சோல்பரி யாப்பின் 29ஆம் ஷரத்து சொன்னது என்ன?

0 2,641
  • ஏ.ஜே.எம். நிழாம்

1946 ஆம் ஆண்டு ஆங்­கி­லேயர் இலங்­கை­ய­ருக்கு டொமி­னியன் சுயா­தீ­னத்தை வழங்­கு­வ­தற்­கா­கவே சோல்­பரி யாப்பை வழங்­கி­யி­ருந்­தனர். அதை இயற்­றி­யவர் சேர் ஐவர் ஜெனிங்ஸ் எனும் ஆங்­கி­லேயர். எனினும் அப்­போது ஆளு­ந­ராக இருந்த சோல்­பரி பிர­புவின் பெய­ரா­லேயே சோல்­பரி யாப்பு என அது அழைக்­கப்­பட்­டது.

முதலில் டொமி­னியன் சுயா­தீனம் என்றால் என்­ன­வென்­பதைப் பார்ப்போம். 1948 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 4 ஆம் திகதி வழங்­கப்­பட்டது முழு­மை­யான சுதந்­திரம் அல்ல. பிர­தான அதி­கா­ரங்­களை ஆங்­கி­லே­யரே வைத்­துக்­கொண்டு முகா­மைத்­துவங் களை மட்­டுமே இலங்­கை­ய­ருக்கு வழங்­கி­யி­ருந்­தனர்.

அதன்­படி சுங்கம், கப்பல் துறை­முகம், பணம் அச்­சிடல், விமா­னத்­தளம், திறை­சேரி, இறை­வரித் திணைக்­களம், உப்­பளம், நிதி, நீதி, பாது­காப்பு, பொலிஸ், வைத்­திய சாலைகள், பெருந்­நெ­ருக்கள், பஸ் போக்­கு­வர்த்து, சட்­டமா அதிபர், தோட்டக் கைத்­தொழில், ஏற்­று­மதி, அர­ச­வர்த்­த­மானி, இறக்­கு­மதி, வர்த்­தக முத­லீடு, மின்­சாரம், வானொலி நிலையம், பெற்றோல் குதங்கள், சர்­வ­க­லா­சா­லைகள், முடிக்­கு­ரிய காணிகள் ஆகி­யன ஆங்­கி­லேயர் வசமே இருந்­தன.

எனவே, டொமி­னியன் சுயா­தீ­னத்தை முழு­மை­யான சுதந்­திரம் எனக் கூற­மு­டி­யாது. எனினும் அந்­த­நாளே இற்­றை­வரை சுதந்­திர நாளாகக் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது என்­பதே உண்­மை­யாகும்.

இந்­தி­யா­வுக்கு மகாத்மா காந்­தியும் பாகிஸ்­தா­னுக்கு முஹம்­ம­தலி ஜின்­னாவும் ஆங்­கி­லே­ய­ரி­ட­மி­ருந்து முழு­யைான சுதந்­தி­ரத்தைப் பெற்று வழங்­கி ­யி­ருக்­கையில் டி.எஸ். சேனா­நா­யக்க இலங்­கைக்கு டொமி­னியன் சுயா­தீ­னத்­தையே பெற்று வழங்­கி­யி­ருந்தார். இந்­தி­யாவில் இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்க இந்­தியா எனவும் பாகிஸ்தான் எனவும் இரு­நா­டு­க­ளாகப் பிரித்­து­விட்ட ஆங்­கி­லேயர் இலங்கை சின்­னஞ்­சிறு தீவு என்­பதால் இனப்­பி­ரச்­சினை ஏற்­ப­டா­தி­ருக்க தாம் இயற்றி வழங்­கிய யாப்பில் சிறு­பான்மைக் காப்­பீட்டுச் சட்­ட­மான 29 ஆம் ஷரத்தை வழங்­கி­யி­ருந்­தனர்.

