வட – கிழக்கு இணைப்பு எமது தீர்மானம் அல்ல

அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களில்  இது­வரை தமிழ் தரப்பின் ஒத்­து­ழைப்பு வழங்­கப்­ப­டாத நிலையில் முதல் தட­வை­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் தமிழ் அர­சியல் தலை­மைகள் ஈடு­ப­டு­கின்­றன. இந்த சந்­தர்ப்­பத்தை தவ­ற­விட்டால் இனி எப்­போதும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு கிடைக்­காது. எனினும், சமஷ்­டியோ, வடக்கு கிழக்கு இணைப்போ எமது தீர்­மா­ன­மல்ல என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற சபை முதல்­வ­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் குறித்து அர­சியல் கட்­சிகள்…

பாகிஸ்தான் பழங்­குடிப் பிராந்­தி­யத்­திற்கு தனி­யான பொலிஸ் படை அமைக்­கப்­படும்

பாகிஸ்­தானின் சட்ட மற்றும் அர­சியல் நீரோட்­டத்தில் கடந்த வருடம் இணைத்­துக்­கொள்­ளப்­பட்ட ஏழு பழங்­குடி மாவட்­டங்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு அந் நாட்டு அர­சாங்­கத்தின் வட­மேற்கு கைபர் பக்ஹ்­துன்க்ஹ்வா மாகாணம்  22,000 பேர் கொண்ட பல­மான பொலிஸ் படை­யொன்­றுக்­கா­கான ஆட்­சேர்ப்பை செய்­ய­வுள்­ளது என அர­சாங்கப் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார். ஆப்­கா­னிஸ்­தானின் எல்­லையில் அமைந்­துள்ள பழங்­குடிப் பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள மில்­லி­யன்­க­ணக்­கான மக்­க­ளுக்கு சம உரிமை வழங்­கு­வ­தற்கு கடந்த வருடம் மே மாதம்…

மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மாகாண சபை தேர்­தலை நடத்­து­வது தொடர்­பாக தேர்தல் ஆணைக்­கு­ழு­வுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறேன். மாகாண சபை தேர்­தலை தாமதம் இல்­லாமல் உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் பல்­வேறு கதை­களை சோடித்து மாகாண சபைத் தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்கு சிலர் முயற்­சித்து வரு­கி­றார்கள் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எதிர்­கால புன­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்­பான மாகாண மட்­டத்­தி­லான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று முன்­தினம்…

பலஸ்­தீன மக்­க­ளுக்­கான உத­வி­யினை உலக உணவுத் திட்டம் இடை­நி­றுத்­தி­யது

நிதிப் பற்­றாக்­குறை கார­ண­மாக உலக உணவுத் திட்டம் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­கரை மற்றும் காஸா பள்­ளத்­தாக்­கி­லுள்ள அதன் சில பய­னா­ளி­க­ளுக்­கான உத­வி­யினை இடை நிறுத்­தி­யுள்­ளது அல்­லது குறைத்­துள்­ளது என அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட மேற்­குக்­க­ரையில் ஜன­வரி முதலாம் திகதி தொடக்கம் ஐக்­கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்­டத்­தி­னூ­டான உதவி சுமார் 27,000 பலஸ்­தீ­னர்­க­ளுக்குக் கிடைக்­காது என அமைப்பின் பலஸ்­தீன ஆள்­புலப் பிர­தே­சத்­திற்­கான பணிப்­பாளர் ஸ்டீபன் கோர்னி தெரி­வித்தார்.…