மஜ்மா நகரின் மரண ஓலம் இஸ்லாமோபோபியாவின் இனியராகம்

0 360

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

கிழக்­கி­லங்­கையின் ஓட்­ட­மா­வடி சுமார் 28,000 முஸ்­லிம்கள் வாழும் ஒரு சிற்றூர். அங்கே மஜ்மா நகர் என்ற ஒரு பகுதி பரம்­ப­ரை­யாக மந்­தை­களின் மேய்ச்சல் நில­மா­கவும் அவை­களைக் கட்­டிப்­போடும் காலை­யா­கவும் இருந்­து­வந்­துள்­ளது. அதுதான் இன்று கொவிட் மையத்­து­களின் ஒரே இறுதிப் புக­லி­ட­மாக மாறி­யுள்­ளது. இது­வரை சுமார் 2,300 உடல்கள் அங்கே புதைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றுள் 2,150 முஸ்­லிம்­க­ளது என அறி­யக்­கி­டக்­கி­றது. இன­பே­த­மின்றி சம­ரசம் உலாவும் ஓர் இட­மாக மாறி­யுள்­ளது மஜ்மா நகர். ஓட்­ட­மா­வடி நக­ர­சபை உறுப்­பி­னர்­களோ இனியும் அங்கே அடக்கம் செய்தால் வாழும் மக்­க­ளுக்கு இட­மேது என ஒப்­பாரி வைக்­கின்­றனர். அதில் உண்­மை­யுண்டு. எனினும் அவர்­களின் மரண ஓலம் இன­வாத அர­சி­யலின் இத­ய­ராகம் என்­பதை உணர்­வார்­களா? அதைத்தான் இக்­கட்­டுரை விளக்­கு­கி­றது.

கொவிட் முதலாம் அலையும் அர­சியற் சூழலும்
இலங்­கையில் கொவிட் நோயால் முதன் முத­லாகப் பீடிக்­கப்­பட்­டவர் ஓர் இலங்­கை­ய­ரல்ல. அவர் ஒரு சீனப் பெண்­மணி. அது 2020 ஜன­வரி 27இல் நடை­பெற்­றது. அவரைத் தொடர்ந்து வெளிநா­டு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு வந்த பலர் மூல­மாக அந்நோய் விரை­வாகப் பர­வத்­தொ­டங்­கவே அத்­தொற்­றா­ளர்­களைத் தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக அவ­சர அவ­ச­ர­மாக அரசு பல முயற்­சி­களை மேற்­கொண்டு அதனால் உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் பாராட்­டு­க­ளையும் பெற்­றது. ஆனால் கொவிட் பர­வத்­தொ­டங்­கு­வ­தற்கு இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­னர்தான் கோத்­தா­பய ராஜ­பக்ச அவர்கள் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டார். அதன் பின்னர் 2020 ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடை­பெற்று அவரின் தமயன் மகிந்த ராஜ­பக்ச ஒருங்கே பிர­த­மரும் நிதி அமைச்­ச­ரு­மானார். நடை­பெற்ற இரண்டு தேர்தல்­க­ளிலும் அத்­த­லை­வர்­க­ளாலும் அவர்­களின் ஆத­ர­வா­ளர்­க­ளாலும் முன்­னெ­டுக்­கப்­பட்ட பிர­சா­ரத்தின் தலை­யம்­ச­மாக விளங்­கி­யது சிங்­கள பௌத்த இன­வா­த­மே­யன்றி வேறில்லை. சிறு­பான்மை