தேச நலனுக்கு பங்களிப்புச் செய்த நளீம் ஹாஜியார்

0 5,349

நளீம் ஹாஜியார் ஞாபகார்த்த பேருரை மன்றம்

இலங்கை மண் ஈன்­றெ­டுத்த தேச நல­னுக்­காக செயற்­பட்ட உன்­னத ஆளு­மை­களில் ஒரு­வ­ராக நளீம் ஹாஜியார் திகழ்­கிறார். 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் திகதி பேரு­வளை சீனன்­கோட்­டையைச் சேர்ந்த முஹம்­மது இஸ்­மாயில், ஷரீபா உம்மா தம்­ப­தி­க்கு வாரி­சாக நளீம் ஹாஜியார் பிறந்தார். மிகுந்த வறு­மைப்­பட்ட குடும்பப் பின்­ன­ணியில் பிறந்து வளர்ந்த அவரால் ஐந்தாம் வகுப்பு வரை மட்­டுமே பாட­சாலைக் கல்­வியைத் தொடர முடி­யு­மாக இருந்­தது. இளம் வய­தி­லேயே சுய­மாக தொழில் செய்து உழைக்க வேண்­டிய நிர்ப்­பந்த நிலைக்கு அவர் தள்­ளப்­பட்டார்.

பல்­வேறு பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் வளர்ந்­து­வந்த நளீம் ஹாஜியார் பேரு­வளை மக்­க­ளது பிர­தான தொழி­லான மாணிக்­கக்கல் வர்த்­த­கத்தில் இளம் பிராயம் முதல் ஈடு­பட ஆரம்­பித்தார். அவ­ரது அய­ராத உழைப்­பி­னாலும் தொடர் முனைப்­பி­னாலும் மாணிக்க வர்த்­தகம் தொடர்பில் நன்கு அனு­ப­வமும் தேர்ச்­சியும் பெற்­ற­வ­ராக மாறினார்.

பேரு­வளை சீனன்­கோட்­டையைச் சேர்ந்த ரபீகா எனும் பெண்ணை மண­மு­டித்த நளீம் ஹாஜியார் நான்கு ஆண் பிள்­ளைகள் மற்றும் ஒரு பெண்­பிள்­ளை­யி­னது தந்தை ஆவார்.

இரத்­தி­னக்கல் வர்த்­த­கத்­திற்­கான பங்­க­ளிப்பு
நளீம் ஹாஜியார் உலகப் புகழ் பூத்த மாணிக்க வியா­பா­ரி­களில் ஒரு­வ­ராக கரு­தப்­படும் அளவு வளர்ச்சி கண்டார். உள்­நாட்டு, வெளிநாட்டு இரத்­தி­னக்கல் வர்த்­த­கத்­துக்குக் காத்­தி­ர­மான பங்­க­ளிப்­புக்­களை செய்­யு­ம­ளவு இரத்­தி­னக்கல் வர்த்­த­கத்­து­றையில் வளர்ச்சி கண்ட நளீம் ஹாஜியார் ஈற்றில் இரத்­தி­னக்கல் அரசன் (Gem King) என்று அழைக்­கப்­படும் அளவு உலகப் பிர­சித்தி பெற்றார்.

இனம், பிர­தேசம், நாடு என்ற எல்­லை­களைக் கடந்து மாணிக்க வர்த்­த­கத்தில் நம்­பிக்கை, வாய்மை, நேர்மை போன்ற உய­ரிய வர்த்­தக விழு­மி­யங்­களை தன­தாக்கிக் கொண்டு செயற்­பட்ட நளீம் ஹாஜியார், இலங்கைத் திரு­நாட்டில் மாணிக்க வர்த்­த­கத்தில் அப்­போது ஈடு­பட்­டி­ருந்த அனைத்து மத மற்றும் இனத்­த­வர்­க­ளோடும் வலு­வான உறவைப் பேணி வந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இலங்­கையில் எப்­பா­கத்­தி­லா­வது மிகவும் பெறு­மதி வாய்ந்த இரத்­தி­னக்கல் கிடைக்­கப்­பெற்றால் முதலில் நளீம் ஹாஜி­யா­ருக்கு விற்­பனை செய்­வ­தற்­காகக் கொண்டு வந்து காண்­பிக்கும் ஓர் அழ­கிய கலாச்­சா­ரத்­தையே அவர் தோற்­று­வித்­தி­ருந்தார். அதே­போன்று அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடு­க­ளி­லி­ருந்து மாணிக்க வியா­பா­ரிகள் மிகவும் மதிப்பு வாய்ந்த இரத்­தினக் கற்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக அன்­னாரை நாடி வரு­வது வழக்­க­மாக இருந்­தது. இவ்­வாறு தனி மனி­த­னாக நின்று இலங்கை தேசத்­துக்கும் ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான இரத்­தி­னக்கல் வர்த்­தகத் தொடர்பை ஏற்­ப­டுத்தி, தேசத்­துக்­கான தனது தனித்­து­வ­மான பங்­க­ளிப்பை மேற்­கொண்டார்.

