அழிவின் விளிம்பில் கிண்ணியா பிரதேசம்
ஒரு மாத காலத்துக்குள் கிண்ணியா பிரதேச பண்ணையாளர்களுக்கு சொந்தமான 28 ஆயிரம் மாடுகள் உயிரிழந்துள்ள செய்தியானது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருப்பதோடு, கால்நடை பண்ணைகளின் எதிர்கால இருப்புக் குறித்த சந்தேகம் கால்நடை வளர்ப்பாளர்களை மாத்திரமன்றி ஒட்டுமொத்த கிண்ணியாவையும் அதிர வைத்திருக்கிறது.
2018 டிசம்பர் 1 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள்ளே இந்த மோசமான அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.