இனங்­களால், அதிலும் ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குப் பின்னர் குறிப்­பாக முஸ்­லிம்­களால் நாட்டின் பாது­காப்­புக்கு ஆபத்து உண்டு என்ற தொனிப்­ப­டவே அவர்­களின் தேர்தல் பிர­சாரம் முடுக்­கி­வி­டப்­பட்­டது. கடும்­போக்­கு­டைய பௌத்த பிக்­கு­களும் பௌத்த சிங்­கள இஸ்­லா­மோ­போ­பி­யர்­களும் தலை­மை­தாங்கி இப்­பி­ர­சா­ரத்தை மேற்­கொண்­டனர். இதனால் முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­களும் அட்­டூ­ழி­யங்­களும் அனந்தம். அவற்றைக் கண்டும் காணா­த­துபோல் இருந்­தனர் இவ்­விரு தலை­வர்­களும். இதனால் இரண்டு தேர்தல்­க­ளிலும் மிகப்­பெ­ரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் ராஜ­பக்­சாக்­க­ளுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை. அதனால் அவர்­க­ளுக்கு ஏற்­பட்ட மனப்புண் கொவிட் பர­வும்­போதும் அவர்­களை வருத்­தி­யது என்­பதை மறுக்க முடி­யாது. இதனைப் பின்­பு­ல­மாகக் கொண்­டுதான் கொவிட் நோயினால் மர­ணித்த முஸ்­லிம்­களின் உடல்­களை அடக்கம் செய்­யாமல் தகனம் செய்­ய­வேண்டும் என்ற ஜனா­தி­ப­தியின் அறி­வித்­தலை அணு­க­வேண்டும்.

வெளிநா­டு­க­ளி­லி­ருந்து வந்த விமானப் பய­ணி­களால் இத்­தொற்று பர­வி­யது என்ற செய்தி வெளியா­னதும், சிங்­கள பௌத்த இஸ்­லா­மோ­போ­பி­யர்கள் முதன் முதலில் பழி சுமத்­தி­யது இந்­தி­யா­வி­லி­ருந்து வந்த ஒரு சில தப்லீக் ஜமா­அத்­தி­னர்மேல் என்­பதை இங்கு நினைவு கூரல் வேண்டும். அதே சமயம் சில பௌத்த குரு­மாரும் அப்­போது இந்­தியா சென்று திரும்­பி­யது அவர்­களின் கண்­க­ளுக்குப் புலப்­ப­டா­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை. சிங்­கள பௌத்த இஸ்­லா­மோ­போ­பி­யர்­களின் ஆத­ரவில் வென்­ற­வர்­தானே ஜனா­தி­பதி. எனவே முஸ்­லிம்­களின் உடல்­களைத் தகனம் செய்ய வேண்­டு­மென்ற அவரின் முடிவு யாரைத் திருப்­ப­டுத்­து­வ­தற்­காக எடுக்­கப்­பட்­டது என்­பதை வாச­கர்­களே முடிவு செய்­ய­வேண்டும். இந்த முடி­வினால் முஸ்­லிம்­களின் மனங்கள் எவ்­வாறு புண்­படும் என்­பது ஜனா­தி­ப­திக்குத் தெரி­யாதா? தெரிந்­தி­ருந்தம் அவரின் முடிவு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக எடுக்­கப்­பட்­ட­தல்ல, விஞ்­ஞான உண்­மை­யொன்றின் அடிப்­ப­டை­யி­லேதான் எடுக்­கப்­பட்­ட­தென அவர் விளக்கம் கொடுத்தார். அந்த உண்­மைதான் என்ன?