இத்­த­கைய வர்த்­தக செயற்­பா­டு­க­ளுக்­கூ­டாக இலங்­கையின் சர்­வ­தேச வியா­பா­ரத்­துக்குப் பங்­க­ளிப்பு செய்­த­தோடு அந்­நியச் செலா­வ­ணியை இலங்கை தேசத்­துக்கு ஈட்டிக் கொடுப்­ப­தற்கும் பாரிய பங்­க­ளிப்­பு­களை நல்­கினார்.

1950 களில் தனது மாணிக்­கக்கல் வர்த்­தகப் பய­ணத்தை ஆரம்­பித்து நெடுங்­கால அனு­ப­வத்­தையும் முதிர்ச்­சி­யையும் அவர் பெற்­ற­துடன் மாணிக்கக் கல்லின் வகைகள், அவற்­றுக்­கான பெறு­மதி நிர்­ண­யித்தல் போன்ற மிக நுணுக்­க­மான பகு­தி­களில் ஆழ்ந்த அறிவைப் பெற்­றி­ருந்தார். மாணிக்க வர்த்­த­கத்தின் அடி­யாகத் தோன்­றிய தேசிய, சர்­வ­தேச உற­வு­களை தன்­னோடு மாத்­திரம் வைத்­துக்­கொள்­ளாது, இலங்கை நாட்டின் மாணிக்­கக்கல் வர்த்­த­கத்தின் வளர்ச்­சிக்­கா­கவும் அவற்றை உப­யோ­கித்தார். இலங்கை தேசத்­துக்கு அதிக வரு­மானம் ஈட்டித் தரும் துறை­யாக அத்­துறை மாறு­வ­தற்கு அவ­சி­ய­மான ஆலோ­ச­னை­க­ளையும் திட்­டங்­க­ளையும் அவர் இலங்கை அர­சுக்கு வழங்­கினார்.
1970ஆம் ஆண்டு இலங்கை அரசு மாணிக்­கக்கல் ஏற்­று­ம­தியை ஒழுங்­க­மைக்கும் நோக்கில் இலங்கை இரத்­தி­னக்கல் கூட்­டுத்­தா­ப­னத்­தினை உரு­வாக்கத் திட்­ட­மிட்­டது. அன்­றைய நிதி­ய­மைச்­ச­ராக இருந்த கலா­நிதி என். எம். பெரேரா நளீம் ஹாஜி­யா­ருடன் இரண்டு தட­வைகள் இது­தொ­டர்­பான கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்தி, அவ­ரி­ட­மி­ருந்து காத்­தி­ர­மான ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொண்­டமை இங்கு ஈண்டு குறிப்­பி­டத்­தக்­கது. இலங்கை மாணிக்­கக்கல் கூட்­டுத்­தா­ப­னத்தின் தோற்­றத்­துக்குப் பங்­க­ளிப்பு செய்­த­மைக்­காக, 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி நடந்த இலங்கை மாணிக்­கக்கல் கூட்­டுத்­தா­ப­னத்தின் உத்­தி­யோ­க­பூர்வ திறப்பு விழா­விற்கு இலங்கை அரசு நளீம் ஹாஜி­யாரை விஷேட அதி­தி­யாக அழைத்து கௌர­வித்­தது.

