தொல்பொருளின் பெயரால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட காணி அபகரிப்பு

0 556

சபீர் மொஹமட்

காணிகள் என்­பது அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளு­டைய வாழ்க்­கையின் ஓர் அங்­க­மாகும். அவர்­க­ளு­டைய நிலத்தின் உரிமை அவர்­க­ளு­டைய அடை­யா­ள­மாகும். அடிப்­படை மனித உரி­மை­யாக நோக்­கப்­பட வேண்­டிய காணி­களை மாறி­மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற ஆட்­சி­யா­ளர்­களும் அரச அதி­கா­ரி­களும் மக்­க­ளுக்கு வழங்­குதல், மக்­க­ளிடம் இருந்து பெற்றுக் கொள்­ளுதல் அல்­லது மீள்­கு­டி­ய­மர்த்­துதல் போன்ற செயற்­பா­டு­களின் போது மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­காது வெறு­மனே இலாபம் ஈட்­டக்­கூ­டிய ஒரு பண்­ட­மா­கவே பார்க்­கின்­றனர்.

இலங்­கையின் எல்லா மாவட்­டங்­க­ளிலும் வாழ்­கின்ற மக்கள் காணி சம்­பந்­தப்­பட்ட ஏதே­னு­மொரு பிரச்­சி­னைக்கு முகம் கொடுத்து வரு­கின்­றார்கள். இதற்­கான பிர­தான காரணம், காணிகள் என்­பது மக்­களின் வாழ்க்­கை­யுடன், உணர்­வு­க­ளுடன் எந்த அளவு பிணைந்­துள்­ளது என்­ப­தனை மறந்து ஆட்­சி­யா­ளர்கள் எடுக்­கின்ற தவ­றான தீர்­மா­னங்கள் மற்றும் முடி­வு­களே ஆகும்.

யுத்­தத்­திற்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் இரா­ணு­வத்­தி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற சுற்­றுலா விடு­திகள் மற்றும் பண்­ணைகள் போன்ற வர்த்­தகம் சார்ந்த நட­வ­டிக்­கைகள் மக்­க­ளு­டைய காணி பற்­றிய பிரச்­சி­னைகள் மென்­மேலும் அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு மறை­மு­க­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற இரா­ணுவ மய­மாக்கல் கார­ண­மாக பல வழி­க­ளிலும் மக்கள் தமது காணி உரி­மைகளை இழக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. காணி ஆணைக்­கு­ழுவின் 2019/2020 அறிக்­கையின் படி தனி­ந­பர்­க­ளுக்குச் சொந்­த­மான பிர­தே­சங்­களை ஆக்­கி­ர­மித்­துள்­ள­தற்கு அப்பால் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பா­னது, மீன்­பிடி, விலங்கு வேளாண்மை போன்ற அம்­மக்­களின் அடிப்­படை பொரு­ளா­தா­ரத்­தையும் அன்­றாட வாழ்­வா­தா­ரத்­தையும் பாதிப்­ப­டையச் செய்­துள்­ளது. குறிப்­பாக தமிழ் பேசும் மக்­க­ளுக்கு எதி­ரான தன்­னிச்­சை­யாக எடுக்­கப்­ப­டு­கின்ற முடி­வுகள் கார­ண­மாக மக்கள் மிகுந்த அச்­சத்­துக்கு மத்­தி­யி­லேயே தமது காணி­க­ளிலே வாழ்ந்து வரு­கின்­றனர். இரா­ணுவ அதி­கா­ரி­களின் கரங்­க­ளினால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள பாகு­பாட்­டுடன் கூடிய பகை­யு­ணர்­வு­மிகு நட­வ­டிக்­கை­களும் தன்­னிச்­சை­யான விதி­களின் திணிப்பும் அடக்­கு­முறை மிக்­க­வை­யா­கவே அம்­மக்­க­ளுக்கு உள்­ள­தென மக்கள் காணி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை கூறு­கின்­றது. மேலும் முல்­லைத்­தீவைச் சேர்ந்த பெயர் குறிப்­பிட விரும்­பாத பெண்­ணொ­ருவர் காணி ஆணைக்­கு­ழுவின் கள விஜ­யத்­தின்­போது இவ்­வாறு கூறி­யுள்ளார்.