இதன்­படி இலங்­கையில் சிங்­கள மக்கள் 74% வீத­மாக வாழ்ந்து நான்கில் மூன்று பங்கு மக்கள் பிர­தி­நி­தித்­து­வத்தை வழங்­கிய போதும் சிறு­பான்­மை­களின் அடிப்­படை உரி­மை­களில் எதையும் நீக்­கி­விட முடி­யாது. ஆக 29 ஆம் ஷரத்து என்­பது பாரா­ளு­மன்ற பெரும்­பான்மை வாக்­கு­க­ளாலும் கூட மாற்ற இயலாத சிறு­பான்­மை­க­ளுக்குப் பாதிப்­பற்ற காப்­பீட்டுச் சட்­ட­மாகும். உலகில் இற்­றை­வரை இந்த ஷரத்து புக­ழப்­பட்டே வரு­கின்­றது. காரணம் பல்­லின நாட்டில் பெரும்­பான்மை சமூ­கத்­தி­ட­மி­ருந்து சிறு­பான்­மைகள் பாதிப்­புக்கள் எதுவும் ஏற்­ப­டாது வாழ இதுவே சிறந்த ஏற்­பாடு என ஏற்றிப் போற்­றப்­ப­டு­கின்­றது.

இரண்டாம் உலக மகா யுத்­தத்­துக்குப் பின் ஐ.நா உரு­வாகி மனித உரிமை சாச­னத்தை நிறை­வேற்­றி­யது. அதற்குப் பின்பே கால­னித்­துவ நாடுகள் தமது கைகள் வச­மி­ருந்த நாடு­க­ளுக்கு சுதந்­திரம் வழங்­கின. அந்த சாச­னத்தின் அடிப்­ப­டை­யில்தான் ஆங்­கி­லேயர் பல்­லின நாடான இலங்­கைக்கு 29 ஆம் ஷரத்தை சிறு­பான்மைக் காப்­பீ­டாக வழங்­கி­யி­ருந்­தனர்.

அதன்­படி தமிழ்­மொழி, தமிழ் கலை, கலா­சாரம், தமிழ் வாழ்­வா­தாரம், தமிழ்ப்­பி­ர­தேசம், ஆல­யங்கள், மத வழி­பாடு ஆகி­ய­வற்­றுக்கும் 29 ஆம் ஷரத்தால் சட்டக் காப்­பீடு இருந்­தது. முஸ்­லிங்­க­ளுக்கு ஆங்­கி­லேயர் வழங்­கிய  பிர­தி­நி­தித்­துவம், வக்பு சபை காதிகோர்ட், தனியார் சட்டம், வாழ்­வா­தாரம், பிர­தேசம் ஆகி­ய­வற்­றுக்கும் சட்­டக்­காப்­பீடு இருந்­தது.

1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ ஆட்­சியின் சட்ட மந்­திரி இயற்­றிய குடி­ய­ரசு யாப்பில் 29 ஆம் ஷரத்து நீக்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்­குப்பின் உரி­மை­களை அனு­ப­வித்து வந்த சிறு­பான்­மைகள் யாவரும் சலு­கை­களைப் பெற்றே வாழ­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. சோல்­பரி யாப்பின் 29 ஆம் ஷரத்து நீக்­கப்­பட்ட பின் தம்­மிடம் இருப்­பது உரி­மையா?, சலு­கையா? என்­ப­துவும் சிறு­பான்­மைகள் பல­ருக்குத் தெரி­யாது. அதா­வது எதுவும் சிங்­க­ள­வர்­க­ளுக்குப் பிற­குதான் சிறு­பான்­மை­க­ளுக்கு எனும் பேரினக் கருத்­தாக்­கமே 1972 ஆம் ஆண்டு யாப்­புக்குப் பின் மேலோங்­கி­யி­ருந்­தது.