இலங்கை வர­லாற்றில் முதன்­மு­தலில் 1972 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட மாணிக்­கக்கல் கூட்­டுத்­தா­ப­னத்தின் மூலம் வெளிநாட்­டுக்கு அனுப்­ப­வேண்­டிய முத­லா­வது கல்­லையும் நளீம் ஹாஜியார் அவர்­களே வழங்கி வைத்­தமை இலங்கை மாணிக்க வர்த்­தகத் துறை வளர்ச்­சியில் கூடிய கரி­சனை அவ­ருக்கு இருந்­த­மைக்­கான சிறந்த சான்­றாகும்.
மாணிக்க வர்த்­த­கர்­க­ளுக்­கி­டையில் வலு­வான உறவைக் கட்­டி­யெ­ழுப்­பவும், அவர்­க­ளுக்குப் பய­னுள்ள ஆலோ­ச­னை­களை வழங்­கவும், பல்­க­லைக்­க­ழ­கங்­களில் மாணிக்க வர்த்­தகம் தொடர்­பான அனு­ப­வங்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் பகிர்ந்து கொள்­வ­தற்கும் அவ­ருக்கு சந்­தர்ப்பம் கிடைத்­தது. மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த மாணிக்கத் துறை தொடர்­பான விஷேட அமர்­வுக்கு பிர­தம அதி­தி­யாக கலந்து இலங்கை நாட்டில் மாணிக்கத் துறை காண­வேண்­டிய பல்­வேறு வளர்ச்­சிகள் குறித்த பல்­வேறு பய­னுள்ள ஆலோ­ச­னை­க­ளையும் கருத்­துக்­க­ளையும் தன்­னு­டைய அனு­பவ அறிவின் அடி­யாகப் பகிர்ந்து, இலங்கைப் பல்­க­லைக்­க­ழக மாணிக்கம் சார் துறைக்கு தம்­மு­டைய பங்­க­ளிப்பை வழங்­கி­யமை நினைவு கூரத்­தக்­கது.

1981ஆம் ஆண்டு இரண்டாம் எலி­சபெத் மகா­ராணி இலங்­கையைத் தரி­சித்த சந்­தர்ப்­பத்தில், அன்­றைய ஜனா­தி­பதி ஜே.ஆர் ஜய­வர்­தன அவர்­க­ளுடன் நளீம் ஹாஜியார் உள்­ளிட்ட இலங்­கையின் முன்­னணி மாணிக்க வியா­பா­ரிகள் கொழும்பு கோல்பேஸ் ஹோட்­டலில் மகா­ரா­ணியைச் சந்­தித்­தனர். அந்த வர­லாற்று சிறப்­பு­மிக்க நிகழ்வில் பிர­பல மாணிக்க வியா­பா­ரி­க­ளான நளீம் ஹாஜியார், நிமல் பத்­தி­ரன மற்றும் ஜே. குருகே ஆகியோர் அர­சுக்கு அன்­ப­ளிப்பு செய்த ‘Sri Lankan Blue Sapphire’ எனும் பெறு­மதி வாய்ந்த மாணிக்கக் கல்லை ஜனா­தி­பதி ஜே.ஆர் ஜய­வர்­தன மகா­ரா­ணிக்கு அன்­ப­ளிப்பு செய்­தார். இலங்­கையின் தேசிய நீரோட்­டத்தில் தவிர்க்க முடி­யாத ஓர் ஆளு­மை­யாக நளீம் ஹாஜியார் திகழ்ந்­த­மைக்கு இந்­நி­கழ்வு ஓர் எடுத்­துக்­காட்­டாகும்.

தேசத்­திற்­கான பணி­வான அன்­ப­ளிப்பு
சம்­பா­தித்த செல்­வத்தை தேசத்தின் பல்­வேறு நலன்­க­ளுக்­காக செல­வளித்­தமை நளீம் ஹாஜி­யாரின் சாதனை வாழ்வில் அவ­தா­னிக்கும் தனித்­து­வ­மான வர­லாற்றுச் சான்­றாகும். 1970 களில் இலங்கை அரசு எதிர்­கொண்ட பாரிய வெளிநாட்டுச் செலா­வணி நெருக்­க­டியை எதிர் கொள்­வ­தற்கு இலங்கை அர­சுக்கு நளீம் ஹாஜியார் ஒத்­து­ழைத்­தமை தேசத்தின் நலன்­களில் அவ­ருக்­கி­ருந்த பல­மான ஈடு­பாட்டை வெளிப்­ப­டுத்தும் சிறந்த சான்­றாகும்.