“நாங்கள் பாது­காப்பை உணர எமக்கு இரா­ணுவம் தேவை­யில்லை. தேசிய பாது­காப்பு என்­பது இரா­ணுவம் பற்­றி­யது அல்ல. அது எங்­களைப் பற்­றி­யது. இல­வ­ச­மாக கல்­வி­யினைப் பெறு­வது. எங்­க­ளது காணி­களை நாங்­களே வைத்­தி­ருப்­பது அதிலே பெண்கள் வாழ்ந்து அவர்கள் நினைத்த நேரம் சுதந்­தி­ர­மாக நட­மா­டு­வதே அது­வாகும். அது தான் தேசிய பாது­காப்பு என்­பதைக் குறிக்­கின்­றது”

2020 ஜூன் மாதம் இரண்டாம் திகதி 2178/17 ஆம் இலக்க அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­விப்பு ஒன்றின் மூலம் கிழக்கு மாகா­ணத்தின் புரா­தன தொல்­பொருள் பாரம்­ப­ரி­யங்­களை நிர்­வ­கிப்­ப­தற்­காக “ஜனா­தி­பதி செய­ல­ணியை” ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ நிறு­வு­கின்றார்.

இந்த செய­ல­ணியின் தலை­வ­ராக பாது­காப்பு செய­லாளர் கமல் குண­ரத்ன மற்றும் செய­லா­ள­ராக பாது­காப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செய­லாளர் டி.எம்.எஸ். திசா­நா­யக்க ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள். மேலும் இதிலே ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக தொல்­பொ­ரு­ளியல் சக்­க­ர­வர்த்தி எல்­லா­வல மேதா­னந்த தேரர், பனா­முரே தில­க­வங்ஸ நாயக தேரர், தொல்­பொருள் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் கலா­நிதி செனரத் பண்­டார திஸா­நா­யக, காணி ஆணை­யாளர் நாயகம் சந்­திரா ஹேரத், நில அள­வை­யாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சீ. பெரேரா, களணி பல்­க­லை­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் பேரா­சி­ரியர் ராஜ்­குமார் சோம­தேவ, பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தின் பேரா­சி­ரியர் கபில குண­வர்­தன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­னகோன், கிழக்கு மாகாண காணி ஆணை­யாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ திஸா­நா­யக மற்றும் தெரண ஊடக வலை­ய­மைப்பின் தலைவர் திலித் ஜய­வீர ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

கிழக்கு மாகா­ணத்­திற்கு சொந்­த­மான தொல்­பொருள் முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்­களை அடை­யாளம் காணுதல், அவற்றை பாது­காத்தல், மீள­மைத்தல், முகா­மைத்­துவம் செய்தல் மற்றும் இலங்­கையின் தனித்­து­வத்தை தேசிய ரீதி­யா­கவும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் பிர­பல்­யப்­ப­டுத்தல் போன்ற பல பொறுப்­பு­களும் அச்­செ­ய­ல­ணிக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. எனினும் குறித்த வர்த்­த­மானி அறி­விப்பின் மூலம் நிறு­வப்­பட்ட ஜனா­தி­பதி செய­லணி தொடர்பில் மிகப்­பெ­ரிய பிரச்­சி­னைகள் உள்­ளன.

