2019 உயிர்த்த ஞாயிறு படுகொலை விசாரணைகளும் முஸ்லிம்களும்

0 394

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினம் இலங்­கையின் கிறித்­தவ மக்­களால் என்­றுமே மறக்க முடி­யாத ஒரு நாள். சில முஸ்லிம் பாத­கர்­களின் ஈவி­ரக்­க­மற்ற செயலால் சுமார் இரு­நூற்­றைம்­பது அப்­பாவி கிறிஸ்­தவ ஆண்­களும் பெண்­களும் சிறு­வர்­களும் இறை­வனின் துதி­பா­டு­கை­யி­லேயே குண்டு வெடிப்­பினால் கொலை செய்­யப்­பட்ட ஒரு கறுப்பு தினம். அந்தக் கொடூ­ரத்தை மனி­தா­பி­மா­ன­முள்ள எவ­ராலும் மறக்­கவும் முடி­யாது, அக்­கொ­லை­கா­ரர்­களை மன்­னிக்­கவும் முடி­யாது. அந்தக் கொலை­கா­ரர்­களைப் பாது­காப்­புத்­து­றை­யினர் சுட்டுக் கொன்­றபின் அவர்­களின் பூத உடல்­க­ளுக்கு எந்­த­வித இஸ்­லா­மிய மதா­சா­ரங்­க­ளையும் செய்ய முஸ்லிம் சமூகம் மறுத்­ததே அந்தப் பாவி­க­ளுக்கு சமூகம் கொடுத்த மிகப்­பெரும் தண்­டனை எனக் கரு­தலாம். ஒரு சமூ­கத்­தினால் வேறென்­னதான் செய்ய முடியும்? அந்தக் கொலை­க­ளுக்கும் முஸ்லிம் சமூ­கத்­துக்கும் எந்தச் சம்­பந்­தமும் இல்லை என்­பது தெளிவு. எனினும் அந்தக் கொலை வெறி­யர்­களின் பேயாட்­டத்தால் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு அடுத்­த­ப­டி­யாகப் பாதிக்­கப்­பட்­டதும் இன்­று­வரை பாதிக்­கப்­ப­டு­வதும் முஸ்லிம் சமூ­கமே. அந்தச் சம்­ப­வத்தை மைய­மாக வைத்து சிங்­கள பௌத்த பேரி­ன­வா­திகள் முஸ்லிம் சமூ­கத்­தையே இன்று அன்­னி­யப்­ப­டுத்தி உள்­ளனர்.

இவை ஒரு புற­மி­ருக்க, அந்தச் சம்­ப­வத்­தைப்­பற்றிப் பூர­ண­மாக விசா­ரித்து அதன் உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரிகள் யார் என்­பதைக் கண்­ட­றிந்து அவர்­க­ளுக்குத் தக்க தண்­டனை வழங்­க­வேண்­டு­மென்று இரண்டு விசா­ரணைக் குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டன. ஒன்று நல்­லாட்சிக் காலத்தில், மற்­றது தற்­போ­தைய ராஜ­பக்ச ஆட்­சியில். இரண்­டா­வது குழு சமர்ப்­பித்த சுமார் 100,000,000 வார்த்­தை­களைக் கொண்ட நீண்ட அறிக்­கையைப் படித்துத் தக்க சிபா­ரி­சு­களைச் சுருக்­க­மாக ஜனா­தி­ப­திக்கு வழங்­கு­மாறு இன்­னொரு குழுவும் நிறு­வப்­பட்டு அதுவும் தனது அறிக்­கையைச் சமர்ப்­பித்­தது. இது­வ­ரையில் நூற்­றுக்கும் மேலான முஸ்­லிம்கள் சந்­தே­கத்தின் பெயரில் காவல் துறை­யி­ன­ராலும் உளவுப் படை­யி­ன­ராலும் கைது செய்யப்­பட்டுச் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களுள் ஓர் அர­சி­யல்­வா­தியும் முன்னை நாள் மாகாண ஆளுனர் ஒரு­வரும் இரு முஸ்லிம் மார்க்க ஆர்­வ­லர்­களும் ஓர் இளம் கவி­ஞனும் ஒரு மனித உரிமை வழக்­கு­ரை­ஞனும் அடங்­குவர். எந்தக் குற்­றமும் செய்­யாத முஸ்லிம் இயக்­கங்கள் பலவும் தடை­செய்­யப்­பட்­டுள்­ளன. ஆனால் ஜனா­தி­ப­தியின் விசா­ர­ணைக்­குழு தடை செய்­யு­மாறு பணித்த பொது பல சேனா இன்னும் சுதந்­தி­ர­மாக நட­மா­டு­வதேன்?

