கிராமத்துக்கு செல்லும் சிறிகொத்தா

2015 ஆம் ஆண்டு பத­விக்கு வந்த அர­சாங்கம் ஆரம்­பித்த அபி­வி­ருத்­தித்­திட்­டங்­களின் பயன்­களை அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்கும் வேளையில் ஐ.தே கட்­சியும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியும் இணைந்து உரு­வாக்­கி­யுள்ள புதிய ஜன­நா­யக கூட்­ட­மைப்­புடன் ஒன்­றி­ணை­யு­மாறு அனைத்துத் தரப்­பி­ன­ருக்கும் அறை­கூவல் விடுப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். சிறி­கொத்­தவை கிரா­மத்­துக்குக் கொண்­டு­செல்லும் வேலைத்­திட்­டத்தை நேற்று பாணந்­துறை தொட­வத்த பகு­தியில் ஆரம்­பித்து அங்கு உரை­யாற்­று­கை­யிலே பிர­தமர் இவ்­வாறு…

எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேர் பலி

எத்­தி­யோப்­பி­யாவில் இருந்து கென்ய தலை­நகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்­தி­யோப்­பியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று விபத்தில் சிக்­கி­யது. இதில் பய­ணித்த 149 பய­ணிகள், 8 ஊழி­யர்கள் என மொத்தம் 157 பேரும் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டுச் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. மீட்புப் பணிகள் துரி­த­மாக இடம்பெற்று வரு­கின்ற நிலையில், உயிரிழந்தவர்­களின் குடும்பத்தினருக்கு அந்­நாட்டு ஜனா­தி­பதி அலுவ­லகம் அனுதா­பங்­களை தெரிவித்துள்ளது. கிழக்கு ஆபி­ரிக்க நாடு எத்­தி­யோப்யா. இந்த நாட்டின் தலை­நகர் அடிஸ் அபா­பாவில் இருந்து எத்­தி­யோப்­பியன்…

காஸாவில் அல்-கஸ்ஸாம் மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்

பலஸ்­தீ­னத்தின் ஹமாஸ் குழுவின் இரா­ணுவப் பிரி­வான அல்-­–கஸ்ஸாம் படை­ய­ணியின் மேற்குக் காஸா­வி­லுள்ள இரா­ணுவ காவ­ல­ரண்கள் மீது இஸ்­ரே­லிய ஜெட் விமா­னங்கள் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக கடந்த செவ்­வாய்­கி­ழமை சம்­ப­வத்தை நேரில்­கண்டோர் தெரி­வித்­தனர். இஸ்­ஸதீன் அல்-­–கஸ்ஸாம் படை­ய­ணியின் காவ­லரண் மீது ஜெட் விமா­னங்கள் குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக தெரி­வித்­துள்ள அவர்கள் உயிர்ச்­சே­தங்கள் தொடர்பில் எத­னையும் தெரி­விக்­க­வில்லை. எரியும் தன்மை கொண்ட பலூன்­களை இஸ்­ரே­லினுள் பறக்­க­விட்­ட­மைக்கு பதி­லடி கொடுக்கும்…

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பொதுபல சேனா கொழும்பில் துண்டு பிரசுரம்

ஞான­சாரர் செய்­யாத குற்­றத்­திற்­கா­கவே சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்­பதை மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் நோக்­கி­லேயே இந்த துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்றோம். கொலைக்­குற்றம் இழைத்தோ, ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டோ ஞான­சாரர் சிறை செல்­ல­வில்லை. மாறாக 30 வரு­ட­கால யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வரு­வ­தற்கு தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்ட புல­னாய்வு அதி­கா­ரி­களை சிறை­யி­ல­டைப்­ப­தற்கு எதி­ரா­கவே அவர் குரல் கொடுத்தார். எனவே நாட்டு மக்கள் அனை­வரும் ஞான­சார தேரரை மீட்கும்…