1949 ஆம் ஆண்டு பிர­தமர் டி. எஸ். சேனா­நா­யக்க கிழக்கில் திட்­ட­மிட்ட பேரினக் குடி­யேற்­றத்தை நிகழ்த்­தா­மலும் மலை­யக இந்­திய வம்­சா­வ­ளி­யி­னரின் குடி­யு­ரி­மையை நீக்­கா­மலும் இருந்­தி­ருப்­பா­ராயின் வடக்குக் கிழக்கில் எஸ்.ஜே.வி. செல்­வ­நா­ய­கத்தின் சமஷ்டிக் கோரிக்கை எழுந்­தி­ருக்­காது. சிறு­பான்மைக் காப்­பீ­டான 29 ஆம் ஷரத்­தாலும் அதைத்­த­டுக்க முடி­யாமற் போனதே சமஷ்டிக் கோரிக்கை தோற்றம் பெறக் கார­ண­மா­யிற்று எனலாம். எனினும் எஸ். டப்­ளியு. ஆர். டி. பண்­டா­ர­நா­யக்க பிர­த­ம­ராக இருக்­கையில் அவர் கொண்டு வந்த சிங்­களம் மட்டும் அர­ச­க­ரும மொழி வழக்கில் 29 ஆம் ஷரத்தை அரசால் வெற்­றி­கொள்ள முடி­ய­வில்லை. வடக்குக் கிழக்கு தமிழர் வெற்றி கொண்ட அதுவே கோடீஸ்­வரன் வழக்­காகும்.

இதில் ஆஜ­ரான ஜி.ஜி. பொன்­னம்­ப­லமும், எஸ்.ஜே.வி. செல்­வ­நா­ய­கமும் முரு­கேசு திருச்­செல்­வமும் திற­மை­யான தமது விவா­தங்­களால் அரசைத் தோற்­க­டித்­தி­ருந்­தனர். அதன் கார­ண­மா­கவே 1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ அரசில் சட்ட அமைச்சர் கொல்வின் ஆர்.டி. சில்வா 29 ஆம் ஷரத்தை நீக்­கி­யி­ருந்தார். பௌத்த மத சாசன முன்­னு­ரி­மை­களைக் கொண்டு வந்து சிறு­பான்மைக் காப்­பீ­டான 29 ஆம் ஷரத்தை நீக்­கி­யதன் மூலம் அவர் இப்­படி குடி­ய­ரசு யாப்பு என பெய­ரிட்­டதால் சிங்­கள மக்­க­ளுக்கே இலங்கை உரித்து என்­றா­கி­யது. ஆங்­கி­லே­யரின் கால­னித்­து­வத்­தி­லி­ருந்து சுதந்­திரம் பெற்ற சிங்­க­ள­வரின் ஆளு­மைக்குள் சிறு­பான்­மைகள் சிக்­கிக்­கொண்­டார்கள் என்­றா­கி­யது. அதற்குப் பின்பே அனைத்து இலங்கைப் பிர­ஜை­களும் சமம் எனும் நிலைப்­பாடு அகன்று முதல் தரப்­பி­ரஜை இரண்டாம் தரப்­பி­ரஜை எனும் பாகு­பாடும் உரு­வா­னது. சிங்­கள மக்­களே பூமி புத்­தி­ரர்கள், இலங்கை புத்­தரின் தேசம் எனும் கருத்­து­ரு­வாக்­கங்கள் அன்­றி­லி­ருந்தே தோற்றம் பெற்­றன.

இதனால் 1949 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை சமஷ்­டியை மட்­டுமே கோரி­வந்த வடக்கு கிழக்கு தமிழ் தரப்­பினர் சுய­நிர்­ணய தனி இறைமைக் கோரிக்­கையை முன்­வைத்து 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத்­தேர்­தலில் மக்­க­ளா­ணை­யையும் பெற்­றுக்­கொண்­டனர். ஜன­நா­யக ரீதி­யி­லான அவர்­களின் முன்­னெ­டுப்பு ஆயுத ரீதியில் ஒடுக்­கப்­பட்­ட­தா­லேயே தீவி­ர­வாதம் தலை­தூக்­கி­யது.