பவானி பொன்­சேகா

“யுத்தம் நில­விய காலகட்­டங்­களில் தேசிய பாது­காப்பு (National Security) எனக்­கூறி வடக்கு, கிழக்கு மாகாண மக்­க­ளு­டைய இடங்கள் அர­சாங்­கத்தின் மூலம் பறி­முதல் செய்­யப்­பட்­டன. அதேபோல் தற்­போது தேசிய, சொத்து பாரம்­ப­ரியம் (National Heritage, Archaeology) என்ற போர்­வையில் முன்­புபோல் மக்­க­ளு­டைய காணிகள் பறி­முதல் செய்­யப்­ப­டு­கின்­

றன. குறிப்­பாக தொல்­பொருள் திணைக்­களம் மற்றும் வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம் ஆகிய அரச நிறு­வ­னங்கள் சிறு­பான்மை மக்­களின் இடங்­களை பெற்று அவற்றை பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு வழங்­கு­கின்ற ஒரு திட்­ட­மா­கவே இதனை நான் பார்க்­கின்றேன். மிகவும் மறை­மு­க­மாக மேற்­கொள்­ளப்­படு­கின்ற ஜனா­தி­பதி செய­ல­ணியின் செயற்­பா­டுகள் பற்றி அப்­பி­ர­தேச மக்­களும் எதுவும் அறி­யா­த­வர்­க­ளா­கவே உள்­ளார்கள்” என மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான மத்­திய நிலை­யத்தின் சிரேஷ்ட ஆய்­வாளர் பவானி பொன்­சேகா கூறினார்.

 

இந்த செய­ல­ணியில் பௌத்த மதத்­த­லை­வர்கள் இருவர் மாத்­தி­ரமே உள்­ளனர். ஏனைய சகல உறுப்­பி­னர்­களும் சிங்­கள பௌத்த மத பின்­பு­லத்தை சார்ந்­த­வர்கள். அத்­துடன் இந்த செய­ல­ணியின் தலைவர் இரா­ணுவ பயிற்சி பெற்ற பாது­காப்பு செய­லாளர். அதா­வது தமிழ் பேசக்­கூ­டிய சிறு­பான்மை மக்கள் பர­வ­லாக வாழும் கிழக்கு மாகா­ணத்தின் தொல்­பொருள் பாரம்­ப­ரி­யங்­களை பாது­காத்தல் மற்றும் சிவில் மக்­களில் காணி பற்­றிய பிரச்­சி­னைகள் இவர்கள் முன்­னி­லை­யி­லேயே தீர்க்­கப்­பட வேண்டும். சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வமோ பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வமோ இதில் இல்லை.

இந்­நி­லையில் கிழக்கு மாகாண தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் 375 பகு­திகள் வர­லாற்று இடங்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 74 இடங்­களும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 28 புத்த விகா­ரைகள் உட்­பட 55 இடங்­களும், அம்­பாறை மாவட்­டத்தில் 246 இடங்­களும் பௌத்த மத வர­லாற்­றுடன் தொடர்­பு­டை­ய­வை­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஆனால் இவை அனைத்­துமே தமி­ழர்­களின் பூர்­வீக பகு­தி­க­ளா­கவே உள்­ளன. அதனைச் சான்­று­ப­கரும் வகையில் மாவட்­ட­ரீ­தி­யான பல உதா­ர­ணங்கள் உள்­ளன. குறிப்­பாக குச்­ச­வெளி பிர­தேச செயலர் பிரி­வுக்­குட்­பட்ட கந்­த­சாமி மலை முருகன் ஆலயம், கன்­னியா வெந்­நீ­ரூற்று, இலங்­கைத்­துறை முகத்­து­வாரம், லங்­கா­பட்­டின என பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தோடு குஞ்­சி­த­பாத மலையில் இருந்த பால­மு­ருகன் ஆலயம் இடிக்­கப்­பட்டு பௌத்த விகாரை கட்­டப்­பட்­டுள்­ளமை என்­ப­வற்றைக் குறிப்­பி­டலாம்.