மண்­ண­றி­வி­யல்­வா­தியின் நுண்­ண­றிவு
கொவிட் தொற்­றினால் மர­ணித்­த­வர்­களின் உடல்­களை மண்­ணுக்குள் புதைப்­ப­தன்­மூலம் அந்த நோயின் கிரு­மிகள் மண்­ண­டி­யி­லுள்ள நீரி­னூ­டாக வெளிவந்து வாழும் மக்­க­ளுக்குத் தொற்றும் என்ற ஒரு விசித்­தி­ர­மான கண்­டு­பி­டிப்பை ஸ்ரீ ஜெய­வர்த்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் மண்­ண­றி­வியல் போரா­சி­ரியை ஒருவர் வெளியிட்­டி­ருந்தார். இவ­ருக்கு தொற்­றுநோய் பற்­றிய நிபு­ணத்­துவம் சற்­றேனும் கிடை­யாது என்­பதை முதலில் கவ­னிக்க வேண்டும். அத்­துடன் இவ­ரது விசித்­தி­ர­மான கண்­டு­பி­டிப்பை உலக சுகா­தாரத் தாப­னமோ வேறு உல­க­னைத்தும் உள்ள எந்த ஒரு தொற்­றுநோய் நிபு­ணரோ ஆத­ரிக்­க­வில்லை என்­பதும் உண்மை. ஆனால் மாயா­ஜா­லங்­க­ளையும் மந்­தி­ரங்­க­ளையும் விஞ்­ஞான உண்­மைகள் என்று நம்பும் இலங்­கை­யிலே இப்­பே­ரா­சி­ரியை அர­சாங்­கத்தின் தொற்­றுநோய் பற்­றிய ஓர் ஆலோ­ச­க­ரானார். இவ­ரு­டைய நுண்­ண­றிவை ஆதா­ர­மாகக் கொண்­டுதான் ஜனா­தி­பதி அந்த அறி­வித்­தலை விடுத்தார். “பேய் அர­சாட்சி செய்தால் பிணந்­தின்னும் சாத்­தி­ரங்கள்” (பாரதி).

போராட்டம்
புண்­பட்ட முஸ்லிம் சமூகம் போராடத் தொடங்­கி­யது. அப்­போ­ராட்டம் சர்­வ­தே­சத்தின் கவ­னத்­தையும் ஈர்க்கத் தவ­ற­வில்லை. மனித உரிமை அமைப்­பு­களும் முஸ்லிம் சர்­வ­தேச இயக்­கங்­களும் முஸ்லிம் நாடு­களும் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­த­லா­யின. உள்­நாட்­டி­லும்­கூட கிறிஸ்­தவப் பாதி­ரி­மார்­களும் கல்­வி­மான்­களும் மனி­தா­பி­மானம் கொண்ட பௌத்த துற­வி­களும் ஜனா­தி­ப­தியின் முடிவை மாற்­று­மாறு கோரினர். (இத­னி­டையே ஜனா­தி­ப­தியின் முடிவைச் சரி­கண்டு உடல்­களை அடக்க முடி­யா­விட்­டாலும் எரிந்த சாம்­பலை அடக்­கினால் போதும் என்ற கேவ­ல­மான ஒரு முடிவை அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உல­மாவின் முப்­தியே கூறியி­ருந்­த­தையும் முஸ்­லிம்கள் கவ­னத்தில் கொள்­ள­ வேண்டும். அதி­கா­ரத்தின் முன்னே உண்­மையை உரைக்க முடி­யா­த­வர்கள் முஸ்­லிம்­களின் தலை­வர்­க­ளா­னது அச்­ச­மூ­கத்தின் துர­திஷ்­டமே). ஆனால் இஸ்­லா­மோ­போ­பி­யர்­களின் பிடிக்குள் சிக்­குண்ட ஜனா­தி­ப­திக்கு அந்த முடிவை மாற்றும் தைரியம் இருக்­க­வில்லை. அத்­துடன் ஒரு கடும்­போக்­கு­டைய பௌத்த துறவி முஸ்லிம் உடல்­களைப் புதைப்­பது அர­சையே புதைப்­ப­தற்குச் சமன் என்று பகி­ரங்­க­மா­கவே அறி­வித்­தது அர­சாங்­கத்­தையே ஆட்­டங்­காணச் செய்­தது. தக­னங்கள் தொடர்ந்­தன. இறு­தி­யாக ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபையின் செய­லா­ளரின் கவ­னத்தை இப்­பி­ரச்­சினை ஈர்த்­தது. கடந்த வருடம் செப்­டம்பர் மாதம் ஜெனி­வாவில் நடை­பெற்ற மகா­நாட்­டிலும் இப்­பி­ரச்­சினை ஒரு பேச்சு பொரு­ளாகி இலங்­கைக்­கெ­தி­ரான கண்­ட­னங்­களை எழுப்­பின. அங்கே மூக்­கு­டை­பட்ட பின்­னர்தான் ஜனா­தி­ப­திக்கு ஞானம் பிறந்­ததோ என்­னவோ தக­னத்­துக்குப் பதி­லாக அவர் ஒரு மாற்று வழியை நாட­லானார்.