இத்­த­னைக்கும் மத்­தியில், அந்தக் கொலை­க­ளினால் நேர­டி­யாகப் பாதிக்­கப்­பட்ட கத்­தோ­லிக்க கிறிஸ்­தவ சமூ­கத்தின் பேராயர் மல்கம் ரஞ்ஜித் அவர்­க­ளுக்கும் மேலே குறிப்­பிட்ட நீண்ட அறிக்­கையின் பிரதி சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அவரும் அதைப் படித்­துள்ளார். இன்று அவரே பகி­ரங்­கமாக் கூறு­கிறார், இந்த விசா­ரணையால் கத்­தோ­லிக்க மக்­க­ளுக்கு இன்னும் நீதி வழங்­கப்­ப­ட­வில்லை என்றும், அதற்குப் பதி­லாக முஸ்லிம் சமூகம் வீணாகத் தண்­டிக்­கப்­ப­டு­கி­றது என்றும், இந்தச் சம்­ப­வத்தின் பிர­தான சூத்­தி­ர­தாரி அல்­லது சூத்­தி­ர­தா­ரிகள் இந்த அர­சினால் பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றது என்றும் பாரிய குற்­றச்­சாட்­டு­களை இப்­பே­ராயர் பகி­ரங்­க­மா­கவே முன்­வைத்­துள்ளார். அத்­துடன் இவ்­வி­சா­ர­ணை­கள் ­பற்­றிய அவ­ரது கவ­லை­க­ளையும் ஏமாற்­றங்­க­ளையும் பாப்­ப­ர­ச­ரி­டமும் முறை­யிட்­டுள்ளார். ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணைக்­குழு 48ஆவது முறை­யாக ஜெனிவா நகரில் இம்­மாதம் 13ஆம் திகதி கூட்­டப்­பட்டு இலங்­கையின் மனித உரிமை மீறல்­க­ளைப் ­பற்­றிய குற்­றச்­சாட்­டு­களை விவா­திக்கும் சூழலில் பேரா­யரின் கவ­லை­களும் குற்­றச்­சாட்­டு­களும் அவ்­வா­ணைக்­கு­ழுவின் கவ­னத்தை ஈர்க்கும் என்­பதில் சந்­தே­கமே இல்லை. இதற்­கி­டையே நௌபர் மௌல­விதான் இந்தச் சம்­ப­வத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யென மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத் வீர­சே­கர கூறி­யி­ருப்­பது யாரைச் சமா­தா­னப்­ப­டுத்­தவோ தெரி­ய­வில்லை. அது உண்­மை­யென்றால் ஏன் ஜனா­தி­ப­தியோ பிர­த­மரோ அதை ஊர்­ஜி­தப்­ப­டுத்­த­வில்லை? இங்கே ஒரு பம்­மாத்து நாட­கமே அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றது என்­ப­துதான் உண்மை. எல்­லா­ரையும் எப்­போதும் ஏமாற்றிக் கொண்­டி­ருக்க முடி­யாது.

2019 உயிர்த்த ஞாயிறு சம்­ப­வத்­துக்குப் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு அடுக்­க­டுக்­காக அநீதி இழைக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதை ஒரு முஸ்லிம் நீதி அமைச்­சரே கண்டும் காணா­த­துபோல் இருப்­பது ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கி­றது. இந்த நிலையில் இலங்கை முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் மதத்­த­லை­வர்­களும் இது­வரை இவை­பற்றி எதையும் கூறாமல் மௌனி­க­ளாக இருப்­பதை விளங்க முடி­யாமல் இருக்­கி­றது. பயமா? சுய­லாப அர­சியல் தந்­தி­ரமா? பேரா­யரின் துணி­வான பேச்­சுக்­க­ளாலும் நட­வ­டிக்­கை­க­ளாலும் கலக்­க­முற்ற பொது பல சேனா, சிங்கள ராவய ஆகிய பௌத்த பேரி­ன­வாத இயக்­கங்கள் கத்­தோ­லிக்க சமூ­கத்­துக்­கெ­தி­ரான பயமு­றுத்­தல்­களை அவிழ்த்­து­விட ஆரம்­பித்­துள்­ளன. காவி­யுடை ஞான­சா­ரரும் அவ­ரது வழ­மை­யான துவேஷ ராகத்தைப் பாடத் தொடங்­கி­யுள்ளார். அநீ­தியைக் காப்­ப­தற்கு அவர்­க­ளுக்­குள்ள ஒரே­யொரு ஆயுதம் இனக்­க­ல­வ­ரத்தை எப்­ப­டி­யா­வது தூண்­டி­வி­டு­வது என்­பது இந்­நாட்டின் தற்­கால வர­லாற்றின் தலை­வி­திபோல் தெரி­கி­றது.