1974 ஆம் ஆண்டில் இலங்கை மிகப் பார­தூ­ர­மான வெளிநாட்டுச் செலா­வணிப் பிரச்­சி­னையை எதிர்­நோக்­கி­யது. இந்­நி­லையில் இலங்கை நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டியை சமா­ளிப்­ப­தற்கு அர­சாங்­கத்­துக்கு சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறு­ம­தி­யான தனது வெளிநாட்டு செலா­வ­ணியை அன்­ப­ளிப்புச் செய்தார். நாட்டின் உற்­பத்தித் திட்­டத்­திற்­கான தன்­னு­டைய “பணி­வான அன்­ப­ளிப்பு“ எனக்­கூறி பிர­த­மரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் அன்­றைய பிர­தமர் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கா­விடம் தனது அன்­ப­ளிப்பைக் கைய­ளித்தார். இலங்கை வர­லாற்றில் முதன்­மு­றை­யாக சாதா­ரண பிர­ஜை­யொ­ருவர் அர­சாங்­கத்­திற்கு வெளிநாட்டு செலா­வணி வழங்­கி­யமை வர­லாற்று முக்­கி­யத்­துவம் பெற்ற நிகழ்­வாகப் பதி­யப்­பட்­டுள்­ளது.

கல்வி மேம்­பாட்­டுக்­கான பங்­க­ளிப்பு
கல்வி மேம்­பாட்­டுக்­காக நளீம் ஹாஜியார் காத்­தி­ர­மான பங்­க­ளிப்­புக்­களை வழங்­கி­யுள்ளார். பாட­சாலைக் கல்­வியை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக பேரு­வளை மற்றும் ஏனைய பிர­தே­சங்­க­ளி­லுள்ள அரச பாட­சா­லை­க­ளது கீழ்க் கட்­டு­மான வச­தி­க­ளுக்குப் பெருந்­தொ­கை­யான பணத்தை செல­வ­ளித்து அரச பாட­சா­லை­க­ளது வளர்ச்­சிக்குப் பங்­க­ளிப்பு வழங்­கினார். துறைசார் நிபு­ணத்­துவம் கொண்ட புத்­தி­ஜீவிப் பரம்­பரை ஒன்றைத் தோற்­று­வித்து, இந்­நாட்­டுக்குப் பங்­க­ளிப்பு செய்யும் நோக்­கோடு பேரு­வ­ளையில் ஜாமிஆ நளீ­மிய்யா உயர் கலா­பீ­டத்தை நிறு­வினார். 1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் திகதி அன்­றைய கல்­வி­ய­மைச்சர் கலா­நிதி பதி­யுத்தீன் மஹ்மூத் அவர்­களால் இக்­க­லா­பீடம் திறந்து வைக்­கப்­பட்­டது.

இஸ்­லா­மியக் கற்கை நெறியை பிர­தா­ன­மாகக் கொண்டு, தேசிய உயர் கல்வி கொள்­கை­க­ளுக்­கி­ணங்க இயங்கும் ஜாமிஆ நளீ­மிய்யா உயர் கலா­பீடம் கடந்த ஐந்து தசாப்த கால­மாக நாட்­டுக்குத் தேவை­யான பட்­ட­தா­ரிகள், புத்­தி­ஜீ­விகள், அரச அதி­கா­ரிகள் மற்றும் உத்­தி­யோ­கத்­தர்­களைத் தோற்­று­வித்து தேச நிர்­மா­ணத்தில் தனித்­து­வ­மான பங்­க­ளிப்பைச் செய்து வரு­கி­றது. இந் நிறு­வ­னத்தின் கல்விப் பயணம் குறித்து இந்­நாட்டின் கல்­வி­யிய­லா­ளர்கள் மற்றும் முக்­கி­யஸ்­தர்கள் பலரும் வெகு­வாகப் பாராட்டிப் பேசி உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

