19 மீது அர­சாங்கம் துஷ்­பி­ர­யோகம்

அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் அர­சியல் தலை­யீடு என்றும் சாடு­கிறார் ஜனா­தி­பதி

0 529

அர­சி­ய­ல­மைப்பு பேரவை முழு­மை­யான அர­சியல் தலை­யீட்டில் மட்­டுமே செயற்­பட்டு வரு­கின்­றது. நிறை­வேற்று அதி­கா­ரத்­தையும், அர­சி­ய­ல­மைப்­பி­னையும், நீதி­மன்­றத்­தையும் முழு­மை­யாகக் கட்­டுப்­ப­டுத்தும் வகை­யி­லேயே அர­சி­ய­ல­மைப்பு பேரவை செயற்­ப­டு­கின்­றது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். நான் உரு­வாக்­கிய புனி­த­மான குழந்­தை­யான 19 ஆம் திருத்­தத்தை இந்த அர­சங்கம் துஷ்­பி­ர­யோ­கித்­து­விட்­டது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு பேரவை மீதான விவா­தத்தில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி இதனைக் குறிப்­பிட்டார். இது­கு­றித்து அவர் மேலும் கூறு­கையில்,

எம்மால் உரு­வாக்­கப்­பட்ட எமது உண்­மை­யான குழந்­தை­யான 19 ஆம் திருத்த சட்டம்  குறித்து விவா­திக்­கின்றோம். நான் இதற்கு முன்னர்  அர­சி­ய­ல­மைப்பு பேரவை குறித்து சபையில் உரை­யாற்­றிய விட­யங்கள் தொடர்பில் சபா­நா­ய­கரும் பிர­த­மரும் பதில் கூறி­யி­ருந்­தீர்கள். அதேபோல் இந்தப் பிரச்­சி­னையில் நான் கொண்­டுள்ள நிலைப்­பாடு குறித்து ஆளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் தவ­றான கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.  இதற்கு முன்னர் நான் முன்­வைத்­துள்ள கருத்­துக்கள் குறித்து எழுந்­துள்ள விமர்­ச­னங்­களை நான் நிரா­க­ரிக்­கின்றேன். பிர­த­மரும், அர­சாங்கம்  மற்றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களின் கருத்­துக்­களில் நீதி­ய­ரசர் நிய­ம­னத்தில் நான் எதிர்ப்பை வெளி­ப­டுத்­து­கின்றேன் என்ற கருத்­தி­னையே முன்­வைக்­கின்­றனர். ஆனால்  இவர்­களின் நிய­ம­னத்தில்   எந்த முரண்­பாடும் இல்லை, அதி­ருப்­தியும் இல்லை. எனினும் என்­மீ­தான  தவ­றான கருத்­துக்­களை நாட்­டுக்கு முன்­வைத்து என்னை பல­வீ­னப்­ப­டுத்த எடுக்கும் முயற்­சி­யா­கவே உணர்­கின்றேன்.

கடந்த  2015 ஜனா­தி­பதி தேர்­தலில் நாம் அனை­வரும் இணைந்து தேர்தல் பிர­க­டனம் ஒன்­றினை வெளி­யிட்டோம். அதற்கு கைச்­சாத்­திட்ட நபர்கள் யார் என்­பது இங்­குள்ள அனை­வ­ருக்கும் நன்­றா­கவே தெரியும். அர­சியல் கட்­சிகள், சிவில் அமைப்­புகள் உள்­ளிட்ட 49 அமைப்­புகள் கைச்­சாத்­திட்­டன. இதில் பிர­தா­ன­மா­னது தேசிய மற்றும் சர்­வ­தேச மட்­டத்தில் நல்­லாட்­சியின் கொள்­கையில் அத­னுடன் தொடர்­பு­பட்ட  கார­ணிகள் உள்­வாங்­கப்­பட்­டன. அதேபோல் தேர்தல் பிர­க­ட­னத்தின் பிர­காரம் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­திக்­க­மைய  19 ஆம் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.  நான் ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­ன­துடன் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை  கொண்­டு­வ­ரு­வது என்ற உடன்­ப­டிக்கை இருந்­தது. அதேபோல் பல்­வேறு கார­ணி­களை இணைக்­கப்­பாட்­டுடன்  செய்­து­கொண்டோம். பொதுத் தேர்தல் வரையில் இந்த சபையில் நாற்­ப­தற்கும்  சற்று அதி­க­மான உறுப்­பி­னர்­களும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்பில்  142 உறுப்­பி­னர்கள் இருந்­தனர். இதில் 122  பேர்  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர்.  ஜனா­தி­பதி தேர்­தலில் தெரி­வாகி மூன்று வாரத்தில் கட்­சியின் தலை­மையை நான் எடுத்­த­வுடன் பாரா­ளு­மன்­றத்தில் ஆளும், எதிர்க்­கட்சி பேத­மின்றி செயற்­பட எமக்கு இந்த சபையில் ஒரு குறிப்­பிட்ட  காலத்தை பெற்­றுக்­கொ­டுத்­தனர். சகல கட்­சி­களும் சில மாத­கா­ல­மாக ஒத்­து­ழைப்பு வழங்­கின. அந்த ஒத்­து­ழைப்­பின்­ப­டியே 19 ஆம் திருத்­தத்தை கொண்­டு­வந்தோம். அந்த ஒத்­து­ழைப்பின் படியே 215 உறுப்­பி­னர்கள் இதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர். அதற்­க­மைய கொண்­டு­வ­ரப்­பட்ட 19 ஆம் திருத்தம் பிர­தான வாக்­கு­று­தி­யாகும்.