பிறகு அரசு ஜன­நா­யக தமிழ் தலை­வர்­களைப் புறக்­க­ணித்­து­விட்டு தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளு­ட­னேயே பேச்சு வார்த்­தை­களை நடாத்­தி­யது. அதிலும் இணக்­கப்­பாடு ஏற்­ப­டா­ததால் 30 வரு­ட­கால கொடூர யுத்தம் நிகழ்ந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் பலி­யா­கினர். ஆயி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் அங்­க­வீ­ன­முற்­றனர். இலட்­சக்­க­ணக்­கான தமிழ் மக்கள் அக­தி­க­ளா­யினர். ஆயி­ரக்­க­ணக்­கான இரா­ணுவ வீரர்­களும் பலி­யா­கினர். நூற்­றுக்­க­ணக்­கான இரா­ணுவ வீரர்­களும் அங்­க­வீ­ன­முற்­றனர். கோடிக்­க­ணக்­கான சொத்­துக்­களும் அழி­வுற்­றன. உலக நாடு­களில் இலங்கை தனி­மைப்­பட்டு ஐநா விலும் போர்க்­குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­னது. எனினும் தீர்வு இன்னும் எட்­டப்­ப­ட­வில்லை.

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர் இயற்­றிய நிறை­வேற்று யாப்­பும்­கூட பௌத்த மதத்­தையும் சாச­னத்­தையும் முன்­னி­லைப்­ப­டுத்தி 29 ஆம் ஷரத்­தா­கிய சிறு­பான்­மைக்­காப்­பீட்டை நீக்­கியே இருந்­தது. எனினும் அத்­தனை அழி­வு­களும் நிகழ்ந்த பின் அண்­மை­யில்தான் உயர்­நீ­தி­மன்றம் சமஷ்டி அந்த யாப்­புக்கு முர­ணல்ல எனப்­பொருட் கோடல் செய்­தி­ருக்­கி­றது. அப்­ப­டி­யானால் 1972 ஆம் ஆண்டின் குடி­ய­ரசு யாப்­புக்கும் சமஷ்டி முர­ணல்ல என்றே ஆகி­றது. எனவே சோல்­பரி யாப்­புக்கு சமஷ்டி முற்­றிலும் இசைந்­தி­ருப்­பதும் தெளி­வா­கி­றது.

அந்த வகையில் 1957 ஆம் ஆண்டு நிகழ்ந்த பண்டா –செல்வா ஒப்­பந்தம் அமு­லா­கி­யி­ருக்­கு­மாயின் இந்த நாடு இப்­போது சிங்­கப்பூர், மலே­ஷியா, மாலை­தீவு, இந்­தியா, ஹொங்கொங் ஆகிய நாடு­க­ளைப்போல் பொரு­ளா­தார ரீதியில் மேம்­பாடு அடைந்து மக்­களும் செழிப்­போடு வாழ்ந்­தி­ருப்­பார்கள். எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டார நாயக்க பேரி­ன­வா­தத்தைத் தனது அர­சியல் தேவைக்­காக உசுப்பி விட்டு ஆட்­சிக்கு வந்­த­தா­லேயே சிங்­கள மக்­களின் எதிர்ப்­புக்கு அஞ்சி ஒப்­பந்­தத்தைக் கிழித்­தெ­றிந்தார். எனினும் அவ­ருக்கு சமஷ்டி சரி­யா­னது என்­பது தெரியும். இல்­லா­விட்டால் எஸ்.ஜே.வி.செல்­வ­நா­ய­கத்­தோடு சேர்ந்து அதை வடி­வ­மைக்க வாரக்­க­ணக்கில் ஈடுபட்­டி­ருப்­பாரா? அர­சியல் வடி­வ­மைப்­பு­களில் வல்­ல­வ­ரான ஜே.ஆருக்கும் சமஷ்­டியின் அவ­சியம் புரி­யா­ம­லில்லை. எனினும் அவர் சிங்­கள வாக்­கு­வங்­கியை மீளப்­பெ­றவே சமஷ்­டிக்கு எதி­ராக நின்­றி­ருக்­கிறார். இதே நிலை அர­சி­யலில் தற்­போதும் தொட­ரவே செய்­கி­றது.