முஸ்­லிம்­களும் பேரா­ய­ருடன் இணைந்து நீதிக்­காகக் குரல் கொடுத்தால் அது சர்­வ­தேச அரங்கில் ஓங்கி ஒலிக்கும் என்­பதும் உண்மை. அதனால் பேரி­ன­வா­தி­களின் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான பிர­சாரம் மீண்டும் வலுப்­பெற்று அது சமூ­கத்தைப் பாதிக்கும் என்ற பயம் இத்­த­லை­மை­களை மௌனி­க­ளாக்­கி­யதோ? “அச்­ச­மு­டை­யார்க்கு அர­ணில்­லை”, என்­கி­றது குறள். அதா­வது பயந்து பயந்து வாழ்­ப­வ­னுக்கு என்­றுமே பாது­காப்­பில்லை என்­பது அதன் பொரு­ளாகும். பேரா­யரைப் போன்று முஸ்­லிம்­களும் கேட்­பது நீதி­யைத்­த­விர வேறொன்­று­மில்லை. அதைக் கேட்க ஏன் தயங்க வேண்டும்? அர­சி­யல்­வா­தி­க­ளாலும் கொடுங்கோல் ஆட்­சி­யா­ளர்­க­ளாலும் பாதிக்­கப்­பட்ட உலக மக்கள் யாவரும் ஒரே குரலிற் கேட்­பதும் நீதி­யைத்­தானே. அம்­மக்கள் வாழ்­கின்ற நாடு­க­ளி­லுள்ள நீதித்­துறை இலங்­கை­யைப்­போன்று அர­சியல் மய­மாக்­கப்­பட்டு அதன் சுயா­தீ­னத்தை இழந்து நிற்­கை­யிலே சர்­வ­தேச அரங்­கி­னைத்­த­விர வேறெங்கே அவர்கள் நீதி­கேட்டுப் போரா­டலாம்? அதைத்­தானே பேரா­யரும் செய்­கிறார்? அவ­ருடன் சேர்ந்து முஸ்லிம் தலை­வர்கள் போரா­டு­வ­தற்கு ஏன் பயப்­பட வேண்டும்?

நீதி இன்றேல் அர­சாட்­சியே இல்லை என்­ப­தற்கு இப்னு பல்கி (850-934) என்னும் ஒரு முஸ்லிம் மூத­றி­ஞனின் பின்­வரும் வரிகள் சிறந்த ஓர் எடுத்­துக்­காட்டு.
“படை­க­ளில்­லாமல் அரசு இல்லை, செல்வம் இல்­லாமல் படை­க­ளில்லை, செழிப்பு இல்­லாமல் செல்வம் இல்லை, நீதி இல்­லாமல் செழிப்பே இல்லை”.

நீதியே குர்­ஆனின் குர­லும்­கூட. அதைக் கேட்­பதும் அதற்­காகப் போரா­டு­வதும் ஒவ்­வொரு முஸ்­லி­மி­னதும் கடமை. என­வேதான் முஸ்லிம் தலை­வர்கள் வாய்­பு­தைத்து மௌனி­களாய் நிற்­பதை விளங்க முடி­யாமல் இருக்­கி­றது. நாட்­டுக்குள் இருப்­ப­வர்­களே இயங்­காமல் இருக்­கும்­போது வெளியே இருப்­ப­வர்கள் எவ்­வாறு இயங்க முடியும்? அவ்­வாறு இயங்­கி­னாலும் அது மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட இயக்­க­மா­கத்தான் இருக்க முடியும். இதையும் முஸ்லிம் சமூகம் உண­ர­வேண்டும். இந்த உண்­மையை தமிழ்த் தலை­வர்­க­ளிடம் இருந்­தா­வது முஸ்லிம் தலை­மைகள் படிக்கக் கூடாதா?