“இந்தக் கலா நிலை­யத்தில் நடை­பெறும் பணிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்­டன. இதனை நிறு­வி­யதன் மூலம் நளீம் ஹாஜியார் அவர்கள் நாட்­டிற்கும் குறிப்­பாக இஸ்­லா­மிய கல்­வித்­து­றைக்கும் மிகச்­சி­றந்த பணி புரிந்­துள்ளார்” என்­ப­தாக பேரா­சி­ரியர் டீ.ஈ ஹெட்­டி­யா­ரச்சி 1984 ஆம் ஆண்டு நிறு­வ­னத்தின் பணி­களைப் பாராட்டி இருந்தார். இலங்கை முன்னாள் கல்வி அமைச்­ச­ராக இருந்த கலா­நிதி நிஸ்­ஸங்க விஜ­ய­ரத்ன 1978 ஆம் ஆண்டில் நளீ­மிய்­யாவைத் தரி­சித்­த­துடன், ”இந்­நி­று­வ­னத்தில் காணப்­படும் கற்­ப­தற்­கான சிறந்த வசதி வாய்ப்­புக்­களும் அதன் பாடத்­திட்­டமும் ஓர் உயர்ந்த கலா நிலை­ய­மொன்றின் தரத்­திற்கு அதனை உயர்த்தி உள்­ளன. நான் இந்தக் கலா­நி­லை­யத்தால் மிகவும் கவ­ரப்­பட்­டுள்ளேன்” என ஜாமிஆ நளீ­மிய்­யாவை சிலா­கித்துப் பேசினார்.
”ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ­டத்தை உரு­வாக்கி நளீம் ஹாஜியார் ஆற்­றிய பணி சரித்­தி­ரத்தில் பொன்­னெ­ழுத்­துக்­களால் பொறிக்­கப்­பட வேண்டும்” என இலங்கை முன்னாள் உயர் கல்வி மற்றும் நெடுஞ்­சாலை அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யல்ல ஜாமிஆ நளீ­மிய்­யாவின் 10 ஆவது பட்­ட­ம­ளிப்பு விழா­வின்­போது நளீம் ஹாஜி­யாரின் பங்­க­ளிப்­பு­களை நினைவு கூர்ந்தார்.

உயர் கல்­வியை ஊக்­கு­வித்து, கல்வி மேம்­பாட்டை ஏற்­ப­டுத்தும் நோக்கில் பொது­வா­கவும், முஸ்லிம் உயர் கல்­வியை இலக்­காகக் கொண்டு குறிப்­பா­கவும் 1981 ஆம் ஆண்டு நளீம் ஹாஜியார் அவர்­களால் கல்வி மறு­ம­லர்ச்சி இயக்கம் தோற்­று­விக்­கப்­பட்­டது. அன்­றைய தலை­வர்­க­ளான சேர் ராஸிக் பரீத், பதி­யுத்தீன் மஹ்மூத், எம்.எச் முஹம்மத் மற்றும் ஏ.சி.எஸ் ஹமீத் போன்­றோரின் பூரண ஒத்­து­ழைப்­புடன் 1981 ஆம் ஆண்டு ஜன­வரி 14ஆம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்ட கல்வி மறு­ம­லர்ச்சி இயக்­கத்தின் ஊடாக நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு துறை சார் பட்­ட­தா­ரிகள் தோற்றம் பெற்­றார்கள். கல்விப் பொதுத் தரா­தர உயர்­தர கற்­கையைக் கற்கும் மாண­வர்­க­ளுக்கு தகு­தியும் அனு­ப­வமும் உள்ள ஆசி­ரி­யர்­களைக் கொண்டு கற்­பிப்­ப­தற்கு ஏற்­பா­டு­களை செய்து கொடுத்து, அத­னூ­டாக பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியை அதி­க­ரிக்கச் செய்ய உத­வி­ய­தோடு, பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெற்று கல்­வியைத் தொடர முடி­யாது பொரு­ளா­தார நெருக்­க­டி­களை எதிர்­கொண்ட மாண­வர்­க­ளுக்கு புலமைப் பரி­சில்­களை வழங்கி நாட்டின் உயர் கல்வி முன்­னேற்­றத்­திற்கு கல்வி மறு­ம­லர்ச்சி இயக்கம் காத்­தி­ர­மான பங்­க­ளிப்­புக்­களை வழங்­கி­யுள்­ளமை ஈண்டு குறிப்­பி­டத்­தக்­கது.