1978 ஆம் ஆண்டில் இயற்­றப்­பட்ட தற்­போ­தைய நிறை­வேற்று யாப்பு சமஷ்­டிக்கு முர­ணல்ல என உயர் நீதி­மன்றம் பொருட்­கோடல் செய்தும் கூட சமஷ்­டியைப் பிரி­வினளளளை, தனி­நாடு என்­றெல்லாம் அர­சியல் தேவை­க­ளுக்­காக பெருந்­தே­சியக் கட்­சிகள் அர்த்­தப்­ப­டுத்­து­கின்­றன.

முன்பு கோரப்­பட்ட சமஷ்­டிக்கும் இப்­போது கோரப்­படும் சமஷ்­டிக்கும் வித்­தி­யாசம் எனவும் குறிப்­பி­டு­கின்­றன. முன்பு சுய­நிர்­ணய தனி இறைமைக் கோரிக்கை அற்ற நிலையில் முன்­வைக்­கப்­பட்ட சமஷ்டி எனவும் இப்­போது சுய­நிர்­ணய தனி­ இ­றை­மைக்கு மாற்­றீ­டாகக் கோரப்­படும் சமஷ்டி எனவும் விளக்கம் கூறு­கி­றார்கள். அது முழு நாடும் சிங்­க­ள­வ­ருக்கே எனும் சட்ட அமைப்பு இல்­லாத நிலைமையில் முன்­வைக்­கப்­பட்ட சமஷ்டி எனவும் இது முழு நாடும் சிங்­க­ள­வ­ருக்கே எனும் சட்ட வடிவம் இருக்­கையில் முன்­வைக்­கப்­படும் சமஷ்டி எனவும் எடுத்­துக்­கொள்­ள­லாமே?

பௌத்த மதத்­தையும் சாச­னத்­தையும் முன்­னு­ரி­மைப்­ப­டுத்தி ஒற்­றை­யாட்சி என்றால் என்ன அர்த்தம்? அந்த முறைப்­படி வடக்கு கிழக்கு தமிழ் மக்­க­ளுக்கு சமஷ்டி வழங்­கி­னாலும் கூட அது சம­நி­லைப்­பா­டுள்­ள­தாக அமை­யாது. பல்­லின நாட்­டுக்­கான சமஷ்டி பல்­லின யாப்­பா­லேயே சாத்­தி­யப்­படும். பேரின யாப்பு மூலம் அதை நிலை நிறுத்த முடி­யாது. எனினும் பேரின வடி­வத்தைத் தக்­க­வைத்­துக்­கொண்டே சிறு­பான்மைப் பிர­தே­சத்­துக்­கான சமஷ்­டியை அமைக்­கப்­பார்க்­கி­றார்கள். பேரின மத்­திய அரசு சமஷ்­டியை ஏற்­கு­மெனில் இன ரீதி­யி­லன்றி பிர­தேச ரீதி­யி­லேயே அது சாத்­தி­ய­மாகும். மத்­திய அரசின் ஆளுமை அங்கு இருக்கும்.

சோல்­பரி யாப்பில் பௌத்த சாசன முன்­னு­ரி­மைகள் இருக்­க­வில்லை. காரணம் அது மத சார்­பற்ற யாப்­பாக இருந்­த­தே­யாகும். அதன் மூலம் இலங்­கையில் எல்லா மதத்­தி­ன­ருக்கும் சமத்­துவம் இருந்­தது. 1972 ஆம் ஆண்டு இயற்­றப்­பட்ட குடி­ய­ரசு யாப்பில் அவற்­றுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டதன் மூலமும் அரச கரு­ம­மொழி சிங்­க­ள­மாக ஆக்­கப்­பட்­டதன் மூலமும் உரு­வான ஒற்­றை­யாட்சி சிறு­பான்மைக் காப்­பீட்டுச் சட்­ட­மான 29 ஆம் ஷரத்­தையும் நீக்­கி­யதன் மூலமும் சிறு­பான்­மைகள் அநீதி இழைக்­கப்­பட்டு வஞ்­சிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