சாணக்­கியன் இரா­ச­மா­ணிக்கம்

இது பற்றி மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாணக்­கியன் இரா­ச­மா­ணிக்கம் தெரி­விக்­கையில், “பிரித்­தா­னி­ய­ரிடம் இருந்து இலங்­கைக்கு சுதந்­திரம் கிடைத்­தது முதல் வட, கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்­கின்­றமை என்­பது எமது ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு பெரும் தலை­யி­டி­யா­கவே இருந்­து­வந்­துள்­ளது. தற்­போது உரு­வாக்­கப்­பட்­டுள்ள தொல்­பொருள் செய­ல­ணியின் நோக்கம் கூட கிழக்கு மாகா­ணத்தில் உள்ள இன விகி­தா­சா­ரத்­தையும் நிலப்­ப­ரப்­பையும் மாற்றி இம்­மா­வட்­டத்தை பௌத்த மய­மாக்­கு­வதே ஆகும். தொல்­பொ­ருட்கள் பாது­காக்­கப்­பட வேண்­டி­யது கட்­டா­ய­மா­னது. ஆனால் தொல்­பொருள் என்ற போர்­வையில் திரை­ம­றைவு அர­சியல் நோக்­கங்­களை நிறை­வேற்­று­வதை ஏற்க முடி­யாது. இவற்றை விதுர விக்­ர­ம­நா­யக்க நடிக்­கின்ற ஒரு திரைப்­ப­ட­மா­கவே நான் பார்க்­கின்றேன்” எனக் கூறினார்.

1949இல் இலங்­கையில் முத­லா­வது பல்­நோக்கு அபி­வி­ருத்தி திட்­ட­மான கல்­லோயா முதல் கந்­தளாய், மகா­ஓயா, உட்­பட 1977இல் உரு­வான துரித மகா­வலி திட்டம் வரையில் மாறி­மா­றி­வந்த ஆட்­சி­யா­ளர்­களால் 24 சிங்­கள குடி­யேற்­றத்­திட்­டங்கள் கிழக்கில் அமைக்­கப்­பட்­டுள்­ளன. டி.எஸ் சேன­நா­யக்க, ஜே.ஆர்.ஜய­வர்த்­தன, காமினி திஸா­நா­யக்க, லலித் அத்­துலத் முதலி என அன்­றைய தலை­வர்­களும் ஒரு­வ­ருக்கு ஒருவர் சளைத்­தவர் இல்லை என்ற வகையில் பல்­வேறு வடி­வங்­களில் கிழக்­கி­லங்­கை­யிலே தமது ஆக்­கி­ர­மிப்­பு­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

யுத்­தத்தின் போதும், யுத்தம் முடிவடைந்த பின்­னரும் இரா­ணு­வத்­தி­னரால் காணி உரிமை பற்­றிய பிரச்­சி­னைகள் உட்­பட இன்னும் பல கஷ்­டங்­க­ளுக்கு நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் இம்­மக்கள் முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர். எனவே கிழக்கு மாகாண சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்­கி­டையே எவ்­வாறு மீண்டும் இரா­ணு­வத்­தி­னரால் நம்­பிக்­கை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த முடியும்?

தொல்­பொருள் என்­பதை ஒரு தேசத்தின் வர­லாறு அல்­லது அத்­தே­சத்தின் பண்­டைய மக்­க­ளு­டைய வாழ்க்கை முறையின் வெளிப்­பாடு எனலாம். இலங்கை பூரா­கவும் கண்­டு­பி­டிக்கப்படு­கின்ற மற்றும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள சகல தொல்­பொ­ருட்­க­ளி­னதும் உரிமை காணப்­ப­டு­வது இலங்கை மக்­க­ளுக்கு ஆகும். அது இலங்கை வர­லாற்றின் பிர­தி­ப­லிப்பே யன்றி ஒரு குறிப்­பிட்ட இனக்­கு­ழு­வி­ன­ருக்கு மாத்­திரம் சொந்­த­மா­னது அல்ல.
அகழ்­வா­ராய்ச்­சி­களின் போது கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்ற புரா­தன பௌத்த சின்­னங்கள் போன்றே தமிழ் கோயில்­களும் முஸ்­லிம்­களின் கல்­ல­றை­களும் கூட இலங்­கையின் தொல்­பொருள் அடை­யா­ளங்­க­ளாகும். ஒரு குறிப்­பிட்ட குழு­விற்கு மாத்­திரம் தொல்­பொருள் என்­பதை ஒரு­போதும் வரை­ய­றுக்க முடி­யாது. கிழக்கு மாகா­ணத்­திற்­காக அமைக்­கப்­பட்ட தொல்­பொருள் செய­ல­ணி­யா­னது இலங்­கைக்­கான ஒரு தொல்­பொருள் செய­ல­ணி­யாக இருந்­தி­ருந்தால் அது வேறு விடயம். ஆனால் இந்த செய­லணி உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­பதோ வேறு சில திட்­டங்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காகும்.
இரண்­டா­யிரம் மூவா­யிரம் வரு­டங்கள் பழை­மை­யான தொல்­பொருள் சான்­றுகள் உள்­ளன எனக்­கூறி 100 வரு­டங்­க­ளாக மக்கள் வழி­பட்டு வந்த கோயில்­களை மூடு­வதும் இனிமேல் உங்­களால் அங்கே செல்ல முடி­யாது எனக் கூறு­வதும் எந்த விதத்தில் நியாயம்? அதேபோல் தலை­முறை தலை­மு­றை­யாக விவ­சாயம் செய்து வந்த மக்­களின் காணி­களை தொல்­பொருள் என்ற போர்­வையில் அப­க­ரித்து அவர்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்­தையே நிலை­கு­லையச் செய்­வதன் நோக்­கம்தான் என்ன?

