புதிய அரபு கல்லூரிகளை நிறுவ தடை விதிக்கப்படும்

நாட்டில் புதி­தாக அர­புக்­கல்­லூ­ரிகள் நிறு­வப்­ப­டு­வதைத் தடை­செய்­வ­தற்கும், தற்­போது இயங்கிக் கொண்­டி­ருக்கும் அர­புக்­கல்­லூ­ரிகள் அனைத்­தையும் வக்பு சபையின் கீழ்ப் பதிவு செய்து அவற்றைக் கண்­கா­ணிப்­ப­தற்கும் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார  அமைச்சர் தீர்­மா­னித்­துள்ளார். அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இது தொடர்­பான அறி­வு­றுத்­தல்­களை வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர்…

புதிய நகல் யாப்பு என்ன சொல்கிறது?

வை. எல். எஸ். ஹமீட் நிபுணர்களின் அறிக்கை என்ற பெயரில் புதிய நகல் யாப்பு கடந்த 11/01/2019 அன்று அரசியலமைப்பு சபையில் வெளியிடப் பட்டிருக்கின்றது. இதிலுள்ள மிகவும் முக்கியமான அம்சம்       “இலங்கை சமஷ்டித் தன்மை" உள்ள நாடு என்பதாகும். ஆனால் “சமஷ்டி“ என்ற சொல் பாவிக்கப்படவில்லை. எனவே, தமிழ் மக்கள் மத்தியில் இது சமஷ்டி இல்லை என்றவொரு கருத்து விதைக்கப்படுகின்றது. மறுபுறம் “ஒற்றையாட்சி“ என்ற அர்த்தத்தைக் கொடுக்கக்கூடிய “ ஏக்கியராஜ்ய” என்ற சிங்களச் சொல் பாவிக்கப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் இது ஒற்றையாட்சிதான் என்று சிங்கள…

ஷண்முகா அபாயா விவகாரத்தில் கிழக்கு ஆளுநர் தலையிட வேண்டும்

'கிழக்கு மாகாணத்தின் சமூக நல்லிணக்கத்தையும் பல்லின சகவாழ்வையும் உத்தரவாதப்படுத்தும் வகையில் முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார ஆடை  தொடர்பான சர்ச்சையினை  நீதியாகத் தீர்த்து  வைப்பதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கிழக்கு மாகாண ஆளுநரிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளது. திருகோணமலை ஸ்ரீ ஷண்முகா  இந்துக்கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார ஆடை தொடர்பாக  எழுந்துள்ள சர்ச்சைகள்  தொடர்பிலேயே இந்தக் கோரிக்கையினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  விடுத்துள்ளது. இது தொடர்பில் கிழக்கு மாகாண…

தாஜுதீன், லசந்த கொலை விவகாரம்: ஜனாதிபதியும் கோத்தாவும் இணைந்தே வழக்குகளை தடுக்கும் நடவடிக்கையில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவும் இணைந்தே இன்று வழக்குகளை தடுக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.  யாருடைய வழக்கு எப்போது எடுக்க  வேண்டும், யாரை காப்பாற்ற வேண்டும் என்ற அனைத்துமே அவர்கள் கையில் தான் உள்ளன. இவர்கள்  இருவரும் நீதிமன்ற செயற்பாடுகளில் நேரடியாகத் தலையிடுகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க சபையில் குற்றம் சுமத்தினார். தாஜுதீன், லசந்த கொலைகளை மறைக்க கோத்தாபய ராஜபக் ஷ மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து உண்மைகளை மூடி மறைக்கும்…