இத­னி­டையே கட்­டாய தகனம் கைவி­டப்­பட்­ட­மைக்கு தங்­களின் எதிர்ப்­புத்தான் காரணம் என்ற தொனியில் நாடா­ளு­மன்ற முஸ்லிம் பச்­சோந்தி அங்­கத்­த­வர்கள் கூத்­தாடத் தொடங்­கினர். ஆனால் அந்த வெற்­றிக்குக் கார­ணமாய் அமைந்­தவர் ஐ. நா. மனித உரிமை தாப­னத்தின் ஸ்தானி­க­ரான பெண்­மணி மிசேல் பசெலெற்.
ஜனா­தி­ப­திக்கோ இவ்­வி­ட­யத்தில் ஒரு சங்­கடம். சிங்­கள பௌத்த இன­வா­தத்­துக்குத் தலை சாயா­த­வ­ராக அவர் இருந்­தி­ருந்தால் அம்­மண்­ண­றி­வி­யல்­வா­தியின் நுண்­ண­றிவைப் பகி­ரங்­க­மா­கவே உதறித் தள்­ளி­விட்டு கொவிட் மரணச் சட­லங்­களை நாட்­டி­லுள்ள எந்த ஒரு மைய­வா­டி­யிலும் அடக்­க­லா­மென அவர் அறி­வித்­தி­ருக்­கலாம். அதனால் முஸ்­லிம்­களும் தகனம் செய்­வதை விரும்­பாத பிற மதத்­த­வர்­களும் ஆறுதல் அடைந்­தி­ருப்பர். ஆனால் அவரோ இன­வா­தத்தின் சிறைக்குள் அடை­பட்­டி­ருப்­பவர் ஆதலால் அந்தப் போலி விஞ்­ஞா­னத்தைக் கைவி­ட­மு­டி­யாமல் அதனைச் சரி­காணும் நோக்­கிலும் அதே­ச­மயம் முஸ்­லிம்­க­ளுக்குத் தொடர்ந்தும் இம்­சை­களை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் எங்­கே­யா­வது வரண்ட மண்­ணுள்ள சவக்­கு­ழிகள் உண்டா எனத் தேடு­மாறு தனது ஆலோ­ச­கர்­களை வேண்­டினார். இந்த மாற்­றத்தால் ஏற்­பட்ட அவ­மா­னத்­தி­னாலோ தெரி­யாது அந்த நுண்­ண­றிவுப் பேரா­சி­ரி­யையும் தனது ஆலோ­சகர் பத­வியை ராஜி­னாமாச் செய்தார்.

