222 இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு

இந்த வருடத்தில் மாத்திரம் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்காக சென்ற 222 இலங்கைப்  பணியாளர்கள், வெளிநாடுகளில்  உயிரிழந்துள்ளனர். சவூதி அரேபியாவிலேயே அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப்  பணியகத்தின் பிரதிப்  பொது முகாமையாளர் மாதவ தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் மாத்திரம் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலும் இலங்கைப்  பணியாளர்கள் பலர்  உயிரிழந்துள்ளனர். கொலை, வாகன விபத்து, திடீர் மரணம், தற்கொலை போன்றவைகளால் இலங்கைப்  பணியாளர்களில்…

அம்பாறையில் கடும் மழை: அட்டாளைச்சேனையில் 125 குடும்பங்கள் இடம்பெயர்வு

அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழையினால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 125 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையினால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தாழ்ந்த குடியிருப்பு பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை (08) முதல் காற்றுடன் கூடிய கனத்த மழை பெய்து வருவதனால் குளங்கள், ஆறுகள், களப்புகள் என்பன வெள்ள நீர் நிறைந்து எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.…

பருவநிலைமாற்ற அச்சுறுத்தல்: விவாதத்துக்கு முட்டுக்கட்டை போட்ட உலக நாடுகள்

முந்தைய கணிப்புகளைவிட பூமியின் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதாக கூறிய சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு போலந்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் விவாதம் நடத்துவதற்கான முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவான ஐபிசிசி, கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில், பூமியின் வெப்பநிலை தற்போதைய நிலையைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமானால் ஏற்படுக்கூடிய விளைவுகளை பட்டியலிட்டிருந்தது. அது உலகமெங்கும் அதிர்வலைகளை…

ரணிலை பிரதமராக்குவதற்கு எமக்கு பெரும்பான்மை உண்டு

ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவர்  ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்குத்  தேவையான பெரும்பான்மை   எம்மிடம்  காணப்படுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு எமக்கு அவசியமில்லை என்று   ஐக்கிய தேசிய  கட்சியின்  பொதுச்செயலாளர்  அகிலவிராஜ்  காரியவசம் தெரிவித்தார். தமிழ்  தேசிய கூட்டமைப்பு  ஜனநாயகத்தை   பாதுகாக்க  தொடர்ந்து ஒத்துழைப்பு  வழங்கும் என்ற  நம்பிக்கை எமக்குண்டு. மக்கள் விடுதலை முன்னணியினர் எமக்கு ஒரு போதும் புறமுதுகு  காட்டவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க பாரிய ஒத்துழைப்பு வழங்கினார்கள். இருப்பினும்  ரணில்…