சட்­டத்­த­ரணி மற்றும் களனி பல்­க­லைக்­க­ழ­கத்தின் தொல்­லியல் முது­கலை
ஆய்­வாளர் சுபுன் ஜய­வீர

சுபுன் ஜயவீர

“மர­பு­ரிமை முகா­மைத்­துவம் என்­பது தொல்­பொருட் சிதை­வுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதும் அங்­கி­ருந்து மக்­களை பல­வந்­த­மாக அகற்றி குறித்த காணி­களை அரசின் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்டு வரு­வ­தல்ல. ஏனென்றால் இலங்கை பூரா­க­வுமே தொல்­பொருட் சிதை­வுகள் சிதறிக் காணப்­ப­டு­கின்­றன. உதா­ர­ண­மாக அநு­ரா­த­புர புனித நகரில் உள்­ள­தை­விட பல மடங்கு தொல்­பொ­ருட்கள் அனு­ரா­த­புர நக­ரிலும் அதனை சுற்­றியும் உள்­ளன. ஆதலால் அநு­ரா­த­புர நகரில் வாழ்­கின்ற மக்­களின் குடி­யி­ருப்­பு­களை அகற்றி

அவற்றை தொல்­பொ­ருட்கள் என அரசு பெற்றுக் கொள்வதென்பது நடைமுறைக்கு பொருந்தாததொன்று. எனினும் எவ்வித பிரச்சினைகளும் இன்றி பாதுகாக்க முடியுமான இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்படாமல் இருந்தால் அது அவர்கள் செய்­கின்ற குற்­ற­மாகும். ஆகவே தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் மீது மக்­க­ளுக்­குள்ள வெறுப்பு மற்றும் அச்­சத்­திற்­கான பிர­தான காரணம் அர­சியல் தலை­யீ­டுகள் மற்றும் தனிப்­பட்ட இலாப நோக்­கங்கள் கார­ண­மாக தொல்­பொருள் திணைக்­களம் இதற்கு முன்னர் மக்­க­ளுடன் நடந்து கொண்ட விதமே ஆகும்” என்று குறிப்­பி­டு­கின்றார்.
மலை­யக மக்­க­ளு­டைய காணிப்­பி­ரச்­சினை, வட­கி­ழக்கு மக்­க­ளு­டைய மீள்­கு­டி­யேற்றப் பிரச்­சினை, கல்­லோயா மகா­வலி போன்ற திட்­டங்கள் மூலம் மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட மக்­க­ளு­டைய பிரச்­சினை காணிகள் பிரித்து வழங்­கப்­படும் போது பெண்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றமை இது­போன்ற பிரச்­சி­னைகள் அனைத்­துக்கும் மூல காரணம் இலங்­கை­யிலே காணி பற்­றிய தேசிய கொள்­கை­யொன்று இன்­மையே ஆகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.