மேலும்  என்னால் உரு­வாக்­கப்­பட்ட புனி­த­மான  குழந்­தையே 19 ஆம் திருத்தம். பல எதிர்­பார்ப்­பு­க­ளுடன் இந்தக் குழந்­தையை நான் உரு­வாக்­கினேன். இவ்­வாறு எனது புனி­த­மான குழந்­தையை காப்­பாற்ற விஜ­ய­தாச ராஜபக் ஷ தனி­யாகப் போரா­டினார் என்­பதை நான் மறக்­க­வில்லை. 19 ஆம் திருத்தம் குறித்து சபையில்  எழுப்­பப்­பட்ட அனைத்துக் கேள்­வி­க­ளுக்கும் தனி­யாக முகங்­கொ­டுத்து கேள்­வி­க­ளுக்கு பதில்­களை கொடுத்தார். எனினும் அவ்­வாறு பெற்­றெ­டுத்த  குழந்தை ஒரு கள்­ள­னாக அல்­லது அங்­க­வீ­ன­மாக பிறந்­து­விட்­டது. இன்று ஓர் ஊடகம் அதனை தெளி­வாக எழு­தி­யுள்­ளது. ஓர் அங்­க­வீன குழந்தை என்ற கருத்­தினை நான் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­கிறேன். அநா­வ­சிய தலை­யீ­டுகள் ஏற்­பட்ட கார­ணத்­தினால் இன்று 19 ஆம் திருத்தம் தவ­றி­விட்­டது என்­பதே உண்­மை­யாகும்.