தொழில்­நுட்பத் துறையில் தேர்ச்சி பெற்று, தேசிய அபி­வி­ருத்­தியில் பங்­க­ளிப்பு செய்யும் பிர­ஜை­களை உரு­வாக்கும் நோக்கில் நளீம் ஹாஜியார் இக்ரா தொழில்­நுட்பக் கல்­லூ­ரியைத் தோற்­று­வித்தார். மறு­ம­லர்ச்சி இயக்­கத்தின் கல்விப் பணியின் ஒரு மைல்­கல்­லாக பேரு­வ­ளையில் இத்­தொ­ழில்­நுட்பக் கல்­லூரி நிறு­வப்­பட்­டது. 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதி நாட்டின் அன்­றைய ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாச அவர்­களால் இக்­கல்­லூரி திறந்து வைக்­கப்­பட்­டது.

எனவே ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீடம், கல்வி மறு­ம­லர்ச்சி இயக்கம் மற்றும் இக்ரா தொழில்­நுட்பக் கல்­லூரி என்­ப­வற்றை ஸ்தாபித்து இலங்கை உயர் கல்வி வளர்ச்­சிக்குத் தமது பங்­க­ளிப்­புக்­களை நளீம் ஹாஜியார் வழங்­கி­யுள்­ளமை தேசத்தின் முன்­னேற்­றத்தில் அன்­னாரின் வகி­பாகம் மிகவும் கன­தி­யா­னது என்­பதைப் பறை­சாற்­று­கின்­றது.
நளீம் ஹாஜியார் தேச எல்­லையைக் கடந்தும், குறிப்­பாக இந்­தி­யா­விலும் கல்வி மேம்­பாட்­டுக்­காகப் பொரு­ளா­தார உத­வி­களை வழங்­கி­யுள்ளார். ஓர் இலங்கைப் பிரஜை என்ற ரீதியில் அவர் செய்த பணிகள் பிற நாட்­ட­வர்கள் மத்­தியில் இலங்­கைக்கு நன்­ம­திப்­பையும், கீர்த்­தி­யையும் பெற்றுத் தந்­துள்­ளன.

இலங்கை வர­லாற்றில் முஸ்­லிம்­களின் வர­லாற்றை ஆவ­ணப்­ப­டுத்தும் பணிக்கு முன்­னோ­டி­யாக இருந்து நளீம் ஹாஜியார் செயற்­பட்டார். அத­னூடாக இலங்கை வர­லாற்றின் ஒரு முக்­கிய இடை­வெளியைப் பூர­ணப்­ப­டுத்தி ஆவ­ணப்­ப­டுத்தும் பணிக்கு பெரு­ம­ளவு பொரு­ளா­தார உத­வி­களை வழங்­கினார். இலங்கை முஸ்­லிம்­களின் பூர்­வீக வர­லாற்றை முறை­யான ஆய்வுக் கூடாக ஆவ­ணப்­ப­டுத்தும் காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை இலங்கை வர­லாற்றுத் துறையில் பாண்­டித்­தியம் பெற்ற புத்­தி­ஜீ­விகள், துறைசார் நிபு­ணர்­களின் ஒத்­து­ழைப்­புடன் மேற்­கொள்­வ­தற்கு கலா­நிதி சுக்ரி போன்­றோரின் முழு ஒத்­து­ழைப்­புடன் முன்­னின்று உழைத்து அவர் வெற்றி கண்டார்.

1984 ஆம் ஆண்­டு­களில் ஜாமிஆ நளீ­மிய்யா மாநாட்டு அரங்கில் தொட­ராக நடை­பெற்ற மூன்று நாள் கருத்­த­ரங்கில் முன்­வைக்­கப்­பட்ட பல்­வேறு ஆய்­வு­க­ளையும் கருத்­துக்­க­ளையும் கலா­நிதி சுக்ரி “இலங்கை முஸ்­லிம்கள் – பூர்­வீகப் பாரம்­ப­ரி­யத்­திற்­கான பாதைகள்” (Muslims of Sri Lanka -Avenues to Antiquity) என்ற தலைப்பில் தொகுத்தார். இலங்கை முஸ்லிம் வர­லாற்றில் ஒரு பெரும் இடை­வெளியை நிரப்­பிய காத்­தி­ர­மான வர­லாற்றுப் பங்­க­ளிப்பு என்ற வகையில் 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் திகதி கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் இந்த நூல் வெளியீட்டு விழா இடம்­பெற்­றது. வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இந்­நி­கழ்­வுக்கு அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே. ஆர் ஜெய­வர்­தன பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்நூல் பற்­றிய ஆய்­வு­ரையை இலங்கை வர­லாற்றுத் துறை அறி­ஞர்­களில் ஒரு­வ­ரான கலா­நிதி கொல்வின் ஆர் டி சில்வா நிகழ்த்­தி­னார். நூலின் முதல் பிரதி நளீம் ஹாஜியார் அவர்­களால் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

