பலஸ்தீன மக்களுக்கான உதவியினை உலக உணவுத் திட்டம் இடைநிறுத்தியது
நிதிப் பற்றாக்குறை காரணமாக உலக உணவுத் திட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை மற்றும் காஸா பள்ளத்தாக்கிலுள்ள அதன் சில பயனாளிகளுக்கான உதவியினை இடை நிறுத்தியுள்ளது அல்லது குறைத்துள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தினூடான உதவி சுமார் 27,000 பலஸ்தீனர்களுக்குக் கிடைக்காது என அமைப்பின் பலஸ்தீன ஆள்புலப் பிரதேசத்திற்கான பணிப்பாளர் ஸ்டீபன் கோர்னி தெரிவித்தார்.…