19 ஆம் திருத்­தத்தின் மூலம் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை பாரா­ளு­மன்­றத்­திற்கும் சுயா­தீன ஆணைக்­கு­ழு­விற்கும் கொடுக்­கவே தீர்­மா­னிக்­கப்­பட்­டது. எமது சமூ­கத்தில் தானம் கொடுப்­பது வழ­மை­யான ஒன்­றாகும். யுத்­தத்தில் எமது இரா­ணு­வத்தை தானம் கொடுத்தோம். ஆனால் அதி­கா­ரத்தை தானம் செய்­த­வர்கள் என உல­கத்தில் அவ்­வாறு உள்­ள­னரா என தெரி­யாது. ஆனால் அதி­கா­ரத்­திற்கு  வந்து அதி­கா­ரத்தை தானம் கொடுத்த ஒரு நபர் நானா­கவே இருப்பேன்  என நினை­கின்றேன். இந்த யுகத்தில் எந்­த­வொரு தலை­வரும் செய்­யாத ஒன்றை நான் இந்த ஆட்­சிக்­காக செய்­துள்ளேன். ஆனால் 19 ஆம் திருத்தம் என்ற அந்தப் புனி­த­மான  குழந்தை துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளது.  19 ஆம் திருத்­தத்தில் அர­சி­ய­ல­மைப்பு பேரவை மற்றும் சுயா­தீன ஆணைக்­குழு அமைத்தோம். இதன் தன்­மைகள் குறித்து 19 ஆம் திருத்­தத்தில் தெளி­வாக உள்­ளன. ஆனால் அதனை நாம் நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை. மாகா­ண­சபை முறைமை, அதனை எவ்­வாறு கையாள்­வது, எவ்­வாறு பலப்­ப­டுத்­து­வது என்ற எந்­த­வொரு நகர்­வையும் எவரும் முன்­னெ­டுக்­க­வில்லை. மாக­ண­சபை சாத­கமா, பாத­கமா என்ற கார­ணி­யைக்­கூட எம்மால் கணிக்க முடி­யா­துள்­ளது. 85 வீதம் மாகா­ண­சபை நடத்­து­வ­தற்கும் 15 வீதம் அபி­வி­ருத்­திக்கும்  நிதி ஒதுக்­கப்­படும் நிலைமை உள்­ளது. அதேபோல் எனது மன­சாட்­சிக்கு அமை­யவே நான் உரை­யாற்றி வரு­கின்றேன். எமது கையால் ஒரு தவறு நடந்தால் அந்த தவறை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும்.  சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நான் எப்­போதும் குற்றம் சுமத்­த­வில்லை. சுயா­தீன ஆணைக்­குழு ஒரு கட்­டுப்­பாட்டில் இருக்க வேண்டும். ஆனால்  அவ்­வா­றான ஒரு  கட்­டுப்­பாடு  இல்லை என்றே நான் கூறினேன். பாதாள உலக கோஷ்­டிகள், குடு­க்காரர், கொள்­ளையர் ஆகி­யோரை வெலிக்­க­டையில் இருந்து அங்­கு­னு­கொ­ல­ப­லஸ்ஸ சிறைக்கு அனுப்­பினால் அதனை எதிர்த்து மனித உரிமை ஆணைக்­குழு எம்­மிடம் கேள்வி எழுப்­பு­கின்­றது. மனித உரிமை ஆணைக்­குழு குடுக்­காரர், கொள்­ளை­யரை பாது­காக்­கவா உள்­ளது. 21 மில்­லியன் மக்­களின் மனித உரிமை முக்­கி­யமா அல்­லது கொள்­ளை­காரர், குடு­க்கா­ரார்­களின் மனித உரிமை முக்­கி­யமா என்ற கேள்வியை மனித உரிமை ஆணைக்­கு­ழு­விடம் கேட்க வேண்டும்.

சர்­வ­தேச நாடு­களும் இன்று எமது மனித உரிமை குறித்தே பேசு­கின்­றன. அமெ­ரிக்கா,  அங்கு குற்­ற­வா­ளி­களை  மனித உரிமை பாது­காக்கும் வகை­யிலா செயற்­ப­டு­கின்­றது. அவர்­களின் சிறை­களை பார்த்தால் தெரியும். இவர்கள் எமக்கு மனித உரி­மை­களை கற்­பிக்க வரு­கின்­றனர். இதைத்தான் நான் அன்றும் சுட்­டிக்­காட்­டினேன். நான் அவ்­வாறு கூறிய பின்னர் பலர் பல்­வேறு விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­றனர். அதேபோல் நீதி­ய­ரசர் நிய­ம­னத்தில் நான் முரண்­ப­டு­வ­தாகக் கூறு­கின்­றனர். நிய­மிக்­கப்­பட்ட நபர்கள் தொடர்பில் நான்  குற்றம் சுமத்­த­வில்லை. அவர்­களை குறித்து எனக்கு எந்த அதி­ருப்­தியும் இல்லை. ஆனால் நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் என்னை சந்­தித்து பேசு­கையில் கூறும் சில கார­ணி­க­ளையே நான் கூறினேன். நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் தாம் ஏன் நிரா­க­ரிக்­கப்­பட்டோம் என்ற கார­ணியை தெரிந்­து­கொள்ள உரிமை உண்டு.  19 ஆம் திருத்தம் நிறை­வேற்­றப்­பட்ட போது இப்­போ­தைய சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய அப்­போது அமைச்­ச­ராக உரை­யாற்­றிய காரணி. “மைத்­திரி பிர­க­ட­னத்தை கையில் எடுத்­துக்­கொண்டு சந்தி சந்­தி­யாக சென்று மக்கள் வரம் கேட்டோம். அர­சியல் தலை­யீடு இல்­லாத  பொலிஸ், அரச சேவையை உரு­வாக்க வேண்டும். இதையே நாம் மக்­க­ளுக்கு கூறினோம். அத­னையே நாம் அனை­வ­ருக்கும் கூறினோம். ஆகவே அதனை உரு­வாக்­கவே நாம் இன்று முன்­வந்­துள்ளோம்” என நீங்கள் கூறி­யது எனக்கு இப்­போது நினை­வுக்கு வரு­கின்­றது. நீங்கள் அன்று கூறிய கார­ணிகள் குறித்து இன்று குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது.  அர­சி­ய­ல­மைப்பு பேரவை அர­சியல் மய­மாக்­கப்­பட்­டு­விட்­டது என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டு­விட்­டது. சபா­நா­யகர் அவர்­களே, வேலியே  பயிரை மேய்ந்தால் நிலைமை என்­ன­வாகும்.