சமூ­க­நல மேம்­பாட்­டுக்­கான பங்­க­ளிப்பு
நளீம் ஹாஜியார் தன்­னிடம் உதவி கேட்டு வரும் அனை­வ­ருக்கும் இன, மத வேறு­பா­டுகள் அனைத்­தையும் கடந்து மனித நேயத்­துடன் உதவி செய்து மகிழ்ந்தார். நாடு பூரா­கவும் வாழ்ந்த பல ஏழை எளி­ய­வர்கள் நாளாந்தம் நளீம் ஹாஜி­யாரின் வீடு தேடி வந்து உத­வி­களைப் பெற்றுச் செல்­வது வழ­மை­யாக இருந்­தது. ஏழை மக்­களின் வாழ்வை வளப்­ப­டுத்தும் நோக்கில் அவர்­க­ளுக்கு வாழ்க்கை வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்­காக தனது செல்­வத்தின் பெரும் பகு­தியை நளீம் ஹாஜியார் நன்­கொடை செய்­த­மைக்கு மக்கள் சான்று பகிர்­கின்­றனர்.

இது போன்று அவர் தேசிய மட்­டத்தில் செய்த பொது நலப் பணி­களில் இலங்கை தேசத்தின் வர­லாற்றில் பதிவு செய்­யப்­பட வேண்­டிய ஒரு பணி­யாக, “சுச­ரித்த” கட்­டட அன்­ப­ளிப்பைக் குறிப்­பி­டலாம். அவர் முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாச உள்ளூராட்சி அமைச்­ச­ராக இருந்த காலத்தில் அதன் பிர­தான கட்­ட­ட­மான “சுச­ரித்த” கட்­ட­டத்தைப் புதி­தாக நிர்­மா­ணித்துக் கொடுத்தார்.

தேசத்தில் இன, மத நல்­லு­றவைப் பேணு­வ­திலும் அதனைப் போஷிப்­ப­திலும் நளீம் ஹாஜி­யாரின் பங்­க­ளிப்­புகள் காத்­தி­ர­மா­னவை. தனது மாணிக்க வியா­பா­ரத்தில் பெரும்­பா­லான கொடுக்கல் வாங்­கல்­களை முஸ்­லி­மல்­லாத சகோ­தர மதத்­த­வர்­க­ளு­ட­னேயே அவர் மேற்­கொண்டார். அனைத்து இன, மதத்­த­வர்­க­ளுக்கும், அவர்­க­ளது உணர்­வு­க­ளுக்கும் மதிப்­ப­ளித்து, நாட்டில் சமா­தான சக­வாழ்வை நிலைக்கச் செய்­வதில் நளீம் ஹாஜியார் கூடுதல் கரி­சனை காட்­டினார். தனது பிர­தே­சத்­திலும் தேசிய மட்­டத்­திலும் பல மதஸ்­த­லங்­க­ளுக்கு பொரு­ளா­தார உத­வி­களை வழங்­கினார்.