புதை­குழி தேடல்
முதலில், ஜனா­தி­ப­தியின் நிபுணர் குழு புதை­கு­ழி­பற்றி மாலை­தீவு அர­சுடன் பேச்­சு­வார்த்தை நடாத்­த­வி­ருப்­ப­தாக வதந்­திகள் பரவத் தொடங்­கின. அது உண்­மையில் ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­னைதான் என்றும் செய்­திகள் அப்­போது கசிந்­தன. இருப்­பினும் அந்த முடிவு செய­லாக்­கப்­பட்டால் அது எதிர்­கா­லத்தில் எவ்­வா­றான ராஜ­தந்­திரப் பிரச்­சி­னை­களை உரு­வாக்கும் எனப்­ப­யந்து புத்­தி­சா­து­ரி­ய­மாக அந்த யோசனை கைவி­டப்­பட்டது. அதன் பின்னர் மன்­னார் வளை­கு­டா­வி­லுள்ள இர­ணை­தீவு பொருத்­த­மெனக் காணப்­பட்­டது. அதனைக் கேட்­டதும் இர­ணை­தீவுத் தமி­ழர்கள் கொதித்­தெ­ழுந்­தனர். ஏற்­க­னவே தமி­ழரின் பிரச்­சி­னை­களைப் பற்றிக் கரி­சனை கொண்­டுள்ள சர்­வ­தேச நிறு­வ­னங்கள் இத­னையும் ஒரு கார­ணி­யாகக் கொண்டு இலங்கை அர­சின்­மே­லுள்ள அவர்­களின் எதிர்ப்பை வலுப்­ப­டுத்­தலாம் எனப்­ப­யந்து அதுவும் கைவி­டப்­பட்­டது. அதன் பின்­னரே கிழக்­கி­லங்­கையின் ஓட்­ட­மா­வ­டியின் சூடு­பத்­தி­ன­சேனை (மஜ்மா நகர்) அந்­நி­பு­ணர்­களின் வலைக்குள் வீழ்ந்­தது. ஜனா­ஸாக்­களை மத ஆசா­ரப்­படி அடக்கும் சலு­கையைப் பெற்ற முஸ்­லிம்கள் அந்த முடிவால் ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளைப்­பற்றிச் சிந்­திக்­கவே இல்லை. உத­ார­ணத்­திற்கு, காலி நகரில் ஒரு முஸ்லிம் கொவிட் தொற்­றினால் மர­ணித்தால் அவரின் உடலை ஓட்­ட­மா­வ­டிக்குக் கொண்டு செல்­வ­தி­லுள்ள சிர­மங்­களை ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள். மர­ணிப்­போரின் சொந்த ஊருக்கும் ஓட்­ட­மா­வ­டிக்கும் இடை­யே­யுள்ள தூரமும், ஜனா­ஸாவைக் கொண்டு செல்­வ­தி­லுள்ள செலவும் சிர­மங்­களும் ஒரு புற­மி­ருக்க, ஏற்­க­னவே நிலப்­ப­சியால் வாடும் கிழக்­கி­லங்கை முஸ்­லிம்கள் இருக்­கின்ற சொற்ப இடத்­தையும் மனிதப் புதை­கு­ழி­யாக்­கினால் வாழும் மனி­தர்க்கு இடம் எங்கே என்ற பிரச்­சினை இதனால் வலு­வ­டை­யாதா? இலங்­கையின் பொரு­ளா­தா­ரமும் அரசின் வர­ுமா­னமும் வங்­கு­றோத்தை நோக்கி விரையும் இவ்­வே­ளையில் இந்த மரணச் செலவு அர­சுக்குத் தேவை­தானா? அருகே உள்ள ஒரு மைய­வா­டியில் குடும்­பத்­தி­னரின் செலவில் தொற்று நோய் கட்­டுப்­பா­டு­க­ளுக்­க­மைய அடக்கம் செய்­வதைப் புறந்­தள்­ளி­விட்டு அர­சாங்கம் ஏன் இந்த மேல­திகச் செலவை மேற்­கொள்­கி­றது? சுருக்­க­மாகக் கூறினால், இந்த முடிவு உண்­மை­யி­லேயே முஸ்­லிம்­க­ளுக்கு அர­சினால் வழங்­கப்­பட்ட சலு­கையா அல்­லது தண்­ட­னையா? ஓட்­ட­மா­வடி நகர சபை­யினர் இப்­போது ஒப்­பா­ரி­யி­டு­வது எதனைக் காட்­டு­கி­றதோ?

