­மிய காலா­சார இல்லம் பல்­வேறு வழி­களில் உத­வி­யுள்­ளது. குறிப்­பாக 1952 – 1960 வரை மக்கள் அவை உறுப்­பி­ன­ராக இருந்த சேர். ராஸிக் பரீட் அவர்­களின் ஸ்தாபகத் தலை­வ­ராக இருந்த கலா­சார இல்லம் முஸ்லிம் வெளி­யி­லி­ருந்து வரும் உல­மாக்­க­ளுக்கு சன்­மா­னங்­களை வழங்­கி­யது.

வெளி­யி­லி­ருந்து வரும் கலை­ஞர்­க­ளுக்கு தெமட்­ட­கொ­டவில் இருந்த ‘பாஷா விலா’ இல்­லத்தில் இல­வசத் தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுத்­தது. வானொ­லியில் முதன்­மு­தலில் அதான் கூறிய ராமிஸ் ஆலிமை ஏற்­பாடு செய்­ததும் இவர்­களே. முஸ்­லிம்­க­ளுக்­கான தனி­யான நிழ்ச்­சி­களை வழங்­கு­வது ஒரு சுமை­யாகப் பார்க்­கப்­பட்­ட­போது சேர் ராஸிக் பரீட் அவர்கள் கலா­சார இல்­லத்தின் மூலம் அவற்றை பொறுப்­பெ­டுக்க முடியும் எனத் துணிந்து கூறி­யுள்ளார். அப்­போது முஸ்லிம் விவ­கா­ரங்­க­ளுக்­கான தனி­யான திணைக்­களம் இல்­லா­ததால் முஸ்லிம் ஒலி­ப­ரப்­புக்குத் தேவை­யான சகல உத­வி­க­ளையும் வழங்க அவர் சோனக இல்­லத்தைப் பயன்­ப­டுத்­தி­யுள்ளார்.

இரண்­டா­வது மைற்கல்
1956 ஆம் ஆண்டு ஒலி­ப­ரப்பு மேம்­பாடு தொடர்­பான பரிந்­து­ரை­களை முன்­வைக்க ஹுலு­கல்ல குழு நிய­மிக்­கப்­பட்­டது. இக்­குழு 1953ஆம் ஆண்டு என்.ஈ. வீரசூரிய ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை நுணுக்­க­மாக கவ­னித்­தனர். இக்­குழு முஸ்லிம் நிகழ்ச்­சி­களை ஒரு மணி நேர­மாக முன்னர் வழங்­கப்­பட்ட பரிந்­து­ரையை ஏற்­றுக்­கொண்­டது. இதே ஆண்டு சிங்­கள மரிக்கார் என அழைக்­கப்­பட்ட சீ.ஏ.எஸ்.மரிக்கார் ஒலி­ப­ரப்­புக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக இருந்­துள்ளார். இதே­யாண்டு மர்ஹும் காமில் மரைக்கார் முஸ்லிம் சேவையில் நிய­மனம் பெற்றார். இதே ஆண்டு (தயாரிப்பு உதவியாளர்) பெப்ரவரி மாதம் இசட்.எல்.எம். முஹம்மத் அவர்கள் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்டார்.

நந்தன கருணாநாயக்கவின் கட்டுரையில் 1956ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முஸ்லிம் சேவை தனியாக ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றார். இவ்வாண்டுக்கான பணிப்பாளர் நாயக அறிக்கையில் 1956ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் முஸ்லிம் ஒலிபரப்பு 1 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றது. அதேபோன்று ஞாயிறு முஸ்லிம் பாடசாலைகளுக்கான நேரமும் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாண்டு சோனக இஸ்லாமிய கலாசார இல்லம் புனித அல்குர்ஆன் மனனப்போட்டி ஒன்றை நடத்தியுள்ளது. அத்தோடு ஏறாவூரில் அல்குர்ஆன் மாநாடு ஒன்றும் இடம் பெற்றுள்ளது. தெமட்டகொட முஸ்லிம் லீக் மௌலிது ஷரீப் நிகழ்வினை நடத்தியுள்ளது. கெச்சிமலை புகாரி மஜ்லிஸும் இடம் பெற்றுள்ளது. இதேயாண்டு ‘ஆயிரத்தோர் இரவுகள்’ நாடகமாக்கப்பட்டு தொடர்ந்து 15 வாரங்கள் ஒலிபரப்பப்பட்டன. 1958 ஆம் ஆண்டு கொழும்பு பிளான் தொழிநுட்ப பங்களிப்புச் செயற்திட்டத்தின் கீழ் பாகிஸ்தானிய ஒலிபரப்பு நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ராஷித் அஹ்மத் முஸ்லிம் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க அழைக்கப்பட்டார்.

முஸ்லிம் சேவை செழுமைமிக்க ஒரு கல்விக்கூடமாக வளர சேர். ரீ.பி. ஜாயா (1947 –1950), சேர். ராஸிக் பரீட் (1952 -1962), அமைச்சர் சீ. ஏ. எஸ். மரிக்கார் (1956), கலாநிதி பதியுதீன் மஹ்மூத் (1960-1970) ஆகியோர் அளப்பெரும் பங்காற்றியுள்ளனர். கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் பங்கு தனியாகப் பேசப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்துவந்த அரசியல் தலைவர்கள் பலர் முஸ்லிம் சேவைக்கான தமது பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அவற்றை இன்னுமொரு கட்டுரையில் கலந்துரையாட வேண்டும்.
இறுதியாக, முஸ்லிம் சேவை என்பது ஒரு நீண்ட கட்டிடத் தொகுதி போன்றது. அதில் சிலர் அத்திவாரமாக இருந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் அந்தக் கட்டிடத்தின் பல்வேறு பதிகளாக இருந்துள்ளனர். ஒவ்வொருவரது பங்களிப்புக்கும் தனியான பெறுமானம் உண்டு. கடந்த ஒரு தசாப்தத்தில் இச்சேவையை நோக்கி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் பேசுவதும் இக்கட்டுரையின் நோக்கமல்ல. எனினும் அது தனியாக பேசப்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.