விளை­யாட்டுத் துறைக்­கான பங்­க­ளிப்பு
நாட்டின் வர்த்­தகத் துறை, கல்வித் துறை, சமூக நலன்கள் என பல பகு­தி­க­ளுக்கு பங்­க­ளிப்­பு­களை வழங்­கிய நளீம் ஹாஜியார் விளை­யாட்டுத் துறை வளர்ச்­சிக்கும் தனது செல்­வத்தின் மூலம் உத­வி­களை வழங்­கினார். நாட­ளா­விய ரீதியில் பாட­சா­லை­க­ளுக்கு விளை­யாட்டு மைதா­னங்­களை நிர்­மா­ணித்துக் கொடுத்­த­தோடு, அவ­சி­ய­மான விளை­யாட்டு உப­க­ர­ணங்­களை வழங்கி வைத்தார். பேரு­வ­ளையில் “நளீம் ஹாஜியார் விளை­யாட்டு அரங்கு” என்ற பெயரில் பொது விளை­யாட்­ட­ரங்­க­மொன்றை அமைத்தார். இம்­மை­தா­னத்தை 1970 ஆம் ஆண்டு அப்­போ­தைய பிர­த­ம­ராக இருந்த டட்லி சேனா­நா­யக்க திறந்து வைத்­தார்கள்.

தேசிய மட்­டத்­தி­லான விளை­யாட்­டுத்­துறை வளர்ச்­சிக்குக் காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை வழங்­கிய அவர், இலங்­கையில் புகழ்­பெற்ற விளை­யாட்­ட­ரங்­க­மான “சுக­த­தாச” உள்­ளக விளை­யாட்­ட­ரங்கின் நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்கு ஐந்து லட்சம் ரூபா­வுக்கும் அதி­க­மான பணத்தை வழங்­கினார். அதே­போன்று எஸ். எஸ். ஸி விளை­யாட்­ட­ரங்கின் அபி­வி­ருத்­திக்­காக பண உத­விகள் செய்­த­தோடு, “பைரஹா பெவி­லியன்” என்ற பெயரில் அங்கு பார்­வை­யாளர் கூட­மொன்றை கட்டிக் கொடுத்தார்.

இவ்­வாறு நளீம் ஹாஜியார் தனது தேசத்­திற்­காகச் செய்த பொதுப் பணி­களின் வீச்­செல்லை மிகவும் விசா­ல­மா­னது. அதன் விளை­வாக தேசிய மட்­டத்தில் பல கௌரவப் பத­வி­களும் பட்­டங்­களும் அவரைத் தேடி வந்­தன. புக­ழையும் கௌர­வத்­தையும் விரும்­பாத அவ­ரது இயல்பால் அவற்றை கண்­ணி­ய­மான முறையில் புறக்­க­ணித்தார். முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர் ஜய­வர்­தன நளீம் ஹாஜியார் மீது வைத்­தி­ருந்த நல்­லெண்­ணத்தின் கார­ண­மாக “பாரிய கொழும்பு பொரு­ளா­தாரக் கமிஷன்“ அங்­கத்­த­வர்­களில் ஒரு­வ­ராக நளீம் ஹாஜி­யாரை நிய­மிக்க முடிவு செய்து அவ­ரிடம் அதனைத் தெரி­வித்தபோது, தனக்கு அதை ஏற்­றுக்­கொள்­வதில் உடன்­பா­டில்லை எனக் கூறி நல்ல முறையில் அதனைத் தவிர்ந்து கொண்டார்.

இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தாச இலங்­கையின் தேசிய வீரர்கள் தின­மொன்றில் அதி உயர் விரு­தினை வழங்கி நளீம் ஹாஜி­யாரை கௌர­வப்­ப­டுத்த அவ­ரிடம் அனு­மதி கேட்­ட­தற்கு, பணி­வாக அதனை மறுத்துவிட்டார்.
இவ்வாறு பணிவும் பொதுநலனும் ஒன்று சேரப்பெற்றவராக நளீம் ஹாஜியார் வாழ்ந்தார். தான் சம்பாதித்த செல்வத்தால் காத்திரமான பணிகளை மேற்கொண்டு தேசத்தின் நலன் ஓங்குவதற்கு உழைத்த ஓர் உன்னத ஆளுமையான நளீம் ஹாஜியார் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் திகதி தனது 72ஆவது அகவையில் இந்த உலக வாழ்விற்கு நிரந்தரமாகப் பிரியாவிடை கொடுத்தார். அந்த உன்னத ஆளுமை எமது தேசத்தின் நற்பிரஜைகளுக்கான மிகச் சிறந்த முன்மாதிரி என்பதில் துளியும் சந்தேகமில்லை. அத்தகையதொரு முன்மாதிரி நற்பிரஜையைப் பெற்றதற்காக நாடும் சமூகமும் பெருமிதமடைகின்றன.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.