ஓட்­ட­மா­வ­டியே தொடர்ந்தும் கொவிட் மர­ண­வா­ளி­களின் மகா மைய­வா­டி­யாக இயங்­கு­வ­தாயின் இன்னும் பல ஏக்கர் நிலங்­களை அவ்வூர் பட்­டின சபை அர­சுக்குத் தாரை­வார்க்க வேண்டும். இல்­லை­யாயின் மாற்று இடங்­களைத் தேட­வேண்டும். ஏற்­க­னவே இறக்­காமம், புத்­தளம், மன்­னார் ஆகிய முஸ்லிம் பகு­தி­களின் பெயர்கள் செய்தி வட்­டா­ரங்­களில் உல­வு­கின்­றன. விரைவில் கிண்­ணி­யாவும் அடக்­கஸ்­த­ல­மாக மாறும் என ஊர்­ஜி­த­மான செய்­திகள் வெளிவ­ரு­கின்­றன. ஏன் முஸ்­லிம்கள் வாழும் பகு­திகள் மட்­டுந்­தானா கொவிட் புதை­கு­ழி­க­ளாக வேண்டும்? ஏனைய மத்­தி­னரும் மஜ்மா நகரில் அடக்­கப்­ப­ட­வில்­லையா? அவ்­வா­றாயின் பெரும்­பான்மை இனத்­தவர் வாழும் பகு­திகள் இத்­தே­வைக்குப் பொருத்­த­மா­காதா? உண்­மையை நோக்­கினால் இது முஸ்­லிம்­க­ளுக்குத் திட்­ட­மிட்டு இழைக்­கப்­படும் ஓர் அநீதி. ஒரு முஸ்லிம் நீதி அமைச்­ச­ருக்­கும்­கூ­டவா இந்த அநீதி புலப்படவில்லை?

இஸ்லாமோபோபியாவின் இன்பராகம்
இஸ்­லா­மோ­போ­பியா, அதா­வது இஸ்­லாத்­தைப்­பற்­றியும் முஸ்­லிம்­ளைப்­பற்­றியும் ஏற்­படும் பயமும் வெறுப்பும் கலந்த ஓர் உணர்வு, இலங்­கையின் இரு­பத்­தோராம் நூற்­றாண்டின் துஷ்டக் குழந்தை. அது பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டி வளர்க்­கப்­ப­டு­கி­றது. அப்­படி ஒரு குழந்தை முன்பும் பத்­தொன்­பதாம் நூற்­றாண்டின் இறு­திப்­ப­கு­தியில் இன்று போற்­றப்­படும் தேசிய வீர­னான அன­கா­ரிக தர்­ம­பா­லாவின் மடி­யிலே பிறந்து பௌத்த விழிப்­பு­ணர்வு என்ற பெய­ரோடு வாழ்ந்து கால­வ­ரையில் எதிர்­பா­ராத ஒரு நோயினால் (சிங்­க­ளவர்- தமிழர் இன­வா­தத்­தினால்) அது மர­ணித்­து­விட்­டது. இப்­போது பிறந்­தி­ருப்­பதை அர­சாங்­கமே பொறுப்­பேற்று வளர்க்­கி­றது. இதன் வடி­வங்­கள்தான் 2014ஆம் ஆண்­டி­லி­ருந்து, அதா­வது அளுத்­து­கமத்தில் நடை­பெற்ற கல­வ­ரத்­தி­லி­ருந்து, ஒவ்­வொன்றாய் வெளிப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதன் இன்­றைய வடி­வமே மஜ்மா நகர் என்னும் கொவிட் மையவாடி. மஜ்மா நகர் துயரத்துக்குப் பரிகாரம் இன்னுமொரு முஸ்லிம் ஊரில் திறக்கப்படும் மையவாடியல்ல. மாறாக, நாடெங்கிலும் உள்ள மயானபூமிகளிலும் தொற்றினால் மரணிப்போரை அடக்குவதற்கு உத்தரவு வழங்குவதே. ஓட்டமாவடியின் மரண ஓலம் இனவாத அரசியலின், அதிலும் குறிப்பாக இஸ்லாமோபோபியாவின் இனியராகம். இதை முஸ்லிம் தலைவர்கள் உணர்வார்களா?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.