அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்ட மைத்திரி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடின் ஆதரவளியோம்

அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராக செயற்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­பதி தேர்­தலில்  வேட்­பா­ள­ராக நிய­மிக்க ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்­லை­யென ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம தெரி­வித்தார். எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வேட்­பா­ள­ராக நிய­மிக்க பொது­ஜன பெர­முன ஆத­ர­வ­ளிப்­பது தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், ஜனா­தி­பதி வேட்­பாளர்…

ஆயிரக்கணக்கான தொன் தங்கத்தினை சுத்திகரிக்க வெனிசுவெலா இணக்கம்

மத்­திய துருக்­கியில் காணப்­படும் ஆயி­ரக்­க­ணக்­கான தொன் நிறை கொண்ட தங்­கத்­தினை சுத்­தி­க­ரிப்­ப­தற்கு ஏது­வான உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டு­வ­தற்­காக வெனி­சு­வெலா குழு­வொன்­றினை துருக்­கிக்கு அனுப்பி வைத்­துள்­ளது. மேற்­படி தூதுக்­குழு உடன்­ப­டிக்கை தொடர்­பான பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­வ­தற்­காக சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்கள் அமைந்­துள்ள துருக்­கியின் கோரும் மாகா­ணத்­திற்கு அழைத்துச் செல்­லப்­பட்­டுள்­ள­தாக கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று பல்­வேறு துருக்­கிய ஊட­கங்கள் தகவல் வெளி­யிட்­டி­ருந்­தன. ஒப்­பந்­தத்தின்…

மகா­நா­யக்க தேரர்­களை சிலர் தவ­றாக திசை திருப்ப முயற்சிப்பது கவ­லைக்­கு­ரி­யது

நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தற்­காக புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வரப்­போ­வ­தாக சில அர­சி­யல்­வா­திகள் மகா­நா­யக்க தேரர்­களை தவ­றாக திசை திருப்ப முயற்சிப்பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான சட்­ட­மூலம் இது­வ­ரையும் முன்­வைக்­கப்­ப­டாத நிலையில் இல்­லாத ஒன்றை இருப்­ப­தாகக் காட்டி, இன­வா­தத்தை தூண்­டு­வ­தற்கு ஒரு சாரார் முயற்­சித்து வரு­வ­தா­கவும் பிர­தமர் கூறினார். அலரி மாளி­கையில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற தேசிய தைப்­பொங்கல் விழாவில் பிர­தமர்…

ஏழு கண்டங்களிலும் மரதன் ஓடிய முதல் இலங்கை வீரரானார் ஹசன் யூசு­பலி

அந்­தாட்டிக் ஐஸ் மரதன் தொட­ரினை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்­ததன் மூலம் உலகின் ஏழு கண்­டங்­க­ளிலும் நடை­பெற்ற மரதன் ஓட்டப் போட்­டி­களில் பங்­கு­பற்­றிய முதல் இலங்­கையர் என்னும் புதிய சாத­னை­யினை நிலை­நாட்­டினார் மரதன் ஓட்ட வீர­ரான ஹசன் யூசு­பலி. மிகவும் கடு­மை­யான நிபந்­த­னைகள் கொண்ட அந்­தாட்டிக் கண்­டத்தின் அந்­தாட்டிக் ஐஸ் மரதன் தொடர் அதிக குளிர், பனிக்­கட்டிப் பாறைகள், மிகக் குறை­வான பார்வை வீச்சு என ஆபத்­துக்கள் நிறைந்த 42.2 கிலோ மீட்டர் ஓடு­பா­தை­யினை கொண்ட மிகச் சவா­லான தொட­ராகும். குறித்த மரதன் தொடரை ஹசன் எசு­பலி…