சிறு­பான்­மை­களும் சேர்ந்து ஆங்­கி­லே­ய­ரிடம் கோரி சம­மாகப் பெற்ற சுயா­தீ­னத்தை தன்­னிச்­சை­யாக இவர்கள் அப­க­ரித்துக் கொண்­டார்கள். இது பற்றி நான் முன்பும் கூறி­யி­ருக்­கிறேன். பேரி­ன­வா­திகள் சோல்­பரி யாப்பில் காணப்­பட்ட ஒரு குறை­பாட்டைக் கண்­டு­பி­டித்தே இதை சாதித்­துக்­கொண்­டார்கள். அந்த யாப்பை பாரா­ளு­மன்­றத்தில் கூடி இரத்­தாக்க முடி­யாது என அதில் காணப்­பட்­டதால் ரோயல் கல்­லூரி நவ­ரங்­க­ஹல மண்­ட­பத்தில் எம்­பிக்­களைக் கூட்டி இரத்­தாக்­கி­விட்டுப் பாரா­ளு­மன்­றத்தில் பேரினக் குடி­ய­ரசு யாப்பை இயற்றிக் கொண்­டார்கள்.

இந்த யாப்பு பௌத்த மத சாசன முன்­னு­ரி­மை­களை வழங்­கி­ய­தோடு அரச கரும மொழி­யாக சிங்­க­ளத்­தையும் ஏற்று சிறு­பான்­மைக்­காப்­பீ­டா­கிய 29 ஆம் ஷரத்தை நீக்­கி­யி­ருந்­தது. இது சிறு­பான்மை தமிழ்– முஸ்லிம் எம்­பிக்­க­ளுக்குத் தெரி­யாது. சிங்­கள எம்­பிக்கள் மட்­டுமே கூடிச்­செய்­தது எனவும் கூறி­விட முடி­யாது.

தமிழ்த்­த­ரப்­பினர் சமூக நோக்­கோடு இதை எதிர்த்த போதும் முஸ்­லிம்கள் தமிழ் தரப்­போடு அன்­றி­ருந்த பகை­யாலும் சிங்­க­ள­வ­ரு­ட­னான நெருக்­கத்­தாலும் எதிர்கால சந்ததியின் நல உரிமைகள் பற்றிய நோக்கமின்றியும் நன்கு ஆராயாமலும் இதை ஆதரித்திருந்தார்கள்.

இதனால் 29 ஆம் ஷரத்து நீக்கப்பட்ட தன் காரணமாக இற்றைவரை சிறுபான்

மைகள் ஆங்கிலேயர் வழங்கியிருந்த உரிமைகளை சலுகைகளாகவே பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

கிழக்கை வடக்கோடு இணைத்தால் இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் ஒன்று தமிழருக்காகி விடும். பொலிஸ் அதிகாரத்தையும் காணி அதிகாரத்தையும் அதற்கு வழங்கினால் நாடு கடந்த தமிழரும் அங்கு வந்து குடியேறி தம் வசமுள்ள செல்வங்களையும் குவித்தால் தனியரசு போல் ஆகிவிடும் என சிங்கள தரப்பினர் கருதுகையில் கிழக்கை வடக்கோடு இணைக்காது தனியே விட்டால் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் நாளடைவில் கபளீகரம் செய்துவிடும். அதை தடுப்பதற்கே இணைப்பைக் கோருவதாகவும் பொலிஸ் அதிகாரமும் காணியதிகாரமும் இருந்தால் தான் அவ்வாறு தடுக்கலாம் எனவும் தமிழ் தரப்பு குறிப்பிடுகிறது. பரஸ்பரம் இருதரப்பும் நம்பிக்கை கொள்ளாதவரை நிலையான தீர்வுக்கு வருவது இழுபறியாகவே இருக்கும். இருதரப்பு மட்டும் பே சாமல் முஸ்லிம் களையும் மூன்றாம் தரப்பாகத் தம்மோடு இணைத்துக்கொள்ள வேண் டும். இன்றேல் எட்டப்படும் இணக்கம் முழுமைபெறாது. அரைகுறை தீர்வு பிற்பலனைப் பாதிக்கும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.