சிரேஷ்ட தன்­மையை மட்டும் கருத்தில் கொள்­ளாது அவர்­களின் தகுதி, சுயா­தீ­னத்­தன்மை, திறமை என்ற கார­ணி­களை கருத்தில் கொள்வோம் என கூறி­னீர்கள். இதில் பிரச்­சினை என்­ன­வென்றால், நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் ஏன் தகு­தி­யற்­றவர் என்ற கார­ணியை தெரி­விக்க வேண்டும் என்­ப­தே­யாகும். இன்று 14 பேர் என் பின்னால் வந்து முறை­யிடும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களை ஏன் நிரா­க­ரித்­தனர் என்­னிடம் கேட்­கின்­றனர். ஆகவே இந்தக் காரணி ஒரு கேள்­வி­யா­கவே உள்­ளது. அதேபோல் எனக்­குமா இதனை அறிந்­து­கொள்ள முடி­யாது? சபா­நா­யகர் என்ற வகையில் நீங்­களோ அல்­லது நீதி­ய­ர­சரோ  ஏன் எனக்கு அறி­விக்­க­வில்லை. ஆகவே இந்த கார­ணி­களை அவ­தா­னிக்­கையில்  அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு ஜனா­தி­ப­தியை மீறி செயற்­பட முடி­யாது. ஆனால் அர­சி­ய­ல­மைப்பு, நிறை­வேற்று அதி­காரம்,  நீதி­மன்றம் ஆகிய மூன்றும் அர­சி­ய­ல­மைப்பு சபை­யினால் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது..

மூன்று மாதத்­திற்கு ஒரு­முறை அறிக்கை கிடைக்க வேண்டும், அறிக்கை கிடைக்­கின்­றது.  ஆனால் நிரா­க­ரிக்­கப்­பட்ட பெயர்­க­ளுக்­கான காரணம் எனக்கு கிடைக்­க­வில்லை. சட்­டமா அதிபர் நிய­மனம், பொலிஸ்மா அதிபர் நிய­மனம் என்­ப­வற்றில் சுயா­தீனம் இல்லை. அல்­லது சில தலை­யீ­டுகள் உள்­ளன. இவ்­வாறு நிய­மிக்­கப்­பட்ட நபர்கள் குறித்து நாட்டில் பாரிய பிரச்­சினை ஒன்று உள்­ளது.  இதில் அர­சி­ய­ல­மைப்பு மீறல் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. அதேபோல் அர­சி­ய­ல­மைப்பு பேரவையின் கடமை, பொறுப்புக்களை கையாள சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது, அந்த சட்டதிட்டங்கள் வர்த்தமானிக்கு விடப்பட்டு பாராளுமன்றத்தில் சபைப்படுத்த வேண்டும் என்ற காரணிகள் உள்ளன. இதனை செய்துள்ளதா என்பது பாரிய கேள்வியாகும். ஆகவே இதுவே அரசியலமைப்பு பேரவையில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளன என்பதற்கு நல்ல அடையாளமாகும்.  நியமித்த நீதியரசர் எவரையும் நான் இலக்குவைத்து எந்தக் கருத்தினையும் முன்வைக்கவில்லை. என்னையும் நீதிச் சேவையையும் முரண்படவைக்கும்  சூழ்ச்சியே இது. எனது கேள்வி நிராகரிக்கப்பட்ட வர்களுக்கான காரணம் என்ன என்பதேயாகும். இந்த கருத்தினை முன்வைத்தது உங்களை இலக்கு வைத்தோ அரசாங்கத்தை முன்வைத்தோ அல்ல. நாம் சரியான பாதையில் செல்லாவிட்டால் நெருக்கடியில் வீழ்வோம். ஆகவே எமது குழந்தையான 19 ஆம் திருத்தத்தை காப்பாற்ற வேண்டும்.  பாராளுமன்றம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதில் என்ன தீர்மானம் எடுக்குமோ அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்வேன் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.