நீங்கள் பௌத்த மதத்துக்கு மிகுந்த மதிப்பளிக்கிறீர்கள்

''நீங்கள் எமக்கு சிறந்த தலை­மைத்­துவம் வழங்­கு­வ­துடன் பௌத்த சம­யத்­துக்கும் அப­ரி­மி­த­மான கௌர­வத்தை வழங்­கு­கி­றீர்கள்'' என அர­நா­யக்க பிர­தேச செய­லாளர் இஸட்.ஏ.எம். பைசலைப் பாராட்டி, குறித்த பிர­தேச செய­லக பெரும்­பான்மை இன ஊழி­யர்கள் முக­நூலில் பதி­வொன்றை வெளி­யிட்­டுள்­ளனர். அர­நா­யக்க பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்ற புத்­தாண்டை வர­வேற்கும் நிகழ்வைத் தொடர்ந்தே குறித்த நிகழ்வின் புகைப்­ப­டங்­க­ளுடன் இப் பதிவு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, '' நீங்கள் இனத்தால் முஸ்லிம். நாம்…

336 கோடி ரூபா ஹெரோயின் விவகாரம்: பிரதான சந்தேகநபர் பங்களாதேஷ் பெண்

இலங்கை முழு­வதும் ஹெரோயின் விநி­யோ­கிக்கும் பாது­காப்பு இல்­ல­மா­கவும் மத்­திய நிலை­ய­மா­கவும் செயற்­பட்­டு­வந்த வீடொன்றை சுற்­றி­வ­ளைத்து அங்­கி­ருந்து 336 கோடி ரூபா பெறு­ம­தி­யான 278 கிலோ ஹெரோயின் போதைப்­பொ­ருளை மீட்ட விவ­கா­ரத்தின் பின்­ன­ணியில் உள்ள சந்­தே­க­நபர் பங்­க­ளாதேஷ் பெண் ஒரு­வ­ரெனத் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் இடம்­பெறும் பொலிஸ் போதைப்­பொருள் தடுப்புப் பிரிவின் விசா­ர­ணை­களில் இந்த தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், பொலி­ஸாரின் சுற­றி­வ­ளைப்­புக்கு முன்­ன­ரேயே அந்தப்…

லக்ஷ்மன் கிரியெல்லவை பழிவாங்கும் நோக்கம் என்னிடமிருக்கவில்லை

அரச தொழில் முயற்சி மலைநாட்டு மரபுரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அமைச்சின்  கீழ் நான்கு நிறுவனங்கள் மாத்திரம் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கி பிரசுரிக்கப்பட்டமை அமைச்சர் மீது பழிவாங்கும் முயற்சியல்ல. அந்த எண்ணத்தோடு செயற்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அரச தொழில் முயற்சி, மலைநாட்டு மரபுரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் கீழ் பெயர் பலகைகளுக்கு மாத்திரம்…

ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்த பலர் பயணத்தை உறுதிப்படுத்தவில்லை

இந்த வரு­டத்­துக்­கான ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களில் பெரும்­பான்­மை­யினர் ஆர்­வ­மற்­ற­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஹஜ் கட­மை­யினை மீள கைய­ளிக்­கக்­கூ­டிய பதிவுக் கட்­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு 3000 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு கடி­தங்­களை அனுப்பி வைத்­தி­ருந்­தது. பய­ணத்தை உறுதி செய்­வ­தற்­கான இறுதித் தினம் ஜன­வரி 3 ஆம் திகதி (நேற்று) எனவும் தெரி­வித்­தி­ருந்­தது. ஆனால் நேற்­று­வரை சுமார் 700…