முஸ்லிம் தலை­வர்­களின் மௌனத்­துக்கு சுய­லாப நோக்கு ஒரு முக்­கிய கார­ண­மாக இருக்­கலாம். ஏனெனில் அது அவர்­களின் அர­சி­ய­லுடன் ஒட்­டி­வ­ளர்ந்த ஒரு பண்பு. எரி­கின்ற வீட்டில் பிடுங்­கு­வது இலாபம் என்ற போக்­கி­லே­தானே சுமார் எழு­பது ஆண்­டு­க­ளாக முஸ்­லிம்­களின் அர­சியல் வளர்ந்து வந்­தது. அந்த நோக்­கம்­தானே இந்த நாடா­ளு­மன்­றத்­திலும் அர­சியல் சட்ட 20ஆம் திருத்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக முஸ்லிம் அங்­கத்­த­வர்­களைக் கைதூக்கச் செய்­தது? அந்த சுய­லாப அர­சியல் எந்த அள­வு­க்கு முஸ்லிம் சமூ­கத்தைப் பாதித்­துள்­ளது என்­பதை இன்னும் விளக்க வேண்­டுமா?

இன்று முஸ்லிம் சமூ­கமே அன்­னி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் நீதிக்­காகப் போரா­டாமல் மௌனம் சாதிப்­ப­தன்­மூலம் ஆட்­சி­யா­ளர்­களின் சலு­கை­க­ளையும் சன்­மா­னங்­க­ளையும் உயர் பத­வி­க­ளையும் பெறலாம் என இத்­த­லை­வர்கள் கரு­து­வார்­க­ளே­யானால் அவர்­க­ளைப்போல் மூடர்கள் இனித்தான் பிறக்க வேண்டும்.

இலங்­கை­யிலே ஜன­நா­ய­கமும் மனித உரி­மை­களும் நீதியும் இன்று புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளன. அவை மீண்டும் தோற்­று­விக்­கப்­பட வேண்­டு­மென கோடிக்­க­ணக்­கான சிங்­கள பௌத்த மக்­களும் கிறிஸ்­த­வர்­களும் தமி­ழர்­களும் போராடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். அவர்­களின் போராட்டம் நாட­ளா­விய ரீதியில் விரி­வ­டைந்து தெரு­வுக்கு வராமல் தடுப்­ப­தற்­கா­கவே இரா­ணு­வத்தைக் கொண்டு கொவிட் கொள்ளை நோயைச் சாட்­டாக வைத்து அரசு தன்னைப் பாதுகாக்கப் பல அரண்களை அமைத்துள்ளது. இவ்­வாறு கூறு­வதால் கொள்ளை நோயின் ஆபத்தை அணு­வ­ள­வி­லேனும் குறைக்க விரும்­ப­வில்லை. ஆனால் அர­சாங்­கமோ அதைக் காரணம் காட்டி மக்­களின் ஜன­நா­யக உரி­மை­களைப் பறிக்­கின்­றது என்­ப­தைத்தான் இங்கே வலி­யு­றுத்த வேண்­டி­யுள்­ளது. இது சர்­வ­தேச அமைப்­பு­க­ளுக்கும் நன்கு தெரியும். என­வேதான் முஸ்லிம் சிவில் அமைப்­பு­களும் புத்­தி­ஜீ­வி­களும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களைப் புறந்­தள்­ளி­விட்டு அந்தப் போரா­ளி­க­ளுடன் இணைய வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மா­கி­றது. முஸ்­லிம்­க­ளுக்குத் தேவை ஒரு பிர­ஜைக்­கு­ரிய நீதி­யான உரி­மை­க­ளே­யன்றி சலு­கை­க­ளல்ல.

2019 உயிர்த்த ஞாயிறு சம்­ப­வத்­தினால் முஸ்லிம் சமூ­கத்­தின்மேல் படிந்­துள்ள குற்­றக்­கறை அக­ல­வேண்­டு­மானால் பேராயர் மல்கம் ரஞ்ஜித் அவர்கள் எழுப்பும் குர­லுக்கு முஸ்­லிம்­களும் உர­மூட்ட வேண்டும். அதை முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் செய்யமாட்டார்கள். சிவில் சமூகமே செய்யவேண்டும். அவை செய்யுமா?-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.