277 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் விவகாரம்: சீஷெல்ஸ் – பங்களாதேஷ் நாடுகளின் கடத்தல்காரர்கள் இருவர் குறித்து தகவல்

டிங்கி படகொன்றில் நாட்டுக்குள் எடுத்துவரப்பட்டுக்கொண்டிருந்த போது கைப்பற்றப்பட்ட  277 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் சர்வதேச கடற்பரப்பில் வைத்து வர்த்தக கப்பல் ஒன்றிலிருந்து ட்ரோலர் படகுக்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்கள் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.  சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும், அந்த சந்தேக நபருடன் சீஷெல்ஸ்  மற்றும் பங்களாதேஷ் கடத்தற்காரர்கள் இருவர் தொலைபேசி ஊடாக…

சூடான் ஹெலிகொப்டர் விபத்தில் 5 அதிகாரிகள் பலி

சூடான் நாட்டின் அல் கடாரிப் மாநிலத்தில் தொலைத் தொடர்பு கோபுரம் மீது ஹெலிகொப்டர் மோதிய விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சூடான் நாட்டின் கிழக்கு பகுதி வழியாக நேற்று அரசு அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் அல் கடாரிப் மாநிலத்தில் உள்ள வயல்வெளியின் மீது பறந்தபோது அங்கிருந்த ஒரு தொலைத் தொடர்பு கோபுரம் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த ஹெலிகொப்டர் தீப் பிடித்து எரிந்தது. எத்தியோப்பியா நாட்டின் எல்லையோரத்தில் நடந்த இந்த விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர்…

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம் வைரங்களால் ஜொலித்தது உண்மையா?

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் வெளிப்புறம் முழுவதும் வைரங்களால் ஜொலிக்கும் புகைப்படம் ஒன்று சில நாட்களுக்கு முன்னால் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எமிரேட்ஸ் விமான நிறுவனம் தங்கள் விமானத்தின் வித்தியாசமான புகைப்படம் ஒன்றைத் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில் ஆயிரக்கணக்கான வைரக் கற்கள் பதிக்கப்பட்டு, எமிரேட்ஸ் விமானத்தின் வெளிப்புறம் ஜொலித்தது.…

மைத்திரி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்

மஹிந்­தவின் அர­சாங்­கத்­திற்கு பெரும்­பான்­மையை நிரூ­பிக்க மந்­தி­ரி­க­ளுக்கு கோடிக்­க­ணக்கில் விலை பேசப்­பட்­டது. விலையை அதி­க­ரித்­த­மையே மஹிந்­த­வினால் பெரும்­பான்­மையை நிரூ­பிக்க முடி­யாது போனது என்று கூறி­யதன் மூலம்  தான் குற்­ற­வாளி என்­ப­தையும் ஒப்­புக்­கொண்­ட­துடன், மஹிந்த ராஜபக் ஷவையும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டிக்கொடுத்துவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். தமது குற்றங்களை இப்போதாவது ஒப்புக்கொண்டு மைத்திரியும் மஹிந்தவும் நல்லாட்சிக்கு இடமளிக்க வேண்டும்…